Pages

சவமாயினும் சாகாதிருப்போம் - பழைய எழுத்து - கவிதை (15)

எரித்திடும் சூரியனும் எனைப் பார்த்து
சிரித்திடும் போது யார் என்ன செய்ய முடியும் என்னை?

சித்திரச் சிறகுகள்
சித்திரைப் பூக்கள்
பத்திரப் படுத்தினும் பயன் தாரா

வாடிடும் பூக்கள்
தேடிடும் போது வண்டுகள் வாரா

சூடிடும் போது
சுவைத்திட வேண்டும்..
சிறை வைத்திட்டால்.. சரிப்படாது.

அத்து மீறி நுழைந்து என் அறிவை அகழ்ந்தவள் நீ..
பத்து மாதம் சுமந்தவளையும் மறக்கச் செய்யும் அளவிற்கு உன்னிடம் என்ன?

சிந்தனைத் தீற்றல்கள் என்னுள் தூரிடும் போது
சிறை பட்ட வானவில் நீ.

எண்ணக் கீற்றுக்கள்.. உன் எண்ணக் கீற்றுக்கள் வேயப்பட்ட வீட்டில் வாழும் நான்..
திண்ணைக் காற்றாய் உன் வரவைப் பார்த்து..

சின்னக் கனவுகள் என்னுள் சிரித்திடும் போது
வண்ணக் கோலங்கள் போடும் புதிய வரவுகள்

ஒவ்வாது ஒன்று இருப்பினும்
ஒப்புக் கொள்வேன் உன்னிடம்

பொய்யே ஆயினும்
புகழ் பெறுவேன் உன்னிடம்

மருந்தினும் இனிய
உன் கோபம் தனிய
சாபம் தருவாய்.. காலம் முழுதும் என் காலடியில் நீ என.

பாவம் பார்த்திட்டு
பழி தீராமல்
பழியாய்க் கிடப்பேன் உன் காலடியில்

சாத்திரம் பேசும்
ஆத்திரம் கொள்ளும்
தரித்திரம் எனத் திட்டும் சமூகம்

சரித்திரம் எழுத நாம்
எண்ணித் துணிந்திட்ட பின்
யாரால் என்ன செய்ய இயலும்?
சவமாயினும் சாகாதிருப்போம்.

No comments: