Pages

நமக்கு என்னதான் தேவை?

இந்தியாவை விட்டு வெளியேறி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்றாலும், இங்கே நான் காணும் விஷயங்கள் நம் நாட்டில் என்ன குறைபாடு என்பதை தெளிவாக விளக்குகின்றன. இன்னிக்கு சாயங்காலம் என்னுடைய நண்பர்கள் இருவருடன் காபி குடிக்க வெளியே சென்று இருந்தேன்.

இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நானும் அந்த நண்பரும் எப்போது சந்தித்தாலும் எங்களுடைய பேச்சு ஓரிடத்தில் வந்து முடியும். அது என்னன்னா, இந்தியாவிற்கு என்ன தேவை? நம்மால் என்ன செய்ய இயலும்? என்னுடைய நண்பர் இதில் நிறைய ஆராய்ச்சி செய்பவர். அவர் சாப்பிடும், தூங்கும், சம்பாதிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவருக்கு இதுதான் வேலை. நாங்கள் இங்கே இருந்தாலும் இன்னும் சில வருடங்களில் நமது நாட்டிற்குத் திரும்பி ஏதாவது செய்து சமுதாய முன்னேற்றத்தில் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..

விஷயத்திற்கு வருகிறேன்....அப்படி இன்று காபி கடைக்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சும்மா இதே மொக்கை தான் (ஆனால் எனக்கு அந்த மொக்கையில் ஒரு நம்பிக்கை உண்டு). அப்போது எதிரில் ஒரு கார் இன்னொன்று மீது மோதியது. என்னுடைய நண்பர் உடன் சொன்னார்...ராம்கி...இப்போது மணி சரியாக 7.58. இன்னும் மூன்று நிமிடங்களில் இங்கே போலீஸ் கார் வரும் பார்...என்றார். அதே போன்று சரியாக இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டது. அந்த அளவிற்கு இங்கு இருக்கும் காவல் துறையை நம்பலாம். இதக்காட்டி என்னோட நண்பர் சொன்னார்...இந்த நம்ம ஊர்ல நடக்கவே நடக்காது ராம்கி அப்டின்னார். நம்ம ஊர்ல என்ன நடக்குதுன்னு பாத்தா....இன்னும் நம்ம போலீஸ்காரங்க காசு வாங்கிட்டு விட்டுடறாங்க....இதுக்கு என்ன பன்றதுன்னு யோசிச்சுட்டே வீட்டுக்கு திரும்பி வந்தோம்...

சமுதாய முன்னேற்றத்துக்கு என்ன தேவை அப்டிங்கறதுல...என்னோட அபிப்ராயம் என்னன்னா...நம்ம சொசைட்டில படிப்பு கொஞ்சம் அதிகமா சொல்லி குடுக்கனும்... எல்லா பசங்களையும் படிக்க வெக்கனும்... படிக்க வெச்சா போதும்... மத்தது எல்லாம் தானா நடக்கும்....அப்டிங்கறது. என்னோட நண்பர் சொல்லுவார்...இது மட்டும் போதாது ராம்கி..இன்னும் நிறைய ப்ரச்னை இருக்கு,.. நான் நிறைய யோசிச்சுட்டு விட்டுட்டேன் அப்டிங்கறார். ஆனா எனக்கு அதுல நம்பிக்கை இல்ல... என்ன பொறுத்த வரைக்கும்..ஏதாவது ஒரு முயற்சி பன்னிகிட்டே இருக்கனும். அப்புறம் சிந்திச்சுகிட்டே இருக்கனும்... ஏதாவது ஒருநாள் அது பலிக்கும் அப்டிங்கற நம்பிக்கை இருக்கு.

இப்போதைக்கு நான் என்ன நினைக்கறேன்னா, கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு அங்க போயி நான் நினைக்கறது எல்லாத்தயும் செய்யனும். பாக்கலாம்... காலம் கண்டிப்பா பதில் சொல்லும்.

உங்களுக்கு எதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க...இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கு தெரிய வந்தா...கண்டிப்பா முயற்சி செய்வாங்க. உங்க ஐடியாவ மத்தவங்களோட பகிர்ந்து கொண்டே இருங்க. கண்டிப்பா ஒருநாள் முயற்சி பலிக்கும்.

மீண்டும் சந்திப்போம்.
MICROSOFT SURFACE COMPUTING....
யப்பா.....எனக்கு தல சுத்துது....


கணிணி தொழில்நுட்பம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.



Microsoft Surface Computing நீங்கள் இந்த தளத்தில் மேலும் சில விவரங்கள் மற்றும் வீடியோக்களை காணலாம்.
GOOGLE - தவிர்க்க முடியாதது.

GOOGLE - இது தவிர்க்க முடியாத ஒரு வார்த்தை ஆகிவிட்டது. காலையில் எழுந்தவுடன் செய்திகள் படிக்க GOOGLE, பிறகு GOOGLE மெயில், காலேஜுக்கு சென்றால் GOOGLE ஸ்காலர், பொருட்கள் வாங்க GOOGLE செக்அவுட், இலவச புத்தகம் படிக்க GOOGLE புக்ஸ் - இது எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கெடுத்தாலும் GOOGLE SEARCH (சமையல் குறிப்பு உட்பட; இதவிட கொடும என்னன்னா...... என்னோட நண்பன் ஒருத்தன்....வேலை இல்லாம வெட்டியா இருக்கும் போது என்ன செய்யறது....வெட்டி பொழுது எப்டி கழிக்கறது...அப்டின்னு தேடுவான்). நான் சற்றே யோசித்து பார்க்கையில் GOOGLE நம் வாழ்க்கையை ஆக்கிரமித்து இருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த பதிவிற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சமீபத்தில் நான் சியாட்டில் (Seattle, WA) சென்றிருந்த போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அன்பர்களை சந்தித்தேன். என்னைப் பொறுத்த வரை கணினி மென்பொருள் என்றால் மைக்ரோசாஃப்ட் தான் தல மாதிரி....மத்தவங்க எல்லாம் அப்புறம் தான்...என்று ஒரு நினைப்பு. அந்த அன்பர்களிடம் பேசிய பிறகு ஒன்று மட்டும் புரிந்தது. கூகிள் என்னைப்போன்ற சாதாரண பயணாளரிடம் மட்டுமல்லாது, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனத்தில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த, மைக்ரோசாஃப்ட் விசுவாசிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது ஒன்றும் சாதாரணமான விஷயமில்லை.

ஒரு சீனியர் அதிகாரியிடம் பேசும் போது அவர் இப்படிச் சொன்னார்: "மைக்ரோசாஃப்ட் ஒரு காலத்துல நம்பர் ஒன் கம்பெனியா இருந்தது"--- இதைக்கேட்டவுடன் என் பார்வை மாற, புருவம் உயர, உடன் சுதாரித்துக் கொண்டு அவர் பேச்சை மாற்றினார் --- "அதுக்காக இன்னிக்கு நம்பர் ஒன் இல்லேன்னு சொல்ல முடியாது; இன்னும் சில விஷயங்கள்ல நாங்கதான் நம்பர் ஒன்" - அப்டின்னார்...

இவர் அப்டின்னா...இன்னொருத்தர் இப்டி --- எப்டின்னு கேட்டா, "தம்பி..வாங்க நம்ம GOOGLE SEARCH பன்னலாம்" --- அப்டின்னு சொன்னார். நான் உடனே...என்னங்க சார், மைக்ரோசாஃப்ட்ல இருக்கீங்க; GOOGLE SEARCH பன்னலாம்னு சொல்றீங்களே? LIVE SEARCH பன்ன மாட்டீங்களா? அப்டின்னு நான் கேட்க...உடனே அவர்: தாராளமா பன்னலாம்...அதுக்கென்ன...ஆனா உனக்கு வேண்டிய பக்கம் மட்டும் மொதல்ல கெடைக்காது....பரவால்லயா? அப்டின்னார்.....

இது நிஜமாவே பெரிய விஷயம். எங்க நண்பர்கள் மத்தியில் ஒரு ப்ரபலமான வாக்கியம் உண்டு; அத சொல்லி இந்த பதிவ இத்தோட முடிச்சுக்கறேன்.....

அது....GOOGLE தெய்வோ பவ...!
லாலூ.... The MAN


லாலூ ப்ரசாத் யாதவ் பற்றி என்னை போன்றவர்களுக்கு நினைவில் இருப்பதெல்லாம் அவருடைய காமடி கலந்த கலக்கல் அறிக்கைகளும், தடியைக் காட்டி அடிப்பது போல் இருந்த தினமலர் புகைப்படம் மற்றும் உலகப் புகழ் பெற்ற மாட்டுத்தீவன ஊழல் வழக்கும்தான். ஆனால் இன்று அவர் ஒரு அசாதாரணமான சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இந்திய இரயில்வே மஞ்சள் கடுதாசி கொடுக்க வேண்டிய நிலையிலிருந்து ஒரு லாபகரமான இயக்கமாக மாறியிருக்கிறது. இதற்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்ல இயலாது; ஆனால் அவரும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. சரி விஷயத்துக்கு வர்றேன்...இன்று காலை ஒரு தளத்தில் இவரைப்பற்றி படிக்க நேர்ந்தது (சுவாரஸ்யமாக இருந்தது); அவை உங்களுக்காக....

http://en.wikipedia.org/wiki/Laloo_Prasad_Yadav
http://blogfanatic.wordpress.com/2006/09/18/lalu-at-iima/

http://specials.rediff.com/money/2006/sep/18sld1.htm?q=tp&file=.htm

http://exim.indiamart.com/budget-2005-06/rail-budget2005-06/rail-budget-05-06-highlights.html