Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
அறிவு தரும் நூல்கள் (கண்ணதாசனின் சுய சரிதையிலிருந்து)
கவியரசு கண்ணதாசனின் சுய சரிதை, வனவாசம் நூலிலிருந்து...
(இதில் கண்ணதாசன் 'அவன்' என்று தன்னைத் தான் குறிப்பிடுகிறார்)
அந்த நேரத்தில் அவன் அவர்களைப் பற்றி ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டே தான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள். 'கொந்தளிக்கும் கடல்', 'குமுறும் எரிமலை' என்றெல்லாம் படங்களிலே வசனங்கள் வரும். அவை வேறெவையுமல்ல! பல பெண்களுடைய இருதயங்களே! 'தமிழ்ப் பண்பாடு! தமிழ்ப் பண்பாடு!' என்ற கூக்குரல்கள் மேடையிலே கேட்கும். தன்பாடு தீரும் வரைக்கும் தான் அந்தப் பண்பாடு எல்லாம்!
இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே அதைத்தான் செய்கிறார் - என்று அந்தச் செய்திகள் கூறின! கலா ரசிகரும், இன்றைய எம். எல். ஏ ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான்.
அது இது:
ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்பர்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிறது. பதினொன்று! கோவிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு. அதற்குள் தலைவர் ஏழெட்டு முறை வெற்றிலை போட்டுத் துப்பி விட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது. கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். 'ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா?' ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சர்யம்! அந்த உடைக்குள் ஓர் அழகு மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச்சன்னதியின் மடமாகிறது. பொழுது விடியும் முன்னே பூவை திரும்புகிறாள். ஓர் இரவு, இன்ப இரவாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள், இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? "சுந்தரகோஷ்" என்பதாகும். 'வேலைக்காரி' படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி 'சுந்தரகோஷ்' என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.
(குறிப்பு: 'வேலைக்காரி' நாடகம் அறிஞர் அண்ணா எழுதியது என்பதை நினைவில் கொள்க)
...
கழகத்திற்கென்றே (திமுக) ஒரு தனித்தமிழ் நடை உண்டு. அண்ணாத்துரையின் நடயைப் பின்பற்றி, எல்லோருமே ஒரே மாதிரி 'துள்ளு தமிழ்' எழுதுவார்கள். எழுதுவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது. கதை ஒன்றில் தொடங்கி, பிறகு அதைக் கட்டுரையாக விரிக்கும் அலுத்துப் போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.
அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை! காரணம், அந்த நோய் தன்னையும் பற்றிக் கொள்ளக் கூடாது என்பதுதான்.
தன்னுடைய எழுத்துக்களை அவன் படிபதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு (ஆம்! இன்றைய முதல்வர்தான்) அசாத்தியக் கோபம் வரும்.
ஒருநாள் அவர், புதிதாக வெளியாகியிருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு " இதெல்லாம் படியய்யா" என்றார். ஒரு புத்தகத்தை விரித்தான்.
நல்ல பண்பாடு உள்ள கதை அது! 'வாழ முடியாதவர்கள்' என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. கதையென்ன தெரியுமா? படிக்காதவர்களும் படித்துப் பயனடைய வேண்டிய கதையல்லவா! விவரமாகவே சொல்கிறேன்.
மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு. மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக் கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள். கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள் தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்குமவள், திருமணத்திற்காகக் காத்துக் கிடக்கிறாள். இரவுகள் வந்து போகின்றன, திருமணம் வரவில்லை. ஒவ்வோர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயிலுகின்றனர். அவளோ கல்யாணமாகாதவள்; அப்பனோ மனைவியை இழந்தவன். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறான். கதாசிரியர் கதையை முடிக்கிறார்.
மேலை நாட்டு ஆபாசக் களஞ்சியங்களான; 'மாபசான்' கூட்டத்தினருக்குக் கூட, இத்தகைய கற்பனை தோன்றியதில்லை.
அவர் எந்த நோக்கத்தோடு இந்தக் கதையை எழுதினார்? நாட்டின் வறுமை நிலையைப் படம் பிடித்துக் காட்ட என்பது அவரது வாதம்.
...
பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளி நாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதை எழுதும் போது, பண்பாட்டோடு எழுதினார்கள்.
ஆனால், மகளைக் கெடுத்த தந்தையை, வறுமைக்கு உதாரணமாக்கினார் 'முற்போக்கு'க் கதாசிரியர். அவன் அந்தப் புத்தகத்தை முழுவதையும் படித்து முடித்தான். தமிழ்ச் சமுதாயத்தின் எதிர் காலத்தைப் பற்றிய பயம், அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து 'குமரிக் கோட்டம்' 'ரோமாபுரி ராணிகள்' 'கபோதிபுரக் காதல்' முதலிய நூல்களைப் படித்தான்.
அந்த நூல்களில், பலரிடம் கெட்ட ஒருத்தியை பளபளப்பாக வருணித்திருந்தார் கட்சியின் மூலத் தலைவர். சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்போர், மேலெழ வேண்டும், என்ற நோக்கத்திற்கு, இவை எவ்வகையில் துணை புரியும்? எழுதுகின்றவனின் வெறித்தனத்தை இவையுணர்த்துமேயல்லாது, நாட்டுக்கு என்ன பயன் தரும்? பொது இடத்திலோ, குல மகளிர் மத்தியிலோ வைக்கக் கூடாத அளவுக்குப் பகுத்தறிவு வீரர்கள் புத்தகம் எழுதுவானேன்?
மாளிகையைப் பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பது போல், ஒளி உலகைக் காணவந்த சீர்திருத்தவாதிகள், இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதினார்கள். 'ஆபாசம்' என்ற கணக்கில் நான் சேர்க்க வரவில்லை. அவை என்ன பயன் தரும் என்பதுதான் என் கேள்வி.
அன்றிலிருந்தே கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதும் கதை கட்டுரைகளை அவன் படிப்பதில்லை.
ஓடிப்போனவர்கள் கதையும், உருப்படாதவள் வாழ்க்கைச் சித்திரமும்; ஆட்டங்கண்ட கிழவனுக்கெழுந்த ஆசையும், அந்தி நேரத்து சுந்தரியின் தளுக்கும் நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் விற்பனையாயின. இளைஞர்களை அந்த மயக்கம் பற்றியது உண்மை. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை வெறுத்தொதுக்கி அவற்றை இளைஞர்கள் விரும்பிப் படித்தார்கள்.
நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின், அழிவு காலம் அதிலேதான் தொடங்கிற்று என்றும் சொல்லலாம். கட்சியின் வளர்ச்சியை அவன் கவனிக்க ஆரம்பித்தான். ஏராளமானவர்கள் கையில் கழகப் புத்தகங்கள் தவழ ஆரம்பித்தன. அடிப்படை அமைப்பில்லாத கட்சி, நல்ல வளர்ச்சியினைப் பெறத் தொடங்கிற்று.
இந்தக் கட்டுரை கிட்டத்தட்ட 1965ம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது. இதில் அரசியல் சாயங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட தமிழகத்தின் இன்றைய நிலை புரியும். மக்கள் அக்பர், ஔரங்கசீப் வரலாறுகளை ஒதுக்கிவிட்டு சமீபத்திய வரலாறுகளைப் படித்தால் உதவியாக இருக்கும் போலிருக்கிறது.
(இதில் கண்ணதாசன் 'அவன்' என்று தன்னைத் தான் குறிப்பிடுகிறார்)
அந்த நேரத்தில் அவன் அவர்களைப் பற்றி ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டே தான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள். 'கொந்தளிக்கும் கடல்', 'குமுறும் எரிமலை' என்றெல்லாம் படங்களிலே வசனங்கள் வரும். அவை வேறெவையுமல்ல! பல பெண்களுடைய இருதயங்களே! 'தமிழ்ப் பண்பாடு! தமிழ்ப் பண்பாடு!' என்ற கூக்குரல்கள் மேடையிலே கேட்கும். தன்பாடு தீரும் வரைக்கும் தான் அந்தப் பண்பாடு எல்லாம்!
இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே அதைத்தான் செய்கிறார் - என்று அந்தச் செய்திகள் கூறின! கலா ரசிகரும், இன்றைய எம். எல். ஏ ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான்.
அது இது:
ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்பர்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிறது. பதினொன்று! கோவிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு. அதற்குள் தலைவர் ஏழெட்டு முறை வெற்றிலை போட்டுத் துப்பி விட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது. கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். 'ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா?' ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சர்யம்! அந்த உடைக்குள் ஓர் அழகு மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச்சன்னதியின் மடமாகிறது. பொழுது விடியும் முன்னே பூவை திரும்புகிறாள். ஓர் இரவு, இன்ப இரவாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள், இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? "சுந்தரகோஷ்" என்பதாகும். 'வேலைக்காரி' படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி 'சுந்தரகோஷ்' என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.
(குறிப்பு: 'வேலைக்காரி' நாடகம் அறிஞர் அண்ணா எழுதியது என்பதை நினைவில் கொள்க)
...
கழகத்திற்கென்றே (திமுக) ஒரு தனித்தமிழ் நடை உண்டு. அண்ணாத்துரையின் நடயைப் பின்பற்றி, எல்லோருமே ஒரே மாதிரி 'துள்ளு தமிழ்' எழுதுவார்கள். எழுதுவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது. கதை ஒன்றில் தொடங்கி, பிறகு அதைக் கட்டுரையாக விரிக்கும் அலுத்துப் போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.
அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை! காரணம், அந்த நோய் தன்னையும் பற்றிக் கொள்ளக் கூடாது என்பதுதான்.
தன்னுடைய எழுத்துக்களை அவன் படிபதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு (ஆம்! இன்றைய முதல்வர்தான்) அசாத்தியக் கோபம் வரும்.
ஒருநாள் அவர், புதிதாக வெளியாகியிருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு " இதெல்லாம் படியய்யா" என்றார். ஒரு புத்தகத்தை விரித்தான்.
நல்ல பண்பாடு உள்ள கதை அது! 'வாழ முடியாதவர்கள்' என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. கதையென்ன தெரியுமா? படிக்காதவர்களும் படித்துப் பயனடைய வேண்டிய கதையல்லவா! விவரமாகவே சொல்கிறேன்.
மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு. மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக் கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள். கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள் தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்குமவள், திருமணத்திற்காகக் காத்துக் கிடக்கிறாள். இரவுகள் வந்து போகின்றன, திருமணம் வரவில்லை. ஒவ்வோர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயிலுகின்றனர். அவளோ கல்யாணமாகாதவள்; அப்பனோ மனைவியை இழந்தவன். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறான். கதாசிரியர் கதையை முடிக்கிறார்.
மேலை நாட்டு ஆபாசக் களஞ்சியங்களான; 'மாபசான்' கூட்டத்தினருக்குக் கூட, இத்தகைய கற்பனை தோன்றியதில்லை.
அவர் எந்த நோக்கத்தோடு இந்தக் கதையை எழுதினார்? நாட்டின் வறுமை நிலையைப் படம் பிடித்துக் காட்ட என்பது அவரது வாதம்.
...
பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளி நாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதை எழுதும் போது, பண்பாட்டோடு எழுதினார்கள்.
ஆனால், மகளைக் கெடுத்த தந்தையை, வறுமைக்கு உதாரணமாக்கினார் 'முற்போக்கு'க் கதாசிரியர். அவன் அந்தப் புத்தகத்தை முழுவதையும் படித்து முடித்தான். தமிழ்ச் சமுதாயத்தின் எதிர் காலத்தைப் பற்றிய பயம், அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து 'குமரிக் கோட்டம்' 'ரோமாபுரி ராணிகள்' 'கபோதிபுரக் காதல்' முதலிய நூல்களைப் படித்தான்.
அந்த நூல்களில், பலரிடம் கெட்ட ஒருத்தியை பளபளப்பாக வருணித்திருந்தார் கட்சியின் மூலத் தலைவர். சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்போர், மேலெழ வேண்டும், என்ற நோக்கத்திற்கு, இவை எவ்வகையில் துணை புரியும்? எழுதுகின்றவனின் வெறித்தனத்தை இவையுணர்த்துமேயல்லாது, நாட்டுக்கு என்ன பயன் தரும்? பொது இடத்திலோ, குல மகளிர் மத்தியிலோ வைக்கக் கூடாத அளவுக்குப் பகுத்தறிவு வீரர்கள் புத்தகம் எழுதுவானேன்?
மாளிகையைப் பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பது போல், ஒளி உலகைக் காணவந்த சீர்திருத்தவாதிகள், இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதினார்கள். 'ஆபாசம்' என்ற கணக்கில் நான் சேர்க்க வரவில்லை. அவை என்ன பயன் தரும் என்பதுதான் என் கேள்வி.
அன்றிலிருந்தே கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதும் கதை கட்டுரைகளை அவன் படிப்பதில்லை.
ஓடிப்போனவர்கள் கதையும், உருப்படாதவள் வாழ்க்கைச் சித்திரமும்; ஆட்டங்கண்ட கிழவனுக்கெழுந்த ஆசையும், அந்தி நேரத்து சுந்தரியின் தளுக்கும் நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் விற்பனையாயின. இளைஞர்களை அந்த மயக்கம் பற்றியது உண்மை. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை வெறுத்தொதுக்கி அவற்றை இளைஞர்கள் விரும்பிப் படித்தார்கள்.
நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின், அழிவு காலம் அதிலேதான் தொடங்கிற்று என்றும் சொல்லலாம். கட்சியின் வளர்ச்சியை அவன் கவனிக்க ஆரம்பித்தான். ஏராளமானவர்கள் கையில் கழகப் புத்தகங்கள் தவழ ஆரம்பித்தன. அடிப்படை அமைப்பில்லாத கட்சி, நல்ல வளர்ச்சியினைப் பெறத் தொடங்கிற்று.
இந்தக் கட்டுரை கிட்டத்தட்ட 1965ம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது. இதில் அரசியல் சாயங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட தமிழகத்தின் இன்றைய நிலை புரியும். மக்கள் அக்பர், ஔரங்கசீப் வரலாறுகளை ஒதுக்கிவிட்டு சமீபத்திய வரலாறுகளைப் படித்தால் உதவியாக இருக்கும் போலிருக்கிறது.
Crouching Tiger
Original Article from http://week.manoramaonline.com
Prabhakaran still has enough grit to continue the fight
By Anita Pratap
LTTE leader Velupillai Prabhakaran is many things to many people-national leader, freedom fighter, revolutionary, guerrilla, killer, saviour, tyrant, visionary and terrorist. Lionised or demonised, depending on their standpoint.
I cannot know what is going on in Prabhakaran's head, but I am certain he is neither frightened nor desperate. He is not afraid of death. He has been courting it since he was 17. He is an indefatigable warrior, one who is philosophically detached from all things tactical. Yet, paradoxically, in achieving his strategic goal of Tamil Eelam, he displays an unwavering attachment.
I doubt whether these military setbacks will discourage, undermine or erode his confidence or commitment to his goal. He is very clear in his mind-he is fighting to liberate his people. For that principle he lives. For that principle he fights. And for that principle he is willing to die. Victories and defeats come and go. Territories are lost and won. Cadres die, comrades betray. But to his dying breath, he will remain true to Eelam.
In the 30 years that I have written about this conflict, never has the LTTE been so alone and friendless in its struggle. Prabhakaran is a victim of a combination of his actions and international circumstances. By assassinating Rajiv Gandhi, he made an implacable foe of India. And after 9/11, George Bush's war on terror created zero tolerance for terrorism around the world. It also blurred distinctions between terrorist organisations and national liberation groups.
There is no liberation army in the world that has not faced state terror and in turn used terror as a tactic to pursue its nationalist goals. Netaji Subhas Chandra Bose and Bhagat Singh-Prabhakaran considers them heroes-were designated terrorists by the British rulers of India. Until recently, Nelson Mandela was on the list of terrorists.
The LTTE is banned as a terrorist organisation in some 30 countries. That has given the Sri Lankan government global sanction to destroy the LTTE. But in doing so, the international community has allowed a disaster of epic proportion to unfold. This is not an LTTE, but a Tamil tragedy. Nowhere in the world has a government been continuously bombing its own civilians for over a year. This is a crime Israeli, American and NATO forces are not guilty of.
A designated No Fire Zone has turned into a vast death chamber for Tamil civilians, trapped between the LTTE and the attacking army. Nowhere else in the world is a war being waged without outsiders and independent witnesses, not in Iraq, not in Afghanistan, not in Gaza. But in Sri Lanka, the media and NGOs have been banned from the war zone, and the International Committee of the Red Cross, among the lone relief workers there, has described the civilian situation as catastrophic. A quarter of a million Tamils uprooted. Tens of thousands imprisoned in refugee camps. Thousands killed and maimed.
Those who say the Tamils deserve this fate because they supported Prabhakaran are heartless and blind. There are many who support him and many who don't. Either way, they don't have the power to influence him. Is it then justifiable to punish ordinary civilians? Is it fair to kill Americans for the sin that Bush committed in Iraq, even though they not only elected, but re-elected him? The Sri Lankan army cannot be faulted for trying to destroy the LTTE. But the Sri Lankan government cannot condone or justify destroying Tamils and their homeland in the process.
But this only strengthens Prabhakaran. Politicians and bureaucrats don't realise that the LTTE welcomes war. It swells its ranks, reaffirms its raison d'étre, it produces more emotional support for a separate state. From the previous wars that I have witnessed (journalists could manage to get in then), LTTE cadres love fighting. During peacetime, LTTE guerrillas are disciplined and restrained. In battle, there is a complete makeover. They are highly excitable, almost gleeful.
The LTTE has been written off many times before. Prabhakaran has been 'killed' or 'nearly killed' many times in the past. If the army ever reaches his bunker, he will swallow his cyanide and the legend of Prabhakaran will probably attain mythical proportions. Lacking independent assessments, journalists repeat Sri Lankan claims that this is the end game, this is Prabhakaran's last stand.
Judging from the past, I doubt it. Sure, the Sri Lankan army will wrest the last piece of land from Prabhakaran's grip. But that doesn't mean the end of the LTTE. They will revert to what they are best at-guerrilla warfare, striking when least expected. As armies before have realised, conquering territory is one thing, holding onto it opens a Pandora's box of problems.
Prabhakaran has lost wars before. He had created a de facto Tamil Eelam with its own army, police, courts and taxation system not once, but several times in the past-only to have it all smashed and wiped out. And he had to start all over again. At 54, Prabhakaran still has enough grit to start again and continue for another 20 years.
In the meantime, he will be watching the Indian elections closely to see which dispensation takes charge in New Delhi. He will be watching to see if there is a popular upsurge of support in Tamil Nadu for the plight of Tamils across the Palk Strait. He will be watching the disastrous impact of war on Sri Lanka's economy. He will be watching Hillary Clinton who said there should be a 'nuanced' approach to dealing with terrorism. He will be watching President Barack Obama who rightly analysed that conflicts stem from our perception of 'the other'.
Today, Prabhakaran's situation looks dire. But the wheels of fortune are not static. Things change. America has changed. The world is changing. Capitalism is discredited. Socialism sneaks in from the backdoor. Big banks have gone bust. Misery replaces prosperity in headlines. As new winds blow away many certitudes of the recent past, new opportunities, alignments and paradigms take their place on the world stage. And they will inexorably weave their impact in remote corners of faraway Sri Lanka, this beautiful emerald teardrop island that awaits its tryst with peace.
Prabhakaran still has enough grit to continue the fight
By Anita Pratap
LTTE leader Velupillai Prabhakaran is many things to many people-national leader, freedom fighter, revolutionary, guerrilla, killer, saviour, tyrant, visionary and terrorist. Lionised or demonised, depending on their standpoint.
I cannot know what is going on in Prabhakaran's head, but I am certain he is neither frightened nor desperate. He is not afraid of death. He has been courting it since he was 17. He is an indefatigable warrior, one who is philosophically detached from all things tactical. Yet, paradoxically, in achieving his strategic goal of Tamil Eelam, he displays an unwavering attachment.
I doubt whether these military setbacks will discourage, undermine or erode his confidence or commitment to his goal. He is very clear in his mind-he is fighting to liberate his people. For that principle he lives. For that principle he fights. And for that principle he is willing to die. Victories and defeats come and go. Territories are lost and won. Cadres die, comrades betray. But to his dying breath, he will remain true to Eelam.
In the 30 years that I have written about this conflict, never has the LTTE been so alone and friendless in its struggle. Prabhakaran is a victim of a combination of his actions and international circumstances. By assassinating Rajiv Gandhi, he made an implacable foe of India. And after 9/11, George Bush's war on terror created zero tolerance for terrorism around the world. It also blurred distinctions between terrorist organisations and national liberation groups.
There is no liberation army in the world that has not faced state terror and in turn used terror as a tactic to pursue its nationalist goals. Netaji Subhas Chandra Bose and Bhagat Singh-Prabhakaran considers them heroes-were designated terrorists by the British rulers of India. Until recently, Nelson Mandela was on the list of terrorists.
The LTTE is banned as a terrorist organisation in some 30 countries. That has given the Sri Lankan government global sanction to destroy the LTTE. But in doing so, the international community has allowed a disaster of epic proportion to unfold. This is not an LTTE, but a Tamil tragedy. Nowhere in the world has a government been continuously bombing its own civilians for over a year. This is a crime Israeli, American and NATO forces are not guilty of.
A designated No Fire Zone has turned into a vast death chamber for Tamil civilians, trapped between the LTTE and the attacking army. Nowhere else in the world is a war being waged without outsiders and independent witnesses, not in Iraq, not in Afghanistan, not in Gaza. But in Sri Lanka, the media and NGOs have been banned from the war zone, and the International Committee of the Red Cross, among the lone relief workers there, has described the civilian situation as catastrophic. A quarter of a million Tamils uprooted. Tens of thousands imprisoned in refugee camps. Thousands killed and maimed.
Those who say the Tamils deserve this fate because they supported Prabhakaran are heartless and blind. There are many who support him and many who don't. Either way, they don't have the power to influence him. Is it then justifiable to punish ordinary civilians? Is it fair to kill Americans for the sin that Bush committed in Iraq, even though they not only elected, but re-elected him? The Sri Lankan army cannot be faulted for trying to destroy the LTTE. But the Sri Lankan government cannot condone or justify destroying Tamils and their homeland in the process.
But this only strengthens Prabhakaran. Politicians and bureaucrats don't realise that the LTTE welcomes war. It swells its ranks, reaffirms its raison d'étre, it produces more emotional support for a separate state. From the previous wars that I have witnessed (journalists could manage to get in then), LTTE cadres love fighting. During peacetime, LTTE guerrillas are disciplined and restrained. In battle, there is a complete makeover. They are highly excitable, almost gleeful.
The LTTE has been written off many times before. Prabhakaran has been 'killed' or 'nearly killed' many times in the past. If the army ever reaches his bunker, he will swallow his cyanide and the legend of Prabhakaran will probably attain mythical proportions. Lacking independent assessments, journalists repeat Sri Lankan claims that this is the end game, this is Prabhakaran's last stand.
Judging from the past, I doubt it. Sure, the Sri Lankan army will wrest the last piece of land from Prabhakaran's grip. But that doesn't mean the end of the LTTE. They will revert to what they are best at-guerrilla warfare, striking when least expected. As armies before have realised, conquering territory is one thing, holding onto it opens a Pandora's box of problems.
Prabhakaran has lost wars before. He had created a de facto Tamil Eelam with its own army, police, courts and taxation system not once, but several times in the past-only to have it all smashed and wiped out. And he had to start all over again. At 54, Prabhakaran still has enough grit to start again and continue for another 20 years.
In the meantime, he will be watching the Indian elections closely to see which dispensation takes charge in New Delhi. He will be watching to see if there is a popular upsurge of support in Tamil Nadu for the plight of Tamils across the Palk Strait. He will be watching the disastrous impact of war on Sri Lanka's economy. He will be watching Hillary Clinton who said there should be a 'nuanced' approach to dealing with terrorism. He will be watching President Barack Obama who rightly analysed that conflicts stem from our perception of 'the other'.
Today, Prabhakaran's situation looks dire. But the wheels of fortune are not static. Things change. America has changed. The world is changing. Capitalism is discredited. Socialism sneaks in from the backdoor. Big banks have gone bust. Misery replaces prosperity in headlines. As new winds blow away many certitudes of the recent past, new opportunities, alignments and paradigms take their place on the world stage. And they will inexorably weave their impact in remote corners of faraway Sri Lanka, this beautiful emerald teardrop island that awaits its tryst with peace.
‘பங்களாதேஷும் தமிழ் ஈழமும்'
இந்திரா பார்த்தசாரதி
(இந்த கட்டுரை உயிர்ம்மை இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது. நேரடியாகப் படிக்க இங்கே சொடுக்குங்கள்: http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=935)
1971. பாகிஸ்தான் அதிபர், ராணுவத் தலைவர், மது-மங்கைப் பிரியர் யாயாகான், கிழக்குப் பாகிஸ்தான்(இப்பொழுதைய பங்களா தேஷ்) தேர்தல் முடிவுகளைப் புறக்கணித்து தேர்தலில் அமோக வெற்றி பெற்ற வங்கபந்து முஜிபுர் ரஹ்மானைச் சிறையில் அடைத்தார். இந்தியாவில் மேற்கு வங்காள மக்கள் கொதித்தெழுந்தனர். காரணம், அவர்களுக்கும் கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்குமிடையே இருந்த மொழிப் பற்று.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே இருந்த மரபுப் பகையின் காரணமாக, இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ரகசிய இந்திய ராணுவப் பயிற்சி பெற்ற கிழக்கு வங்காள விடுதலை வீரர்கள்(முக்தி போனி) அணி அணியாகச் சென்று கிழக்குப் பாகிஸ்தானில் கிளர்ச்சி செய்தனர். கண்மூடித்தனமான அடக்குமுறையைக் கையாண்டு விடுதலைப் போராட்டத்தை அடக்க முயன்றார் யாயாகான். கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினர்.
இந்தியாவில் இப்பிரச்சினையைப் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக, அதிகாரபூர்வமாக அரசாங்கம் இதில் கலந்து கொள்ளாவிட்டாலும், அறிவு ஜீவிகளின் கூட்டம் ஆங்காங்கே நடப்பதற்குத் தூண்டு கோலாக இருந்தார் இந்திரா காந்தி. தில்லியில், சாப்ரு ஹௌஸில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்துவிட்டு, சோவியத் யூனியன் நிர்ப்பந்தத்தில், இந்திரா காந்தி அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்த மோகன் குமாரமங்கலம் தலைமையில் ஒரு பெரிய கூட்டம் நடந்தது.மேற்கு வங்க எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், சிந்தனை வாதிகள் பலர், கிழக்குப் பாகிஸ்தான் ஏன் தனிநாடாக வேண்டுமென்று வற்புறுத்திப் பேசினார்கள். முக்கிய காரணம், மதத்தைக் காட்டிலும், மக்களை இணைக்கும், வலிமையான கலாசார அடையாளம் மொழிதான் என்பது அவர்கள் வாதம். பங்களா தேஷ் உருவான பிறகு, ‘உலக
வரலாற்றிலேயே மொழிப் போராட்டத்தின் காரணமாக விடுதலை பெற்ற ஒரே நாடு பங்களா தேஷ்தான்' என்று முஜிபுர் ரஹ்மான் கூறினார். (இந்தியாவுக்கும், பங்களா தேஷுக்கும் தனித் தனியான நாட்டுப் பண்கள் வழங்கிய வங்கமொழிக் கவிஞர் ரவீந்தரநாத் தாகூர்.)
‘இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்றாலும், ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வருவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது' என்றார் இந்திரா காந்தி. ‘கிழக்குப் பாகிஸ்தான் கிளர்ச்சிகளுக்கு இந்தியா உதவி செய்கின்றது' என்று சொல்லி இந்தியாவின் வடகிழக்குப் பகுதி எல்லை ஓரங்களில் படைகளைக் குவித்தார் யாயாகான். இந்திரா காந்தி எதிர்பார்த்ததும் இதுதான். கிழக்குப் பாகிஸ்தான் விடுதலைப் போர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
ஆங்கிலத்தில் கூறுவது போல், ‘the rest is history'
இப்பொழுது நடக்கும் சம்பவமொன்று முன்பு நடந்தவொன்றை நினைவூட்டுவது போலிருந்தால், அதற்கு ஆங்கிலத்தில் ‘ deja vu' என்பார்கள். இன்று இலங்கையில் நடப்பதும், ஒரு குறிப்பட்ட மொழியைத் தங்கள் கலாச்சார அடையாளமாகக் கொண்ட ஒரு சிறுபான்மை இனம், பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகப் பேரினத்துடன் போராடுகிறது. இலங்கைத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் இணைக்கும் கலாச்சாரப் பாலம், தமிழ் மொழி. ஒரு பஞ்சாபிய இந்திய ஹிந்துவும், பாகிஸ்தானிய பஞ்சாப் முஸ்லீமும் மொழியின் காரணமாகக் கலாசார ரீதியாக ஒன்றுபடுவது போல், ஒரு இந்திய பஞ்சாபியும், ஒரு இந்தியத் தமிழனும் ஒன்றுபடமுடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தையுடைய வட நாட்டு தேவநாகரிக மொழியினரினால், இந்தியத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே இருக்கக்கூடிய உணர்ச்சிபூர்வமான பிணைப்பைப் புரிந்து கொள்ள முடியாது.இல்லாவிட்டால், 1971இல், மேற்கு வங்கத்தினர் கூக்குரலுக்குச் செவிசாய்த்த இந்திய அரசாங்கம், இன்று ஏன் ராஜபக்ஷேக்கு ஆதரவாக வெளிப்படையாகவே இயங்குகிறது? குழந்தைகளுக்கு லாலிப்பாப் வழங்குவது போல், பிரதிபா பாட்டீல், இப்பிரச்சினையைப் பற்றிப் பாராளுமன்றத்தில் தம் உரையில் குறிப்பிட்டுவிட்டாரென்று, சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆனந்தப்படுவது வேடிக்கையாக இருக்கிறது!
இரண்டாம் உலகப் போரின் போது, போலந்தை ஆக்கிரமித்த ஹிட்லர், யூதர்களைத் தனிமைப்படுத்த ஒரு தனி இடத்தில் அவர்களுடைய இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்தான்.இதற்கு ‘ghetto' என்று பெயர். இது, யூதர்களை ஆஷ்விட்ச் என்ற இடத்தில்
படுகொலை(Holocaust) செய்வதற்கு முன்னால் போலிஷ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்திய செய்கை. வன்னிப் பகுதியில் இலங்கைத் தமிழர் யாவரையும் ஒரு குறுகிய பகுதியில் அந்நியப்படுத்தி , அவர்கள் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பிறகு, தந்திரமாக அவர்களுக்குச் சொந்தமான பெரும் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றத் திட்டமிட்டிருக்கிறார் இலங்கை அதிபர்.
லாலிப்பாப்புடன் நாம் திருப்தி அடையவேண்டியதுதானா, அல்லது எதிர்கொள்ள வேண்டிய வகையில் இதை எதிர்கொண்டு போராட வேண்டுமா என்பதுதான் இந்தியத் தமிழினம் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
(இந்த கட்டுரை உயிர்ம்மை இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது. நேரடியாகப் படிக்க இங்கே சொடுக்குங்கள்: http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=935)
1971. பாகிஸ்தான் அதிபர், ராணுவத் தலைவர், மது-மங்கைப் பிரியர் யாயாகான், கிழக்குப் பாகிஸ்தான்(இப்பொழுதைய பங்களா தேஷ்) தேர்தல் முடிவுகளைப் புறக்கணித்து தேர்தலில் அமோக வெற்றி பெற்ற வங்கபந்து முஜிபுர் ரஹ்மானைச் சிறையில் அடைத்தார். இந்தியாவில் மேற்கு வங்காள மக்கள் கொதித்தெழுந்தனர். காரணம், அவர்களுக்கும் கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்குமிடையே இருந்த மொழிப் பற்று.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே இருந்த மரபுப் பகையின் காரணமாக, இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ரகசிய இந்திய ராணுவப் பயிற்சி பெற்ற கிழக்கு வங்காள விடுதலை வீரர்கள்(முக்தி போனி) அணி அணியாகச் சென்று கிழக்குப் பாகிஸ்தானில் கிளர்ச்சி செய்தனர். கண்மூடித்தனமான அடக்குமுறையைக் கையாண்டு விடுதலைப் போராட்டத்தை அடக்க முயன்றார் யாயாகான். கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினர்.
இந்தியாவில் இப்பிரச்சினையைப் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக, அதிகாரபூர்வமாக அரசாங்கம் இதில் கலந்து கொள்ளாவிட்டாலும், அறிவு ஜீவிகளின் கூட்டம் ஆங்காங்கே நடப்பதற்குத் தூண்டு கோலாக இருந்தார் இந்திரா காந்தி. தில்லியில், சாப்ரு ஹௌஸில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்துவிட்டு, சோவியத் யூனியன் நிர்ப்பந்தத்தில், இந்திரா காந்தி அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்த மோகன் குமாரமங்கலம் தலைமையில் ஒரு பெரிய கூட்டம் நடந்தது.மேற்கு வங்க எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், சிந்தனை வாதிகள் பலர், கிழக்குப் பாகிஸ்தான் ஏன் தனிநாடாக வேண்டுமென்று வற்புறுத்திப் பேசினார்கள். முக்கிய காரணம், மதத்தைக் காட்டிலும், மக்களை இணைக்கும், வலிமையான கலாசார அடையாளம் மொழிதான் என்பது அவர்கள் வாதம். பங்களா தேஷ் உருவான பிறகு, ‘உலக
வரலாற்றிலேயே மொழிப் போராட்டத்தின் காரணமாக விடுதலை பெற்ற ஒரே நாடு பங்களா தேஷ்தான்' என்று முஜிபுர் ரஹ்மான் கூறினார். (இந்தியாவுக்கும், பங்களா தேஷுக்கும் தனித் தனியான நாட்டுப் பண்கள் வழங்கிய வங்கமொழிக் கவிஞர் ரவீந்தரநாத் தாகூர்.)
‘இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்றாலும், ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வருவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது' என்றார் இந்திரா காந்தி. ‘கிழக்குப் பாகிஸ்தான் கிளர்ச்சிகளுக்கு இந்தியா உதவி செய்கின்றது' என்று சொல்லி இந்தியாவின் வடகிழக்குப் பகுதி எல்லை ஓரங்களில் படைகளைக் குவித்தார் யாயாகான். இந்திரா காந்தி எதிர்பார்த்ததும் இதுதான். கிழக்குப் பாகிஸ்தான் விடுதலைப் போர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
ஆங்கிலத்தில் கூறுவது போல், ‘the rest is history'
இப்பொழுது நடக்கும் சம்பவமொன்று முன்பு நடந்தவொன்றை நினைவூட்டுவது போலிருந்தால், அதற்கு ஆங்கிலத்தில் ‘ deja vu' என்பார்கள். இன்று இலங்கையில் நடப்பதும், ஒரு குறிப்பட்ட மொழியைத் தங்கள் கலாச்சார அடையாளமாகக் கொண்ட ஒரு சிறுபான்மை இனம், பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகப் பேரினத்துடன் போராடுகிறது. இலங்கைத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் இணைக்கும் கலாச்சாரப் பாலம், தமிழ் மொழி. ஒரு பஞ்சாபிய இந்திய ஹிந்துவும், பாகிஸ்தானிய பஞ்சாப் முஸ்லீமும் மொழியின் காரணமாகக் கலாசார ரீதியாக ஒன்றுபடுவது போல், ஒரு இந்திய பஞ்சாபியும், ஒரு இந்தியத் தமிழனும் ஒன்றுபடமுடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தையுடைய வட நாட்டு தேவநாகரிக மொழியினரினால், இந்தியத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே இருக்கக்கூடிய உணர்ச்சிபூர்வமான பிணைப்பைப் புரிந்து கொள்ள முடியாது.இல்லாவிட்டால், 1971இல், மேற்கு வங்கத்தினர் கூக்குரலுக்குச் செவிசாய்த்த இந்திய அரசாங்கம், இன்று ஏன் ராஜபக்ஷேக்கு ஆதரவாக வெளிப்படையாகவே இயங்குகிறது? குழந்தைகளுக்கு லாலிப்பாப் வழங்குவது போல், பிரதிபா பாட்டீல், இப்பிரச்சினையைப் பற்றிப் பாராளுமன்றத்தில் தம் உரையில் குறிப்பிட்டுவிட்டாரென்று, சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆனந்தப்படுவது வேடிக்கையாக இருக்கிறது!
இரண்டாம் உலகப் போரின் போது, போலந்தை ஆக்கிரமித்த ஹிட்லர், யூதர்களைத் தனிமைப்படுத்த ஒரு தனி இடத்தில் அவர்களுடைய இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்தான்.இதற்கு ‘ghetto' என்று பெயர். இது, யூதர்களை ஆஷ்விட்ச் என்ற இடத்தில்
படுகொலை(Holocaust) செய்வதற்கு முன்னால் போலிஷ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்திய செய்கை. வன்னிப் பகுதியில் இலங்கைத் தமிழர் யாவரையும் ஒரு குறுகிய பகுதியில் அந்நியப்படுத்தி , அவர்கள் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பிறகு, தந்திரமாக அவர்களுக்குச் சொந்தமான பெரும் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றத் திட்டமிட்டிருக்கிறார் இலங்கை அதிபர்.
லாலிப்பாப்புடன் நாம் திருப்தி அடையவேண்டியதுதானா, அல்லது எதிர்கொள்ள வேண்டிய வகையில் இதை எதிர்கொண்டு போராட வேண்டுமா என்பதுதான் இந்தியத் தமிழினம் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
ஈழப்போர் - இந்தியாவின் பச்சைத் துரோகம்
ஈழத்தில் எப்போதும் இருந்திராத அளவு போர் உச்சகட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறது. புலிகள் வெறும் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு அவர்களின் கடைசி கோட்டை. இதை விட்டுவிட்டால் அவர்களின் இயக்கம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதாகிவிடும். புலிகளை தோற்கடித்த பிறகு தமிழர்களின் நல்வாழ்வுக்கு வேண்டியவை செய்யப்படும் என்று மகிந்த ராஜபக்சே அறிவித்திருக்கிறார். ஆனால் இவர் ஒன்றும் புதிதாக சொல்லிவிட வில்லை. இலங்கையின் ஒவ்வொரு தலைமுறை அரசியல்வாதிகளும் பேசியதைத் தான் இவரும் பேசுகிறார். தமிழர்களுக்கான சுய உரிமையோ அல்லது அங்கீகாரமோ கிடைக்கப்போவதில்லை. தமிழர்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமாயின் பல வருடங்களுக்கு முன்னேயே கிடைத்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தோன்றியிருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. அங்கே தமிழர் மத்தியில் பல விடுதலை இயக்கங்கள் தோன்றியிருந்தாலும் புலிகள் மட்டுமே உறுதியாக போராடிக் கொண்டிருப்பது. அதற்குக் காரணம் அவர்கள் மற்ற இயக்கங்களை அழித்ததால் அல்ல; அவர்கள் கோரிக்கையில் உறுதியாய் இருப்பதால் தான்.
ஈழப்போரில் இந்தியாவின் பங்கு புதிதல்ல. புலிகள் இயக்கம் தோன்றிய காலங்களில் இருந்து ராஜீவ் கொலை வரை இந்தியா ஈழத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது என்று எல்லாரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்திய அமைதிப்படை தமிழர் பகுதியில் அட்டகாசங்கள் செய்து புலிகளிடம் தோற்று திரும்பியதில் இருந்து ஆரம்பித்தது பிரச்சனை. இன்று ஈழத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் இந்தியாவின் பாவக் கணக்கில், துரோக சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும். அங்கிருப்பவர்களைத் தமிழர்களாகக் பார்க்க வேண்டாம்; மனிதர்களாகக் கூட பார்க்க மறுக்கிறது இந்திய அரசு. இலங்கைப் போருக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் செய்து வருகிறது இந்திய அரசு. இன்னும் சொல்லப் போனால் இந்திய அரசின் ஆதரவு இருப்பதாலேயே இன்னும் வெறி பிடித்து போரிடுகிறது இலங்கை. ஒன்று மட்டும் நிச்சயம். நாளை இதற்கு எல்லாம் சேர்த்து இந்தியா விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரை இன்றைய தேதியில் அதற்கு சாதகமாக யார் உதவி செய்தாலும் ஏற்றுக்கொள்ளவே தயாராக இருக்கிறது. இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் 'எப்போதும் முதுகில் குத்தும் நண்பன்' சீனா என்று இலங்கைக்கு ஆதரவு நீட்டும் பட்டியல் நீள்கிறது. இவை எல்லாமே தன்னலமின்றி செய்யும் உதவி இல்லை. சீனா, பாகிஸ்தான் மற்றும் எல்லா நாடுகளுக்கும் இலங்கையின் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு. திரிகோணமலை எண்ணை கிடங்குகளில் ஆரம்பித்து அங்கே ராணுவத் தளம் அமைப்பது வரை அவரவருக்கு ஏற்ற ஆசை இல்லாமல் யாரும் இலங்கைக்கு உதவ மாட்டார்கள். அதே நேரம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவு கொள்வது இந்தியாவை ஒரு கட்டுக்குள் வைக்கும் என்ற கணக்கும் இலங்கை அரசுக்கு தெளிவாக உண்டு. நாளை ஒரு வேளை இலங்கை போரில் வெற்றி பெற்றால் என்னவாகும்? எல்லா நாடுகளும் அங்கே தன் பங்குக்கு என்ன வேண்டுமோ அதை கேட்கத்தான் போகிறது. அமெரிக்க ராணுவத்தளம் அங்கே அமைந்து விட்டால் தெற்காசிய பிராந்தியத்திற்கே ஒரு அச்சுறுத்தலாக அமையக்கூடும். சீனாவிற்கு எண்ணை வளங்கள் மற்றும் கடல்வழிப் போக்குவரத்தில் இலங்கை உதவ நேரிட்டால் அது இந்தியாவின் எண்ணைப் போக்குவரத்திற்கு நிச்சயம் இடையூறாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் பற்றி கேட்கவே வேண்டாம்.
இன்றைய ஈழப்போரில் விடுதலைப் புலிகள் தோல்வி காண்பதற்கு அவர்களுடைய பலம் குன்றிவிட்டது என்பது காரணமில்லை. பத்து பேர் சேர்ந்து கூட்டத்தில் ஒருவனை அடித்தால் அவன் எவ்வளவு வலிமையானவனாயிருந்தாலும் தோல்வி காணவே வேண்டும். 25 வருட போராட்டத்தில் இலங்கை அரசு இந்த அளவு வெற்றி பெற்றதும் இல்லை; புலிகள் இந்த அளவு தோல்வியுற்றதுமில்லை. ஏன்? ஏனெனில், 2006 வரை புலிகளுடன் போரிட்டது இலங்கை அரசு மட்டுமே. இப்போது நடக்கும் ஈழப்போர் புலிகளுக்கும் பல வல்லரசுகளுக்கும் நடப்பது; பல குள்ள நரிகளுடன் நடப்பது. அதில் இந்தியா குள்ளநரியானது காலத்தின் அசிங்கம். மிகப்பெரிய பாரம்பரியமும், கலாச்சாரமும் உள்ள இந்தியா எப்போது முதுகில் குத்த பயின்று கொண்டது என்று தெரியவில்லை. தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அடுத்த நொடி இந்திய தொழில்நுட்பம் இலங்கை ராணுவத்திற்கு உதவுகிறது. இந்த இரட்டை வேஷம் மிகக் கொடூரம்.
இன்றைய இந்திய/ தமிழக அரசியல் அப்படி இருக்கிறது. ஊழல் ஊறிப்போனவர்கள், துரோகத்தில் திளைத்தவர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழனுக்காக கலைஞரோ மற்ற அரசியல்வாதிகளோ போராடுகிறார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் ஏமாளி. தமிழக அரசியல் களம் துர்நாற்றம் உள்ள ஒரு சாக்கடை. புழுத்திருந்தாலும் ஆதாயம் தேடும் பிணம் திண்ணிகள் நிறைந்தது. தமிழன் ஆதாயத்தில் ஓட்டு சேர்க்கும் பிசாசுகள். ஈழத்தில் கசியும் ரத்தத்தை அரசியலாக்கும் ரத்தக்காட்டேரிகள். இவர்களால் ஈழத்தில் ஒரு நண்மையும் ஏற்படப் போவதில்லை. போராட்டங்களும், மனிதச் சங்கிலிகளும், ராஜினாமா அறிக்கைகளும் வெறும் கண்துடைப்பு. அதற்கு சோ, ஜெயலலிதா போன்று பகிரங்கமாக புலிகளை எதிர்ப்பவர்கள் எவ்வளவோ மேல்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் நடக்கும் போருக்கு வருந்தும் அல்லது ஆப்ரிக்காவில் நடைபெறும் இனப் போருக்கு வருந்தும், இந்தியா இங்கே என் கண்ணெதிரில் நடக்கும் கொலைகளுக்கு பயிற்சி அளிக்கிறது. அதைக் கேட்க ஒரு நாதியில்லை. உங்கள் பார்வையில் புலிகள் தீவிரவாதிகளாகவே இருக்கட்டும். ஆனால் அங்கே இருப்பவர்கள் மனிதர்கள். அவர்கள் தமிழ் பேசும் இனத்தவர் என்பதாலேயே அவர்களுடைய வாழ்வுரிமை பறிக்கப்படவேண்டாம். புலிகளுக்கு ஆதரவாக நான் பேச முனையவில்லை. அங்கே இருப்பவனுக்கும் வாழ உரிமை உண்டு என்பதாலேயே பேசுகிறேன். குத்துவதென்றால் நெஞ்சில் குத்துங்கள். ஏனெனில் ஈழத்தமிழன் வீரன். புறநானூற்றுத் தமிழச்சியை தமிழகத்தில் காண முடியாது. ஈழத்தின் சகோதரிகள்தாம் உண்மைத் தமிழச்சி.
என் அருமை ஈழத்து சகோதரர்களே, இந்தியாவையும் தமிழக அரசியல்வாதிகளையும் தயவு செய்து நம்பாதீர்கள். அவர்கள் உங்களை முதுகில் குத்துபவர்கள். நீங்கள் திறமைசாலிகள். உங்கள் வெற்றி உங்களால்தான் முடியும்.
ஈழப்போரில் இந்தியாவின் பங்கு புதிதல்ல. புலிகள் இயக்கம் தோன்றிய காலங்களில் இருந்து ராஜீவ் கொலை வரை இந்தியா ஈழத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது என்று எல்லாரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்திய அமைதிப்படை தமிழர் பகுதியில் அட்டகாசங்கள் செய்து புலிகளிடம் தோற்று திரும்பியதில் இருந்து ஆரம்பித்தது பிரச்சனை. இன்று ஈழத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் இந்தியாவின் பாவக் கணக்கில், துரோக சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும். அங்கிருப்பவர்களைத் தமிழர்களாகக் பார்க்க வேண்டாம்; மனிதர்களாகக் கூட பார்க்க மறுக்கிறது இந்திய அரசு. இலங்கைப் போருக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் செய்து வருகிறது இந்திய அரசு. இன்னும் சொல்லப் போனால் இந்திய அரசின் ஆதரவு இருப்பதாலேயே இன்னும் வெறி பிடித்து போரிடுகிறது இலங்கை. ஒன்று மட்டும் நிச்சயம். நாளை இதற்கு எல்லாம் சேர்த்து இந்தியா விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரை இன்றைய தேதியில் அதற்கு சாதகமாக யார் உதவி செய்தாலும் ஏற்றுக்கொள்ளவே தயாராக இருக்கிறது. இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் 'எப்போதும் முதுகில் குத்தும் நண்பன்' சீனா என்று இலங்கைக்கு ஆதரவு நீட்டும் பட்டியல் நீள்கிறது. இவை எல்லாமே தன்னலமின்றி செய்யும் உதவி இல்லை. சீனா, பாகிஸ்தான் மற்றும் எல்லா நாடுகளுக்கும் இலங்கையின் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு. திரிகோணமலை எண்ணை கிடங்குகளில் ஆரம்பித்து அங்கே ராணுவத் தளம் அமைப்பது வரை அவரவருக்கு ஏற்ற ஆசை இல்லாமல் யாரும் இலங்கைக்கு உதவ மாட்டார்கள். அதே நேரம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவு கொள்வது இந்தியாவை ஒரு கட்டுக்குள் வைக்கும் என்ற கணக்கும் இலங்கை அரசுக்கு தெளிவாக உண்டு. நாளை ஒரு வேளை இலங்கை போரில் வெற்றி பெற்றால் என்னவாகும்? எல்லா நாடுகளும் அங்கே தன் பங்குக்கு என்ன வேண்டுமோ அதை கேட்கத்தான் போகிறது. அமெரிக்க ராணுவத்தளம் அங்கே அமைந்து விட்டால் தெற்காசிய பிராந்தியத்திற்கே ஒரு அச்சுறுத்தலாக அமையக்கூடும். சீனாவிற்கு எண்ணை வளங்கள் மற்றும் கடல்வழிப் போக்குவரத்தில் இலங்கை உதவ நேரிட்டால் அது இந்தியாவின் எண்ணைப் போக்குவரத்திற்கு நிச்சயம் இடையூறாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் பற்றி கேட்கவே வேண்டாம்.
இன்றைய ஈழப்போரில் விடுதலைப் புலிகள் தோல்வி காண்பதற்கு அவர்களுடைய பலம் குன்றிவிட்டது என்பது காரணமில்லை. பத்து பேர் சேர்ந்து கூட்டத்தில் ஒருவனை அடித்தால் அவன் எவ்வளவு வலிமையானவனாயிருந்தாலும் தோல்வி காணவே வேண்டும். 25 வருட போராட்டத்தில் இலங்கை அரசு இந்த அளவு வெற்றி பெற்றதும் இல்லை; புலிகள் இந்த அளவு தோல்வியுற்றதுமில்லை. ஏன்? ஏனெனில், 2006 வரை புலிகளுடன் போரிட்டது இலங்கை அரசு மட்டுமே. இப்போது நடக்கும் ஈழப்போர் புலிகளுக்கும் பல வல்லரசுகளுக்கும் நடப்பது; பல குள்ள நரிகளுடன் நடப்பது. அதில் இந்தியா குள்ளநரியானது காலத்தின் அசிங்கம். மிகப்பெரிய பாரம்பரியமும், கலாச்சாரமும் உள்ள இந்தியா எப்போது முதுகில் குத்த பயின்று கொண்டது என்று தெரியவில்லை. தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அடுத்த நொடி இந்திய தொழில்நுட்பம் இலங்கை ராணுவத்திற்கு உதவுகிறது. இந்த இரட்டை வேஷம் மிகக் கொடூரம்.
இன்றைய இந்திய/ தமிழக அரசியல் அப்படி இருக்கிறது. ஊழல் ஊறிப்போனவர்கள், துரோகத்தில் திளைத்தவர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழனுக்காக கலைஞரோ மற்ற அரசியல்வாதிகளோ போராடுகிறார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் ஏமாளி. தமிழக அரசியல் களம் துர்நாற்றம் உள்ள ஒரு சாக்கடை. புழுத்திருந்தாலும் ஆதாயம் தேடும் பிணம் திண்ணிகள் நிறைந்தது. தமிழன் ஆதாயத்தில் ஓட்டு சேர்க்கும் பிசாசுகள். ஈழத்தில் கசியும் ரத்தத்தை அரசியலாக்கும் ரத்தக்காட்டேரிகள். இவர்களால் ஈழத்தில் ஒரு நண்மையும் ஏற்படப் போவதில்லை. போராட்டங்களும், மனிதச் சங்கிலிகளும், ராஜினாமா அறிக்கைகளும் வெறும் கண்துடைப்பு. அதற்கு சோ, ஜெயலலிதா போன்று பகிரங்கமாக புலிகளை எதிர்ப்பவர்கள் எவ்வளவோ மேல்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் நடக்கும் போருக்கு வருந்தும் அல்லது ஆப்ரிக்காவில் நடைபெறும் இனப் போருக்கு வருந்தும், இந்தியா இங்கே என் கண்ணெதிரில் நடக்கும் கொலைகளுக்கு பயிற்சி அளிக்கிறது. அதைக் கேட்க ஒரு நாதியில்லை. உங்கள் பார்வையில் புலிகள் தீவிரவாதிகளாகவே இருக்கட்டும். ஆனால் அங்கே இருப்பவர்கள் மனிதர்கள். அவர்கள் தமிழ் பேசும் இனத்தவர் என்பதாலேயே அவர்களுடைய வாழ்வுரிமை பறிக்கப்படவேண்டாம். புலிகளுக்கு ஆதரவாக நான் பேச முனையவில்லை. அங்கே இருப்பவனுக்கும் வாழ உரிமை உண்டு என்பதாலேயே பேசுகிறேன். குத்துவதென்றால் நெஞ்சில் குத்துங்கள். ஏனெனில் ஈழத்தமிழன் வீரன். புறநானூற்றுத் தமிழச்சியை தமிழகத்தில் காண முடியாது. ஈழத்தின் சகோதரிகள்தாம் உண்மைத் தமிழச்சி.
என் அருமை ஈழத்து சகோதரர்களே, இந்தியாவையும் தமிழக அரசியல்வாதிகளையும் தயவு செய்து நம்பாதீர்கள். அவர்கள் உங்களை முதுகில் குத்துபவர்கள். நீங்கள் திறமைசாலிகள். உங்கள் வெற்றி உங்களால்தான் முடியும்.
சென்னை சட்டக்கல்லூரி - தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள்
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்திருக்கும் சம்பவங்கள் நம் சமுதாயத்தை மீண்டும் ஒரு முறை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. சில மாணவர்களோடு சேர்த்து நீதி தேவதையும், கலைமகளும் கொலை செய்யப்பட்டிருப்பது நம் தமிழ்ச் சமுதாயத்தின் பெருத்த அவமானம். இது போன்று நடப்பது முதல் முறை இல்லை என்றாலும், நிகழும் பொழுது மிக விகாரமாகத்தான் தெரிகிறது. அவர்கள் நடத்திய வெறியாட்டத்தைப் பார்க்கும் போது அவர்கள் உண்மையாகவே மாணவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் தமிழக காவல்துறையின் கையாலாகத்தனத்தையும், அரசியல் அழுக்குகளையும் காண்பிக்கிறது. அவர்கள் உண்மையிலே மாணவர்களாக இருந்தால், கலைமகளை களங்கப்படுத்திய குற்றம் இந்த தமிழ்ச் சமுதாயத்தைச் சேரும். சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த வெறியாட்டம் தமிழக சட்டத்துறையின் லட்சணத்தையும், அதே சமயம் நாம் இனி சட்டத்தின் துணையை நாடினால் நியாயம் கிடைக்காது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த சம்பவத்தைப் பற்றி சட்டசபையில் விவாதிக்கும் போது முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும், அதனால் திரு. துரைமுருகன் பதில் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை காவல்துறை உயரதிகாரி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் குற்றம் நடக்கும் போது வேடிக்கை பார்க்கும் அவலத்தை அரங்கேற்றிவிட்ட பிறகு என்ன செய்தாலும் அது தீர்வாகாது. காவல்துறை இவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு சம்பவம் மட்டுமே நம் கண்களுக்கு புலப்பட்டிருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை.
அதேவேளை, இந்த கலவரம் நடந்த நேரத்தை சற்றே உற்றுப் பார்த்தால் இது ஒரு வேளை அரசின் வேலையாகவே இருக்குமோ என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. இலங்கையில் தமிழர் பிரச்சனை உச்ச கட்டத்தை அடையும் வேளையில், திரு. கருணாநிதி அவர்களின் சாமர்த்தியமான ஏமாற்று வேலை சில நாட்கள் முன்பு அம்பலமானது. அவர் தமிழர் போர்வையில் இத்தனை காலம் அரசியல் நடத்திவிட்டு தமிழனுக்கு பச்சைத் துரோகம் செய்யத் துணிந்து விட்டார் என்பது தெரிகிறது. தமிழகம் ஈழப் பிரச்சனையில் கொதித்துக் கொண்டிருக்கையில் புதிதாய் ஒன்றைக் கிளப்பி திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும்.
கடவுள் என்ற ஒன்று இருந்தால் அதைக் கேட்க விரும்புகிறேன்:
கலைமகளுக்கும், நீதி தேவதைக்கும் பாதுகாப்பும் நீதியும் இல்லை என்றால் நீ எதற்கு?
தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள். வெட்கித் தலைகுனிகிறேன்.
இந்த சம்பவத்தைப் பற்றி சட்டசபையில் விவாதிக்கும் போது முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும், அதனால் திரு. துரைமுருகன் பதில் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை காவல்துறை உயரதிகாரி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் குற்றம் நடக்கும் போது வேடிக்கை பார்க்கும் அவலத்தை அரங்கேற்றிவிட்ட பிறகு என்ன செய்தாலும் அது தீர்வாகாது. காவல்துறை இவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு சம்பவம் மட்டுமே நம் கண்களுக்கு புலப்பட்டிருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை.
அதேவேளை, இந்த கலவரம் நடந்த நேரத்தை சற்றே உற்றுப் பார்த்தால் இது ஒரு வேளை அரசின் வேலையாகவே இருக்குமோ என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. இலங்கையில் தமிழர் பிரச்சனை உச்ச கட்டத்தை அடையும் வேளையில், திரு. கருணாநிதி அவர்களின் சாமர்த்தியமான ஏமாற்று வேலை சில நாட்கள் முன்பு அம்பலமானது. அவர் தமிழர் போர்வையில் இத்தனை காலம் அரசியல் நடத்திவிட்டு தமிழனுக்கு பச்சைத் துரோகம் செய்யத் துணிந்து விட்டார் என்பது தெரிகிறது. தமிழகம் ஈழப் பிரச்சனையில் கொதித்துக் கொண்டிருக்கையில் புதிதாய் ஒன்றைக் கிளப்பி திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும்.
கடவுள் என்ற ஒன்று இருந்தால் அதைக் கேட்க விரும்புகிறேன்:
கலைமகளுக்கும், நீதி தேவதைக்கும் பாதுகாப்பும் நீதியும் இல்லை என்றால் நீ எதற்கு?
தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள். வெட்கித் தலைகுனிகிறேன்.
காசுக்கு முன் கொள்கையாவது, வெங்காயமாவது!
ராஜா சர்.முத்தையா செட்டியார் தன் அறுபதாம் வயது நிறைவு விழாவை 1941ல் கொண்டாடினார். பிராமணர்கள் 60 பேருக்கு 60 மாடு, 60 வீடு, 60 வேட்டி, துண்டு தானம் கொடுத்தார். பிராமணர் அல்லாதாரின் நலம் காக்கும், "ஜஸ்டிஸ் கட்சி'யைச் சேர்ந்தவர் ராஜா முத்தையா செட்டியார். இவர் இப்படி பிராமணர்களுக்கு தானம் கொடுத்தது, மூட நம்பிக்கை என்றும், சமூக விடுதலைக்கு எதிரான செயல் என்றும் காரசாரமாக ஒரு தலையங்கம் எழுதினார் அண்ணாதுரை.
அதை ஈ.வெ.ரா.,வின், "விடுதலை' பத்திரிகையில் வெளியிட முனைந்தார். ஈ.வெ.ரா., வும், "கட்டாயம், எழுத வேண்டும்; விடாதே!' என்றார். காரணம், பிராமணர்களுக்கு தானம் கொடுத்த முத்தையா செட்டியார், தன், "விடுதலை' பத்திரிகை வளர்ச்சிக்கு பணம் தரவில்லையே என்ற கோபம். அண்ணாதுரை எழுதிய தலையங்கம் அச்சு கோர்க்கப்பட்டு, அச்சு எந்திரத்திலும் ஏறி விட்டது. அப்போது பார்த்து, முத்தையா செட்டியாரிடமிருந்து அறுபதாம் ஆண்டு நிறைவு விழா பரிசாக ஈ.வெ.ரா.,வுக்கு ஆயிரம் ரூபாய்க்கு, "செக்' வந்து விட்டது. உடனே அண்ணாதுரையை அழைத்து, "அந்த தலையங்கத்தை அச்சிடாதே!' என்றார் ஈ.வெ.ரா., அண்ணாதுரை சம்மதிக்கவில்லை; "எழுதியது எழுதியதுதான்!' என்றார்.
"சரி; சரி; அதே கருத்தை நானே தலையங்கமாக எழுதி விடுகிறேன்...' என்று கூறி, உப்புச்சப்பு இல்லாமல், வழ, வழ... கொழ, கொழ என்று ஒரு தலையங்கத்தை எழுதி வெளியிட்டார் ஈ.வெ.ரா., காசுக்கு முன் கொள்கையாவது, வெங்காயமாவது!
நன்றி: தினமலர்-வாரமலர்
ராஜா சர்.முத்தையா செட்டியார் தன் அறுபதாம் வயது நிறைவு விழாவை 1941ல் கொண்டாடினார். பிராமணர்கள் 60 பேருக்கு 60 மாடு, 60 வீடு, 60 வேட்டி, துண்டு தானம் கொடுத்தார். பிராமணர் அல்லாதாரின் நலம் காக்கும், "ஜஸ்டிஸ் கட்சி'யைச் சேர்ந்தவர் ராஜா முத்தையா செட்டியார். இவர் இப்படி பிராமணர்களுக்கு தானம் கொடுத்தது, மூட நம்பிக்கை என்றும், சமூக விடுதலைக்கு எதிரான செயல் என்றும் காரசாரமாக ஒரு தலையங்கம் எழுதினார் அண்ணாதுரை.
அதை ஈ.வெ.ரா.,வின், "விடுதலை' பத்திரிகையில் வெளியிட முனைந்தார். ஈ.வெ.ரா., வும், "கட்டாயம், எழுத வேண்டும்; விடாதே!' என்றார். காரணம், பிராமணர்களுக்கு தானம் கொடுத்த முத்தையா செட்டியார், தன், "விடுதலை' பத்திரிகை வளர்ச்சிக்கு பணம் தரவில்லையே என்ற கோபம். அண்ணாதுரை எழுதிய தலையங்கம் அச்சு கோர்க்கப்பட்டு, அச்சு எந்திரத்திலும் ஏறி விட்டது. அப்போது பார்த்து, முத்தையா செட்டியாரிடமிருந்து அறுபதாம் ஆண்டு நிறைவு விழா பரிசாக ஈ.வெ.ரா.,வுக்கு ஆயிரம் ரூபாய்க்கு, "செக்' வந்து விட்டது. உடனே அண்ணாதுரையை அழைத்து, "அந்த தலையங்கத்தை அச்சிடாதே!' என்றார் ஈ.வெ.ரா., அண்ணாதுரை சம்மதிக்கவில்லை; "எழுதியது எழுதியதுதான்!' என்றார்.
"சரி; சரி; அதே கருத்தை நானே தலையங்கமாக எழுதி விடுகிறேன்...' என்று கூறி, உப்புச்சப்பு இல்லாமல், வழ, வழ... கொழ, கொழ என்று ஒரு தலையங்கத்தை எழுதி வெளியிட்டார் ஈ.வெ.ரா., காசுக்கு முன் கொள்கையாவது, வெங்காயமாவது!
நன்றி: தினமலர்-வாரமலர்
ரஜினிகாந்த்: இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?
ஒரு முறை, இரு முறை அல்ல; மற்றுமொரு முறை என்று செல்கிறது ரஜினியின் அரசியல் ப்ரவேச அறிவிப்பு கணக்கு. மீண்டும் ஒரு முறை ரஜினியின் அரசியல் ப்ரவேசம் குறித்து செய்திகள் வெளியாகி, அதற்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து மறுப்பு வெளியிட்டு இருக்கிறார். இது அவரது சொந்த விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக இருந்தாலும், கொஞ்சமாவது தமிழக மக்களை மனதில் கொள்ள வேண்டாமா? என்ன கொடும சார் இது? நீங்கள் நீங்கள் மட்டுமாக இருக்கும் வரையில் தொந்தரவு இல்லை. தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள். சினிமாவில் உங்கள் முட்டாள்தனமான வசனங்களை ரசித்த குற்றத்திற்கான தண்டனையா இது? "நா ஒரு தடவா சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி". யோவ், ஒரு தடவ சொல்லும் போது ஒரு தடவதான் சொன்னா மாதிரிதான். தண்ணி அடிச்சு இருந்தீங்களா என்ன? எப்டி நூறு தடவ சொன்னா மாதிரி இருக்கும். உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? இல்ல சைடிஷ்ஷா? இந்த வடிகட்டின பைத்தியக்காரத்தனத்த சினிமாவோட நிறுத்திகிட்டா போதாதா? எதுக்கு பொதுவாழ்க்கையிலயும்? தமிழக மக்கள் ஏற்கனவே ரொம்ப நொந்து போயாச்சு. இதுல இவரோட அலம்பல் வேற.
இவர் ரசிகர்களை சந்திக்க போகிறார்; சந்தித்து அரசியல் ப்ரவேசம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் போகிறார் என்ற செய்தி மூன்று வாரங்களுக்கு முன்பே வட்டமடிக்கத் துவங்கியாயிற்று. மூன்று வாரங்கள் மெளனம் காத்துவிட்டு இப்போது அறிக்கை வெளியிட்டு இருப்பது ஒரு குழப்பவாதியின் தெளிந்த ஏமாற்று வேலை. இவருக்கு உண்மையாகவே அரசியல் ஆசை இல்லேன்னா இந்த செய்தி வந்த உடனேயே மறுப்பு வெளியிட்டு இருக்கனும். மூனு வாரமா என்ன சார் செய்துகிட்டு இருந்தீங்க? இமயமலை போயி கபிலமுனி கிட்ட ஆசிர்வாதம் கேட்டீங்களா? அவர் உங்ளுக்கே அல்வா குடுத்துட்டாரா? அது பரவாயில்ல. இப்போ வெளியிட்ட மறுப்பு செய்தியில் கூட தன்னுடைய சாமர்த்தியமான பைத்தியக்காரத்தனத்தோட சினிமாவையும் கலந்துதான வெளியிட்டு இருக்காரு. "இவரு வந்தா யாராலயும் தடுக்க முடியாதான்" எந்த நம்பிக்கையில இவரு இப்டி சொல்லலாம்? எல்லாம் நம்ம மக்க மேல இருக்கற அசட்டு நம்பிக்கதான். தமிழக மக்கள் இப்போவாவது முழிச்சுக்கனும். இனிமே ரஜினிகாந்த் பத்தி அரசியல் செய்தி வந்தா புறக்கணிக்கனும். அவர் அரசியலுக்கு நெசமாவே வந்தா அவரையே புறக்கணிக்கனும். இந்த சமயத்துல ஜெயகாந்தனுடைய "நடிகர்களின் சமுதாய பங்கு" பற்றிய கட்டுரைய பதிவு செய்தா ரொம்ப நல்லா இருக்கும். தேடிப் பார்க்கிறேன். இருந்தா பதிவு செய்யறேன்.
குசேலனில் இவர் உண்மையை சொல்லி இருக்கிறாராம். "இதற்கு முன் திரைப்படங்களில் பேசிய வசனமெல்லாம் ஒரு வசனகர்த்தாவோ இயக்குனரோ எழுதி கொடுத்து பேசினாராம்". ஏன் சார் அந்த மாதிரி வசனம் எழுதும் போது உங்க புத்தி எங்க போச்சு? உங்களுக்கு தமிழ் தெரியாதா? அப்போ தமிழ் மக்கள வெச்சு சம்பாதிக்கறத்துக்காக என்ன வேனா பேசுவீங்க. சுயபுத்தி இல்லாம காசு பாத்தா போதும் உங்களுக்கு. ஒரு பரபரப்ப உண்டாக்கனுன்னா பொது மேடையில "அவங்கள ஒதச்சா என்னன்னு" பேசுவீங்க. யாரு கண்டா? அது கூட யாராச்சும் எழுதி கொடுத்து பேசினேன்னு சொல்லி சுலபமா தப்பிக்கலாம். இந்த அறிக்கையும் ஒரு வேளை யாராச்சும் எழுதி கொடுத்துதான் வெளியிட்டு இருக்கிறாரோ என்னமோ? அடுத்த படம் "இயந்திரன்" வர்ற வரைக்கும் பொறுக்கனும். ஏன்னா இதுக்கான விளக்கம் அதுல தான் வரும். அப்புறம் அதுக்கு அடுத்த படத்துல "முன்னாடி படத்துல பேசினது ஒரு ரோபோ. அதுக்கு சொந்த புத்தி கிடையாது. அதுனால அத நம்பாதீங்க".. அப்டின்னு சொல்லுவார். என்ன ஒரே தில்லாலங்கடியா இருக்கு.
கடைசியா ஒரு வரி. ரஜினிகாந்த் பாணியில் சொல்ல வேண்டுமானால்:
இன்னும் தமிழ் மக்கள் இந்த நடிகரை நம்பினால், "தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது".
ஒரு முறை, இரு முறை அல்ல; மற்றுமொரு முறை என்று செல்கிறது ரஜினியின் அரசியல் ப்ரவேச அறிவிப்பு கணக்கு. மீண்டும் ஒரு முறை ரஜினியின் அரசியல் ப்ரவேசம் குறித்து செய்திகள் வெளியாகி, அதற்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து மறுப்பு வெளியிட்டு இருக்கிறார். இது அவரது சொந்த விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக இருந்தாலும், கொஞ்சமாவது தமிழக மக்களை மனதில் கொள்ள வேண்டாமா? என்ன கொடும சார் இது? நீங்கள் நீங்கள் மட்டுமாக இருக்கும் வரையில் தொந்தரவு இல்லை. தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள். சினிமாவில் உங்கள் முட்டாள்தனமான வசனங்களை ரசித்த குற்றத்திற்கான தண்டனையா இது? "நா ஒரு தடவா சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி". யோவ், ஒரு தடவ சொல்லும் போது ஒரு தடவதான் சொன்னா மாதிரிதான். தண்ணி அடிச்சு இருந்தீங்களா என்ன? எப்டி நூறு தடவ சொன்னா மாதிரி இருக்கும். உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? இல்ல சைடிஷ்ஷா? இந்த வடிகட்டின பைத்தியக்காரத்தனத்த சினிமாவோட நிறுத்திகிட்டா போதாதா? எதுக்கு பொதுவாழ்க்கையிலயும்? தமிழக மக்கள் ஏற்கனவே ரொம்ப நொந்து போயாச்சு. இதுல இவரோட அலம்பல் வேற.
இவர் ரசிகர்களை சந்திக்க போகிறார்; சந்தித்து அரசியல் ப்ரவேசம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் போகிறார் என்ற செய்தி மூன்று வாரங்களுக்கு முன்பே வட்டமடிக்கத் துவங்கியாயிற்று. மூன்று வாரங்கள் மெளனம் காத்துவிட்டு இப்போது அறிக்கை வெளியிட்டு இருப்பது ஒரு குழப்பவாதியின் தெளிந்த ஏமாற்று வேலை. இவருக்கு உண்மையாகவே அரசியல் ஆசை இல்லேன்னா இந்த செய்தி வந்த உடனேயே மறுப்பு வெளியிட்டு இருக்கனும். மூனு வாரமா என்ன சார் செய்துகிட்டு இருந்தீங்க? இமயமலை போயி கபிலமுனி கிட்ட ஆசிர்வாதம் கேட்டீங்களா? அவர் உங்ளுக்கே அல்வா குடுத்துட்டாரா? அது பரவாயில்ல. இப்போ வெளியிட்ட மறுப்பு செய்தியில் கூட தன்னுடைய சாமர்த்தியமான பைத்தியக்காரத்தனத்தோட சினிமாவையும் கலந்துதான வெளியிட்டு இருக்காரு. "இவரு வந்தா யாராலயும் தடுக்க முடியாதான்" எந்த நம்பிக்கையில இவரு இப்டி சொல்லலாம்? எல்லாம் நம்ம மக்க மேல இருக்கற அசட்டு நம்பிக்கதான். தமிழக மக்கள் இப்போவாவது முழிச்சுக்கனும். இனிமே ரஜினிகாந்த் பத்தி அரசியல் செய்தி வந்தா புறக்கணிக்கனும். அவர் அரசியலுக்கு நெசமாவே வந்தா அவரையே புறக்கணிக்கனும். இந்த சமயத்துல ஜெயகாந்தனுடைய "நடிகர்களின் சமுதாய பங்கு" பற்றிய கட்டுரைய பதிவு செய்தா ரொம்ப நல்லா இருக்கும். தேடிப் பார்க்கிறேன். இருந்தா பதிவு செய்யறேன்.
குசேலனில் இவர் உண்மையை சொல்லி இருக்கிறாராம். "இதற்கு முன் திரைப்படங்களில் பேசிய வசனமெல்லாம் ஒரு வசனகர்த்தாவோ இயக்குனரோ எழுதி கொடுத்து பேசினாராம்". ஏன் சார் அந்த மாதிரி வசனம் எழுதும் போது உங்க புத்தி எங்க போச்சு? உங்களுக்கு தமிழ் தெரியாதா? அப்போ தமிழ் மக்கள வெச்சு சம்பாதிக்கறத்துக்காக என்ன வேனா பேசுவீங்க. சுயபுத்தி இல்லாம காசு பாத்தா போதும் உங்களுக்கு. ஒரு பரபரப்ப உண்டாக்கனுன்னா பொது மேடையில "அவங்கள ஒதச்சா என்னன்னு" பேசுவீங்க. யாரு கண்டா? அது கூட யாராச்சும் எழுதி கொடுத்து பேசினேன்னு சொல்லி சுலபமா தப்பிக்கலாம். இந்த அறிக்கையும் ஒரு வேளை யாராச்சும் எழுதி கொடுத்துதான் வெளியிட்டு இருக்கிறாரோ என்னமோ? அடுத்த படம் "இயந்திரன்" வர்ற வரைக்கும் பொறுக்கனும். ஏன்னா இதுக்கான விளக்கம் அதுல தான் வரும். அப்புறம் அதுக்கு அடுத்த படத்துல "முன்னாடி படத்துல பேசினது ஒரு ரோபோ. அதுக்கு சொந்த புத்தி கிடையாது. அதுனால அத நம்பாதீங்க".. அப்டின்னு சொல்லுவார். என்ன ஒரே தில்லாலங்கடியா இருக்கு.
கடைசியா ஒரு வரி. ரஜினிகாந்த் பாணியில் சொல்ல வேண்டுமானால்:
இன்னும் தமிழ் மக்கள் இந்த நடிகரை நம்பினால், "தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது".
"நேரு காலத்து நினைவுகள்"
எம்.ஓ.மத்தாய். இவர் ஒரு மலையாளி. மறைந்த பிரதமர் நேருவின் நேரடி உதவியாளர். நேருவின் மறைவிற்கு பல ஆண்டுகளுக்குப் பின், "நேரு காலத்து நினைவுகள்' என்ற புத்தகத்தை எழுதி பரபரப்பு ஏற்படுத்தியவர். நேருவின் அந்தரங்கங்களை அறிந்தவர் இவர் என்பதால், இந்தப் புத்தகம் வெகு வேகமாக விற்பனையாகித் தீர்ந்தது.
அப்புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி: நேரு 1947ல் குளிர் காலத்தில் லக்னோவுக்கு வருவதாக இருந்தார். சரோஜினி நாயுடு, அப்போது உ.பி., ஆளுனராக இருந்தார். பத்மஜாவை நேரு திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு வதந்தியை பரப்பினார். பத்மஜாவும் மிக பரபரப்போடு இருந்தார். ஆனால், லேடி மவுண்ட் பேட்டனுடன், நேரு வந்து சேர்ந்ததும், சீறினார் பத்மஜா. உடனே, அவர் நேருவின் வீட்டிற்கு வந்து, பக்கத்து அறையில் தங்க ஆரம்பித்தார்.
"இவர் இப்படியே நிரந்தரமாக தங்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?' என்கிற நிலைமை ஏற்பட்ட போது, "கிழக்கிந்திய நாடுகளுக்கு சுற்றுலா போகும் வழியில் நேரு வீட்டில் தங்குவார் மவுண்ட் பேட்டனின் மனைவி...' என்று பத்மஜாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே கோபித்துக் கொண்டு வெளியில் போய் தங்கினார் பத்மஜா. இந்திராவைக் கூப்பிட்டனுப்பி, தனக்கு நேரு எழுதிய கடிதங்களை எல்லாம், தான் திருப்பிக் கொடுக்க விரும்புவதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னார் பத்மஜா!
உடனே, என்னிடம் வந்து இந்த விஷயத்தைச் சொன்னார் இந்திரா. நான் சிரித்தேன்!
ஒரு வருடம் சென்றதும், நேருவின் படுக்கை அறையில் லேடி மவுண்ட் பேட்டனின் இரண்டு புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து தன் படம் ஒன்றையும் நேரு பார்க்கும்படியாக மாட்டி வைத்தார் பத்மஜா; ஆனால், அதை அப்புறப்படுத்தி விட்டார் நேரு.
காசியிலிருந்து 1948ல் டில்லி வந்தார் ஷாரதா மாதா என்ற பெண் சந்நியாசி. அவருக்கு பேட்டியளித்தார் நேரு. ரொம்ப அழகாக, இளம் வயதில் இருந்தாள் சந்நியாசி. அதன் பிறகு அவள் அடிக்கடி நேருவைப் பார்க்க வந்து போய் கொண்டிருந்தாள்.
ஒருநாள் திடீரென்று மறைந்து விட்டார் ஷாரதா மாதா. 1949 நவம்பரில் பெங்களூரில் இருந்து கன்னி மடத்தினர், ஒரு கட்டுக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் கொடுத்தனுப்பினர்.
வட மாநிலத்திலிருந்து தங்கள் கன்னி மடத்திற்கு ஒரு பெண் வந்தாள் என்றும், அவள் ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள் என்றும், தான் யார் என்று சொல்ல மறுத்து விட்டாள் என்றும், குழந்தையையும், இந்தக் கடிதக் கட்டையும் அங்கு விட்டு விட்டு, எங்கோ போய் விட்டார் என்றும், இந்தியில் எழுதப்பட்ட கடிதங்கள் பிரதம மந்திரியால் எழுதப்பட்டவை என்று அறிந்து, அனுப்பியுள்ளதாகவும், கன்னி மடத் தலைவி (வெளிநாட்டு மாது) வந்தவரிடம் குறிப்பு அனுப்பி இருந்தார்.
இந்த விஷயங்கள் நேருவுக்குச் சொல்லப்பட்டன. அவர் கடிதங்களை வாங்கிக் கிழித்தெறிந்தார். சுபாஷ் சந்திரபோஸைப் பற்றிய ஒரு சம்பவம் இப்போது என் ஞாபகத்துக்கு வருகிறது. போசுடன் கூட இருந்த ஏ.ஸி.என்.நம்பியார் என்னிடம் சொன்னார் : ஜெர்மனியில், போசுடன் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு ஆஸ்திரியப் பெண், போஸ் மூலம் கருவுறவே, கருச்சிதைவு செய்ய வேண்டும் என்று நினைத்தார் போஸ். ஆனால், அவள் கருவுற்று பல மாதங்களாகி விட்டபடியால் கருச்சிதைவு ஆபத்தெனக் கருதப்பட்டது. அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் போசுக்கு விருப்பமில்லை. சீக்கிரமே, ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் ஜெர்மனியை விட்டு ஜப்பான் சென்று விட்டார் போஸ்.
இந்தியாவை விட்டு லேடி மவுண்ட்பேட்டன் போன பிறகும், நேருவுக்கு கடிதங்கள் எழுதுவார். "அவருக்கு' என்று போடப்பட்டு வரும் அந்தக் கடிதத்தை மட்டும் பிரிக்க எங்களுக்கு உரிமை கிடையாது. அதை நேருவே நேரடியாக பிரித்து படிப்பார்.
—பெரிய இடத்து சமாச்சாரங்கள் இப்படித்தான் இருக்கும் போலும்!
Thanks: Dinamalar Varamalar
எம்.ஓ.மத்தாய். இவர் ஒரு மலையாளி. மறைந்த பிரதமர் நேருவின் நேரடி உதவியாளர். நேருவின் மறைவிற்கு பல ஆண்டுகளுக்குப் பின், "நேரு காலத்து நினைவுகள்' என்ற புத்தகத்தை எழுதி பரபரப்பு ஏற்படுத்தியவர். நேருவின் அந்தரங்கங்களை அறிந்தவர் இவர் என்பதால், இந்தப் புத்தகம் வெகு வேகமாக விற்பனையாகித் தீர்ந்தது.
அப்புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி: நேரு 1947ல் குளிர் காலத்தில் லக்னோவுக்கு வருவதாக இருந்தார். சரோஜினி நாயுடு, அப்போது உ.பி., ஆளுனராக இருந்தார். பத்மஜாவை நேரு திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு வதந்தியை பரப்பினார். பத்மஜாவும் மிக பரபரப்போடு இருந்தார். ஆனால், லேடி மவுண்ட் பேட்டனுடன், நேரு வந்து சேர்ந்ததும், சீறினார் பத்மஜா. உடனே, அவர் நேருவின் வீட்டிற்கு வந்து, பக்கத்து அறையில் தங்க ஆரம்பித்தார்.
"இவர் இப்படியே நிரந்தரமாக தங்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?' என்கிற நிலைமை ஏற்பட்ட போது, "கிழக்கிந்திய நாடுகளுக்கு சுற்றுலா போகும் வழியில் நேரு வீட்டில் தங்குவார் மவுண்ட் பேட்டனின் மனைவி...' என்று பத்மஜாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே கோபித்துக் கொண்டு வெளியில் போய் தங்கினார் பத்மஜா. இந்திராவைக் கூப்பிட்டனுப்பி, தனக்கு நேரு எழுதிய கடிதங்களை எல்லாம், தான் திருப்பிக் கொடுக்க விரும்புவதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னார் பத்மஜா!
உடனே, என்னிடம் வந்து இந்த விஷயத்தைச் சொன்னார் இந்திரா. நான் சிரித்தேன்!
ஒரு வருடம் சென்றதும், நேருவின் படுக்கை அறையில் லேடி மவுண்ட் பேட்டனின் இரண்டு புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து தன் படம் ஒன்றையும் நேரு பார்க்கும்படியாக மாட்டி வைத்தார் பத்மஜா; ஆனால், அதை அப்புறப்படுத்தி விட்டார் நேரு.
காசியிலிருந்து 1948ல் டில்லி வந்தார் ஷாரதா மாதா என்ற பெண் சந்நியாசி. அவருக்கு பேட்டியளித்தார் நேரு. ரொம்ப அழகாக, இளம் வயதில் இருந்தாள் சந்நியாசி. அதன் பிறகு அவள் அடிக்கடி நேருவைப் பார்க்க வந்து போய் கொண்டிருந்தாள்.
ஒருநாள் திடீரென்று மறைந்து விட்டார் ஷாரதா மாதா. 1949 நவம்பரில் பெங்களூரில் இருந்து கன்னி மடத்தினர், ஒரு கட்டுக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் கொடுத்தனுப்பினர்.
வட மாநிலத்திலிருந்து தங்கள் கன்னி மடத்திற்கு ஒரு பெண் வந்தாள் என்றும், அவள் ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள் என்றும், தான் யார் என்று சொல்ல மறுத்து விட்டாள் என்றும், குழந்தையையும், இந்தக் கடிதக் கட்டையும் அங்கு விட்டு விட்டு, எங்கோ போய் விட்டார் என்றும், இந்தியில் எழுதப்பட்ட கடிதங்கள் பிரதம மந்திரியால் எழுதப்பட்டவை என்று அறிந்து, அனுப்பியுள்ளதாகவும், கன்னி மடத் தலைவி (வெளிநாட்டு மாது) வந்தவரிடம் குறிப்பு அனுப்பி இருந்தார்.
இந்த விஷயங்கள் நேருவுக்குச் சொல்லப்பட்டன. அவர் கடிதங்களை வாங்கிக் கிழித்தெறிந்தார். சுபாஷ் சந்திரபோஸைப் பற்றிய ஒரு சம்பவம் இப்போது என் ஞாபகத்துக்கு வருகிறது. போசுடன் கூட இருந்த ஏ.ஸி.என்.நம்பியார் என்னிடம் சொன்னார் : ஜெர்மனியில், போசுடன் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு ஆஸ்திரியப் பெண், போஸ் மூலம் கருவுறவே, கருச்சிதைவு செய்ய வேண்டும் என்று நினைத்தார் போஸ். ஆனால், அவள் கருவுற்று பல மாதங்களாகி விட்டபடியால் கருச்சிதைவு ஆபத்தெனக் கருதப்பட்டது. அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் போசுக்கு விருப்பமில்லை. சீக்கிரமே, ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் ஜெர்மனியை விட்டு ஜப்பான் சென்று விட்டார் போஸ்.
இந்தியாவை விட்டு லேடி மவுண்ட்பேட்டன் போன பிறகும், நேருவுக்கு கடிதங்கள் எழுதுவார். "அவருக்கு' என்று போடப்பட்டு வரும் அந்தக் கடிதத்தை மட்டும் பிரிக்க எங்களுக்கு உரிமை கிடையாது. அதை நேருவே நேரடியாக பிரித்து படிப்பார்.
—பெரிய இடத்து சமாச்சாரங்கள் இப்படித்தான் இருக்கும் போலும்!
Thanks: Dinamalar Varamalar
பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகள்
பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகள் பற்றிய செய்திகள் சமீபத்தில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. சினிமா நடிகைகளின் உடைகள் பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய காவலர் போர்வையில் இருக்கும் பெரிய மனிதர்களாகிய விமர்சகர்கள் விமர்சிப்பதும், அதற்கு நடிகைகள் மன்னிப்பு கேட்பதும் கிட்டத்தட்ட புளித்த செய்தியாகி விட்டது. சமீபத்தில் லீனா மணிமேகலை என்ற பெண் எழுத்தாளர்/சிந்தனையாளர் ஒரு நிகழ்சிக்காக அழைக்கப்பட்டிருந்த போது சென்னை லயோலா கல்லூரியில் துப்பட்டா அணியாமல் வந்ததற்காக அனுமதிக்கப்படாதது பற்றிய விவாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதில் அவர் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று ஆண்கள் தீர்மானிக்கிறார்கள் மற்றும் இந்த சுதந்திரம் கூட பெண்களுக்கு இல்லையெனில், வேறு எதில் சுதந்திரம் இருக்க முடியும் என்று கேட்கிறார். ரொம்ப நியாயமான கேள்விதான்.
அவர் துப்பட்டா அணியாமல் வந்ததற்காக அனுமதிக்கப்படாதது வருந்தத்தக்கதாயினும், அவரைப் போன்ற அறிவாளர் நாம் என்கு செல்கிறோம் அங்கு என்ன கோட்பாடுகள் (கட்டுப்பாடுகள்) என்பது பற்றி சிந்தித்திருக்க வேண்டும். அதோடு, ஒரு நிறுவனத்திற்கு செல்லும் போது அந்நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதுதான் ஒரு பண்பாளர் செய்யக்கூடிய கண்ணியமான செயலாகும். அதை விடுத்து இவர் பெண்ணியம் பேசுவதும் பெண் சுதந்திரம் பேசுவதும் சரியல்ல. இது அவருடைய சுயஆணவத்தை (ஈகோ) அந்த கல்லூரி நிர்வாகத்தினர் காயப்படுத்தியதற்கான வெளிப்பாட்டின் முகமூடியாகப் பயன்படுத்துகிறார்.
தமிழகத்தில் நடிகைகள் பற்றிய சர்ச்சைகளில் அரசியல்வாதிகள் மற்றும் பலர் விமர்சிப்பது ஒரு பச்சை மொள்ளமாரித்தனம். அதே நடிகைகள் திரைப்படத்தில் அவர்களுடைய அங்கங்கள் தெரிய உடையணிந்தும் ஆபாசமான அசைவுகளும் கொண்டிருப்பதில் தவறில்லையோ? ஒருவேளை திரையரங்க இருட்டில் இவர் தமிழர் என்பது மறந்து போகின்றதோ என்னவோ? தமிழக நடிகைகள் ஓரளவுக்கு மேல் "காமிக்க" மாட்டார்கள் என்பதால் வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து தமிழ் இயக்குநர்கள் காமக் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் இந்த திரைப்படங்களை 'சிறப்புக் காட்சி' பார்த்து விட்டு விமர்சிப்பது கொடுமை.
மீண்டும் இந்த உடை விஷயத்திற்கு வருவோம். நம்முடைய சமுதயம் மட்டுமல்லாது உலகில் உள்ள எல்லா நாகரிகங்களிலும் சமுதாயங்களிலும் எல்லா காலங்களிலும், பெண்களின் உடை பல்வேறு கூறுகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தெரிந்து கொள்ள நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. ஆதிமனிதர்கள் ஆடை அணிந்தது கிடையாது. அவர்கள் கண்டம் விட்டு கண்டம் செல்லும் போது அந்தந்த தட்ப வெட்ப சூழ்நிலைகளுக்கேற்ப அவர்களுக்கு உடை தேவைப்பட்டது. சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கடுக்கும் குளிரிலிருந்து காக்கவும், கடிக்கும் பூச்சிகள் மற்றும் ஆபத்தான ரசாயனங்களில் இருந்தும் காத்துக் கொள்ளவே ஆடைகள் தேவைப்பட்டது. இவ்வாறாகத் தோன்றிய ஆடை சமாச்சாரம் பின்பு ஒவ்வொரு நாகரிகத்திலும் அந்த சமுதாயத்தின் அடையாளமாக விளங்கிற்று. உதாரணத்திற்கு எகிப்திய உடைகள் ஒரு மாதிரியும், ஐரோப்பிய உடைகள் ஒரு மாதிரியும், ஆசிய கலாச்சாரங்களின் உடைகள் ஒரு மாதிரியும் இப்படி உடையைக் கண்டால் கலாச்சாரத்தை கண்டுகொள்ளும் அளவிற்கு அடையாளங்களாகின.
உடைகள் உடலின் பகுதிகளை மறைக்கவே என்றாலும் காலப்போக்கில் அவை சமுதாயத்தின் அளவுகோலாகவும், சமுதாயத்தை பிரதிபலிப்பதாகவும் ஆகிவிட்டன. கலாச்சாரங்கள் என்றுமே மாறும் தன்மை கொண்டவை. அவை ஒரே மாதிரியாக இருந்ததே இல்லை. இன்று நம்முடைய தலைவர்களும் தாய் தந்தையரும் சொல்லிக்கொண்டிருக்கும் கலாச்சாரத்திற்கு வயது கணக்கிட்டால் சில நூற்றாண்டுகளைத் தாண்டாது. தமிழச்சிகள் சில பத்து/ நூறு வருடங்களுக்கு முன்பு வரை ரவிக்கை அணிந்தது கிடையாது. தமிழ் மன்னர்கள் ஆண்ட காலங்களில் (சில நூற்றாண்டுகளுக்கு முன்பு) பெண்கள் மேலாடை அணியவில்லை. இன்று ஆடை என்பது பெண்ணின் அழகு பாகங்களை மறைத்திருந்தால் மட்டுமே கலாச்சாரத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது.
சாணக்கியருடைய அர்த்த சாஸ்திரத்தில் பெண்கள் பல மணம் செய்து கொள்வது பற்றியும், திருமணம் செய்து கொள்ளாமலே பல துணைவர்கள் மூலம் வாரிசுகளை பெற்றெடுப்பது பற்றியும், கணவனே வேறொருவன் மூலமாகத் தன் மணைவியை குழந்தை பெற்றெடுக்கச் செய்வது பற்றியும் குறிப்பிடுகிறார். இன்றைய சூழலில் நாம் இதை ஏற்றுக் கொள்வோமா?
ஆக எது கலாச்சாரம்? எது கலாச்சார சீரழிவு? முந்தைய காலங்களில் வாழ்ந்தவர்கள் கலாச்சார சீர்கேட்டில் வாழ்ந்தார்களா? நாம்தான் சரியான கலாச்சாரத்தில் வாழ்கிறோமா?
ஆக உடைக்கும் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமே கிடையாது. ஆடை என்பது அந்தந்த காலங்களில் அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப பல்வேறு கூறுகளுக்குட்பட்டு அமைகிறது. எந்தெந்த காலகட்டத்தில் என்ன உடை அணியப்பட்டிருக்கின்றதோ, அது கலாச்சாரமாகிறதே தவிர கலாச்சாரம் உடைகளை தீர்மானிப்பதில்லை. இன்றைய நிலையில் பெண்கள் தங்களுக்கு சவுகரியமான உடைகளை அணிவதும், அவர்களின் அழகை விளம்பரப் படுத்தும் வகையில் ஆடைகள் அணிவதும் பெண்களின் சுதந்திரத்தின் அளவுகோலாகவே பார்க்கலாம். இதற்கான ஆய்வு ஒன்றை அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர் மேற்கொண்டிருக்கிறார். அதில் அவர் கண்டறிந்திருப்பது: "பெண்கள் எவ்வளவுக்கெவ்வளவு உடை கொஞ்சமாக அணிகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு சுதந்திரம் பெற்றிருக்கின்றனர் என்று அர்த்தம். அது அவர்களின் 'தனித்தியங்கும் திறனைக்' (being independent) காட்டுவதாகக் இருக்கிறது. மேலும் பெண்கள் எவ்வளவு அதிகமாக படிக்கிறார்களோ அதற்கு ஏற்றாற் போல் ஆடையின் அளவு குறைகிறது. அதுமட்டுமல்லாது, ஆண்/பெண் சதவிகிதம் (sex ratio) பெண்களின் ஆடைகளை நிர்ணயிக்கிறது. பெண்களின் ஆடை குறையக் குறைய ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது அல்லது பொருளாதாரம் வளர வளர பெண்களின் ஆடை அளவு குறைகிறது". இவையெல்லாம் சாதாரணமாக சொல்லப்பட்ட கருத்துக்கள் அல்ல. இவை யாவும் புள்ளியியல் ரீதியாக நிருபித்து விளக்குகிறார்.
பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலை செய்து பொருளாதார ரீதியாக தனித்தியங்கும் திறன் பெறும் போது பெண்ணுக்கு ஆணின் துணை தேவைப்படுவது இல்லை. ஆனால் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருக்கும் போது அவள் ஆண்களுக்கு சொந்தமான பொருளாக (object) கருதப்படுகிறாள். சமுதாயத்தில் திருமணம் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரு பெண் ஆணுக்குச் சொந்தமான பொருளாக்கப்படுகிறாள். காலம் காலமாக பெண்கள் கற்பு, காமம், திருமணம் போன்றவற்றால் அடக்கப்பட்டிருக்கிறாள். உயிரை விடவும் கற்பு பெரிதெனப் போற்றப்பட்டு பெண்ணை அடிமைப்டுத்தியிருக்கின்றனர். வள்ளுவனில் ஆரம்பித்து இளங்கோவடிகள் வரை அந்த கற்பு சமாச்சாரத்தை புனிதமாகக் காட்டி பெண்களுக்கெதிரான ஆயுதமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படியாகக் கற்பிக்கப்பட்ட பெண்ணை, அந்த ஆண்மகன் ஒரு பொருளைப் பாதுகாக்கும் பொருட்டு அங்கங்கள் தெரியாத வகையில் ஆடை அணியச் செய்கிறான். ஆக அவனுக்குச் சொந்தமான பொருள் வேறு எவருடைய பார்வைக்கும் விருந்தாவது விரும்பத்தக்கதாக இல்லை. ஆனால் மாறி வரும் இன்றைய சமுதாயத்தில் பெண்கள் படித்து, ஆண்களுக்கு இணையாக பொருளீட்டி தனித்தியங்கும் திறன் பெறும் போது அவளுக்கு அந்த கட்டுப்பாடுகள் தேவைப்படுடதில்லை. உடல் ரீதியான தேவைகளுக்கு அவள் பல ஆண்களிடம் அந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நியாயமாகிறது.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஆடை என்பது மனித குலத்தின் பெருக்கத்திற்கான கருவியாகவும் செயல்படுகிறது. பெண்கள் குறைவாக ஆடை அணிந்தாலும் சரி, முழுக்கப் போர்த்தியிருந்தாலும் சரி அது பல சமயங்களில் ஆண்களைக் கவர்வதாக அமைகிறது. ஐரோப்பிய கலாச்சாரங்களில் மிக நீளமான உடை அணிந்தாலும் பெண்களின் வளைவுகளை கச்சிதமாக காட்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல இப்போது நம்முடைய கலாச்சாரத்தில் அணியப்படும் சேலை மற்றும் ரவிக்கையும் ஆண்களை கவர்வதாகவே இருக்கின்றது. ஆக ஆண்கள் பெண்களைக் கவர்வதற்காகவும், பெண்கள் ஆண்களைக் கவர்வதற்காகவும் 'கூட' உடை பயன்படுகிறது. இப்போது ஆபாசம் அல்லது எதிர்க்கப்படும் உடைகளை சற்றே உற்று கவனித்தால் அவை எல்லாம், பெண்ணின் வளைவுகளைத் தெளிவாகக் காண்பிப்பதாவகே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஜீன்ஸ் எனப்படும் மேலை நாட்டு ஆடை ஆண்கள் பெண்கள் இருவருமே அணிகிற ஒரு ஆடை. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உண்டு. ஆண்களுடைய ஜீன்ஸ் 'தொள தொள' எனவும், பெண்களுடையது இறுக்கமாகவும் இருக்கும். அதேபோண்று பெண்களுக்கான பிரத்தியேக டி-சர்ட் கூட இறுக்கமாக இருக்கும். இதை உற்று கவனித்தால், ஜீன்ஸ் பெண்களின் பின்னழகு மற்றும் கால்கள் அழகையும், மேல் சட்டைகள் பெண்களின் மார்பகத்தின் அழகையும் ஆடை மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருக்கிறது. பெண்களின் மேல் சட்டைகளில் கழுத்துக்கும் மார்புக்கும் இருக்கின்ற இடைவெளியை மூடாமல் தோல் தெரியும் பகுதியை அதிகரிப்பது அந்த அழகின் உதாரணத்தை (sample) உணர்த்துகிறது. இவையெல்லாத்துக்கும் ஆண்கள் மட்டும் காரணம் அல்ல. பெண்களுக்கு அவர்களின் அழகுக்கான அங்கீகாரம் தேவைப்படுகிறது. அவர்கள் மற்றவர்களின் கவனத்திற்குள்ளாவதை விரும்புகிறார்கள். இதை குற்றம் சொல்ல இயலாது. ஆனால் அதே சமயம் இவ்வாறு உடுத்திக் கொள்ளுகையில் ஆண்கள் பார்த்தால், அதையும் குற்றம் சொல்லக்கூடாது. சுருக்கமாக, இன்றைய சூழலில் பெண்கள் பேன்ட் (pants) அணிவது தேவையாகிறது. பெண்கள் இன்று எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள். மோட்டார் பைக் ஓட்டுகிறார்கள். ஆக அவர்களுக்கு சவுகரியமானதும் கூட.
பெண்களுக்கு இரவு நேரங்களில் சவுகரியமாக இருக்கவும், கவர்ச்சியக இருக்கவும் பள்ளியறைகளில் (bedroom) அணிந்து கொள்ளவும் வடிவமைக்கப்பட்டது "நைட்டி" (NightWear) என்ற ஆடை. அது இன்றைய கால கட்டத்தில் இரவில் பயன்படுத்துவது மட்டுமன்றி, பகலிலும் அணிந்து கொண்டு தெருவிலும் அலைந்தால் இளைஞர்களின் மனசு அலை பாயாமல் என்ன செய்யும்?
அதே சமயம் ஆண்களுக்கு, பெண்களின் சில பாகங்களின் மீது அபரிமிதமான ஈர்ப்பு இருப்பது உடல் ரீதியான ஒன்று. அதை யாராலும் தடுக்க இயலாது. அந்த பாகங்கள் காலங்களுக்கேற்பவும், கலாச்சாரங்களுக்கேற்பவும் மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக ஒரு சீன கலாச்சாரத்தில் பெண்களின் கால்கள் மூடப்பட்டிருக்கும். அவை அந்நாட்டு ஆண்களுக்கு காம இச்சையை தூண்டுவதாக இருந்திருக்கிறது. அதே போல ஒரு ஆப்பிரிக்க நாட்டில், கழுத்துப் பகுதியை பெண்கள் மறைத்திருந்தனர். அவர்களின் மார்பகங்கள் திறந்தே இருந்தன. ஆனால் அந்நாட்டு ஆண்களுக்கு, பெண்ணின் மார்பகங்களை விட கழுத்துப்பகுதியே காம இச்சையை தூண்டியிருக்கிறது. ஆக இது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டே இருப்பது. ஆக இந்த உடல் ரீதியான ஈர்ப்புகளை கடுமையான சட்டம் கொண்டொ அல்லது சமுதாயக் கோட்பாடுகளாலோ எள்ளளவும் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.
பெண்கள் அவர்களின் உடைகளை தீர்மானிப்பது அவர்களின் சுதந்திரம். அதே சமயம், அதற்கான நேர் விளைவுகளையும், எதிர் விளைவுகளையும் சந்திப்பதும் அவர்கள் பொறுப்பு. அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் விரயமும் அவர்களையே சேரும்; அவர்களையே சாரும். ஆடைகளில் இருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டு கற்பழிப்பு வழக்குகளில் ஆண் சமுதாயத்தையே மொத்தமாக குற்றம் சொல்வதும் எற்றுக் கொள்ளத் தகாததாகிறது.
பெண்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடை அணிவதால் அவர்கள் சுதந்திரமடைகிறார்கள் என்பது உண்மையானால், அது வரவேற்கத்தக்கது. ஆனால் நம்முடைய hypocrite சமுதாயத்தில் "அரைகுறை ஆடையை ரசித்துவிட்டு கலாச்சார சீரழிவு பற்றி கவலைப்படுபவர்களும்", "அங்கம் தெரிய ஆடை அணிந்து விட்டு, அந்த இளைஞன் என்னை உற்றுப் பார்க்கிறான்" என்று சொல்லும் இருதரப்பினர் இருக்கும் வரை இது முடியப் போகும் பிரச்சினை அல்ல.
மீண்டும் சந்திப்போம்.
(தங்கள் பார்வையில் கொஞ்சம் பச்சையாகவும் கொச்சையாகவும் இருந்தால் மன்னிக்கவும். இந்த தலைப்பை அவ்வாறு அலசுவதே சரி என்று தோன்றியது.)
பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகள் பற்றிய செய்திகள் சமீபத்தில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. சினிமா நடிகைகளின் உடைகள் பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய காவலர் போர்வையில் இருக்கும் பெரிய மனிதர்களாகிய விமர்சகர்கள் விமர்சிப்பதும், அதற்கு நடிகைகள் மன்னிப்பு கேட்பதும் கிட்டத்தட்ட புளித்த செய்தியாகி விட்டது. சமீபத்தில் லீனா மணிமேகலை என்ற பெண் எழுத்தாளர்/சிந்தனையாளர் ஒரு நிகழ்சிக்காக அழைக்கப்பட்டிருந்த போது சென்னை லயோலா கல்லூரியில் துப்பட்டா அணியாமல் வந்ததற்காக அனுமதிக்கப்படாதது பற்றிய விவாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதில் அவர் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று ஆண்கள் தீர்மானிக்கிறார்கள் மற்றும் இந்த சுதந்திரம் கூட பெண்களுக்கு இல்லையெனில், வேறு எதில் சுதந்திரம் இருக்க முடியும் என்று கேட்கிறார். ரொம்ப நியாயமான கேள்விதான்.
அவர் துப்பட்டா அணியாமல் வந்ததற்காக அனுமதிக்கப்படாதது வருந்தத்தக்கதாயினும், அவரைப் போன்ற அறிவாளர் நாம் என்கு செல்கிறோம் அங்கு என்ன கோட்பாடுகள் (கட்டுப்பாடுகள்) என்பது பற்றி சிந்தித்திருக்க வேண்டும். அதோடு, ஒரு நிறுவனத்திற்கு செல்லும் போது அந்நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதுதான் ஒரு பண்பாளர் செய்யக்கூடிய கண்ணியமான செயலாகும். அதை விடுத்து இவர் பெண்ணியம் பேசுவதும் பெண் சுதந்திரம் பேசுவதும் சரியல்ல. இது அவருடைய சுயஆணவத்தை (ஈகோ) அந்த கல்லூரி நிர்வாகத்தினர் காயப்படுத்தியதற்கான வெளிப்பாட்டின் முகமூடியாகப் பயன்படுத்துகிறார்.
தமிழகத்தில் நடிகைகள் பற்றிய சர்ச்சைகளில் அரசியல்வாதிகள் மற்றும் பலர் விமர்சிப்பது ஒரு பச்சை மொள்ளமாரித்தனம். அதே நடிகைகள் திரைப்படத்தில் அவர்களுடைய அங்கங்கள் தெரிய உடையணிந்தும் ஆபாசமான அசைவுகளும் கொண்டிருப்பதில் தவறில்லையோ? ஒருவேளை திரையரங்க இருட்டில் இவர் தமிழர் என்பது மறந்து போகின்றதோ என்னவோ? தமிழக நடிகைகள் ஓரளவுக்கு மேல் "காமிக்க" மாட்டார்கள் என்பதால் வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து தமிழ் இயக்குநர்கள் காமக் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் இந்த திரைப்படங்களை 'சிறப்புக் காட்சி' பார்த்து விட்டு விமர்சிப்பது கொடுமை.
மீண்டும் இந்த உடை விஷயத்திற்கு வருவோம். நம்முடைய சமுதயம் மட்டுமல்லாது உலகில் உள்ள எல்லா நாகரிகங்களிலும் சமுதாயங்களிலும் எல்லா காலங்களிலும், பெண்களின் உடை பல்வேறு கூறுகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தெரிந்து கொள்ள நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. ஆதிமனிதர்கள் ஆடை அணிந்தது கிடையாது. அவர்கள் கண்டம் விட்டு கண்டம் செல்லும் போது அந்தந்த தட்ப வெட்ப சூழ்நிலைகளுக்கேற்ப அவர்களுக்கு உடை தேவைப்பட்டது. சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கடுக்கும் குளிரிலிருந்து காக்கவும், கடிக்கும் பூச்சிகள் மற்றும் ஆபத்தான ரசாயனங்களில் இருந்தும் காத்துக் கொள்ளவே ஆடைகள் தேவைப்பட்டது. இவ்வாறாகத் தோன்றிய ஆடை சமாச்சாரம் பின்பு ஒவ்வொரு நாகரிகத்திலும் அந்த சமுதாயத்தின் அடையாளமாக விளங்கிற்று. உதாரணத்திற்கு எகிப்திய உடைகள் ஒரு மாதிரியும், ஐரோப்பிய உடைகள் ஒரு மாதிரியும், ஆசிய கலாச்சாரங்களின் உடைகள் ஒரு மாதிரியும் இப்படி உடையைக் கண்டால் கலாச்சாரத்தை கண்டுகொள்ளும் அளவிற்கு அடையாளங்களாகின.
உடைகள் உடலின் பகுதிகளை மறைக்கவே என்றாலும் காலப்போக்கில் அவை சமுதாயத்தின் அளவுகோலாகவும், சமுதாயத்தை பிரதிபலிப்பதாகவும் ஆகிவிட்டன. கலாச்சாரங்கள் என்றுமே மாறும் தன்மை கொண்டவை. அவை ஒரே மாதிரியாக இருந்ததே இல்லை. இன்று நம்முடைய தலைவர்களும் தாய் தந்தையரும் சொல்லிக்கொண்டிருக்கும் கலாச்சாரத்திற்கு வயது கணக்கிட்டால் சில நூற்றாண்டுகளைத் தாண்டாது. தமிழச்சிகள் சில பத்து/ நூறு வருடங்களுக்கு முன்பு வரை ரவிக்கை அணிந்தது கிடையாது. தமிழ் மன்னர்கள் ஆண்ட காலங்களில் (சில நூற்றாண்டுகளுக்கு முன்பு) பெண்கள் மேலாடை அணியவில்லை. இன்று ஆடை என்பது பெண்ணின் அழகு பாகங்களை மறைத்திருந்தால் மட்டுமே கலாச்சாரத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது.
சாணக்கியருடைய அர்த்த சாஸ்திரத்தில் பெண்கள் பல மணம் செய்து கொள்வது பற்றியும், திருமணம் செய்து கொள்ளாமலே பல துணைவர்கள் மூலம் வாரிசுகளை பெற்றெடுப்பது பற்றியும், கணவனே வேறொருவன் மூலமாகத் தன் மணைவியை குழந்தை பெற்றெடுக்கச் செய்வது பற்றியும் குறிப்பிடுகிறார். இன்றைய சூழலில் நாம் இதை ஏற்றுக் கொள்வோமா?
ஆக எது கலாச்சாரம்? எது கலாச்சார சீரழிவு? முந்தைய காலங்களில் வாழ்ந்தவர்கள் கலாச்சார சீர்கேட்டில் வாழ்ந்தார்களா? நாம்தான் சரியான கலாச்சாரத்தில் வாழ்கிறோமா?
ஆக உடைக்கும் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமே கிடையாது. ஆடை என்பது அந்தந்த காலங்களில் அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப பல்வேறு கூறுகளுக்குட்பட்டு அமைகிறது. எந்தெந்த காலகட்டத்தில் என்ன உடை அணியப்பட்டிருக்கின்றதோ, அது கலாச்சாரமாகிறதே தவிர கலாச்சாரம் உடைகளை தீர்மானிப்பதில்லை. இன்றைய நிலையில் பெண்கள் தங்களுக்கு சவுகரியமான உடைகளை அணிவதும், அவர்களின் அழகை விளம்பரப் படுத்தும் வகையில் ஆடைகள் அணிவதும் பெண்களின் சுதந்திரத்தின் அளவுகோலாகவே பார்க்கலாம். இதற்கான ஆய்வு ஒன்றை அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர் மேற்கொண்டிருக்கிறார். அதில் அவர் கண்டறிந்திருப்பது: "பெண்கள் எவ்வளவுக்கெவ்வளவு உடை கொஞ்சமாக அணிகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு சுதந்திரம் பெற்றிருக்கின்றனர் என்று அர்த்தம். அது அவர்களின் 'தனித்தியங்கும் திறனைக்' (being independent) காட்டுவதாகக் இருக்கிறது. மேலும் பெண்கள் எவ்வளவு அதிகமாக படிக்கிறார்களோ அதற்கு ஏற்றாற் போல் ஆடையின் அளவு குறைகிறது. அதுமட்டுமல்லாது, ஆண்/பெண் சதவிகிதம் (sex ratio) பெண்களின் ஆடைகளை நிர்ணயிக்கிறது. பெண்களின் ஆடை குறையக் குறைய ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது அல்லது பொருளாதாரம் வளர வளர பெண்களின் ஆடை அளவு குறைகிறது". இவையெல்லாம் சாதாரணமாக சொல்லப்பட்ட கருத்துக்கள் அல்ல. இவை யாவும் புள்ளியியல் ரீதியாக நிருபித்து விளக்குகிறார்.
பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலை செய்து பொருளாதார ரீதியாக தனித்தியங்கும் திறன் பெறும் போது பெண்ணுக்கு ஆணின் துணை தேவைப்படுவது இல்லை. ஆனால் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருக்கும் போது அவள் ஆண்களுக்கு சொந்தமான பொருளாக (object) கருதப்படுகிறாள். சமுதாயத்தில் திருமணம் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரு பெண் ஆணுக்குச் சொந்தமான பொருளாக்கப்படுகிறாள். காலம் காலமாக பெண்கள் கற்பு, காமம், திருமணம் போன்றவற்றால் அடக்கப்பட்டிருக்கிறாள். உயிரை விடவும் கற்பு பெரிதெனப் போற்றப்பட்டு பெண்ணை அடிமைப்டுத்தியிருக்கின்றனர். வள்ளுவனில் ஆரம்பித்து இளங்கோவடிகள் வரை அந்த கற்பு சமாச்சாரத்தை புனிதமாகக் காட்டி பெண்களுக்கெதிரான ஆயுதமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படியாகக் கற்பிக்கப்பட்ட பெண்ணை, அந்த ஆண்மகன் ஒரு பொருளைப் பாதுகாக்கும் பொருட்டு அங்கங்கள் தெரியாத வகையில் ஆடை அணியச் செய்கிறான். ஆக அவனுக்குச் சொந்தமான பொருள் வேறு எவருடைய பார்வைக்கும் விருந்தாவது விரும்பத்தக்கதாக இல்லை. ஆனால் மாறி வரும் இன்றைய சமுதாயத்தில் பெண்கள் படித்து, ஆண்களுக்கு இணையாக பொருளீட்டி தனித்தியங்கும் திறன் பெறும் போது அவளுக்கு அந்த கட்டுப்பாடுகள் தேவைப்படுடதில்லை. உடல் ரீதியான தேவைகளுக்கு அவள் பல ஆண்களிடம் அந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நியாயமாகிறது.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஆடை என்பது மனித குலத்தின் பெருக்கத்திற்கான கருவியாகவும் செயல்படுகிறது. பெண்கள் குறைவாக ஆடை அணிந்தாலும் சரி, முழுக்கப் போர்த்தியிருந்தாலும் சரி அது பல சமயங்களில் ஆண்களைக் கவர்வதாக அமைகிறது. ஐரோப்பிய கலாச்சாரங்களில் மிக நீளமான உடை அணிந்தாலும் பெண்களின் வளைவுகளை கச்சிதமாக காட்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல இப்போது நம்முடைய கலாச்சாரத்தில் அணியப்படும் சேலை மற்றும் ரவிக்கையும் ஆண்களை கவர்வதாகவே இருக்கின்றது. ஆக ஆண்கள் பெண்களைக் கவர்வதற்காகவும், பெண்கள் ஆண்களைக் கவர்வதற்காகவும் 'கூட' உடை பயன்படுகிறது. இப்போது ஆபாசம் அல்லது எதிர்க்கப்படும் உடைகளை சற்றே உற்று கவனித்தால் அவை எல்லாம், பெண்ணின் வளைவுகளைத் தெளிவாகக் காண்பிப்பதாவகே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஜீன்ஸ் எனப்படும் மேலை நாட்டு ஆடை ஆண்கள் பெண்கள் இருவருமே அணிகிற ஒரு ஆடை. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உண்டு. ஆண்களுடைய ஜீன்ஸ் 'தொள தொள' எனவும், பெண்களுடையது இறுக்கமாகவும் இருக்கும். அதேபோண்று பெண்களுக்கான பிரத்தியேக டி-சர்ட் கூட இறுக்கமாக இருக்கும். இதை உற்று கவனித்தால், ஜீன்ஸ் பெண்களின் பின்னழகு மற்றும் கால்கள் அழகையும், மேல் சட்டைகள் பெண்களின் மார்பகத்தின் அழகையும் ஆடை மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருக்கிறது. பெண்களின் மேல் சட்டைகளில் கழுத்துக்கும் மார்புக்கும் இருக்கின்ற இடைவெளியை மூடாமல் தோல் தெரியும் பகுதியை அதிகரிப்பது அந்த அழகின் உதாரணத்தை (sample) உணர்த்துகிறது. இவையெல்லாத்துக்கும் ஆண்கள் மட்டும் காரணம் அல்ல. பெண்களுக்கு அவர்களின் அழகுக்கான அங்கீகாரம் தேவைப்படுகிறது. அவர்கள் மற்றவர்களின் கவனத்திற்குள்ளாவதை விரும்புகிறார்கள். இதை குற்றம் சொல்ல இயலாது. ஆனால் அதே சமயம் இவ்வாறு உடுத்திக் கொள்ளுகையில் ஆண்கள் பார்த்தால், அதையும் குற்றம் சொல்லக்கூடாது. சுருக்கமாக, இன்றைய சூழலில் பெண்கள் பேன்ட் (pants) அணிவது தேவையாகிறது. பெண்கள் இன்று எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள். மோட்டார் பைக் ஓட்டுகிறார்கள். ஆக அவர்களுக்கு சவுகரியமானதும் கூட.
பெண்களுக்கு இரவு நேரங்களில் சவுகரியமாக இருக்கவும், கவர்ச்சியக இருக்கவும் பள்ளியறைகளில் (bedroom) அணிந்து கொள்ளவும் வடிவமைக்கப்பட்டது "நைட்டி" (NightWear) என்ற ஆடை. அது இன்றைய கால கட்டத்தில் இரவில் பயன்படுத்துவது மட்டுமன்றி, பகலிலும் அணிந்து கொண்டு தெருவிலும் அலைந்தால் இளைஞர்களின் மனசு அலை பாயாமல் என்ன செய்யும்?
அதே சமயம் ஆண்களுக்கு, பெண்களின் சில பாகங்களின் மீது அபரிமிதமான ஈர்ப்பு இருப்பது உடல் ரீதியான ஒன்று. அதை யாராலும் தடுக்க இயலாது. அந்த பாகங்கள் காலங்களுக்கேற்பவும், கலாச்சாரங்களுக்கேற்பவும் மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக ஒரு சீன கலாச்சாரத்தில் பெண்களின் கால்கள் மூடப்பட்டிருக்கும். அவை அந்நாட்டு ஆண்களுக்கு காம இச்சையை தூண்டுவதாக இருந்திருக்கிறது. அதே போல ஒரு ஆப்பிரிக்க நாட்டில், கழுத்துப் பகுதியை பெண்கள் மறைத்திருந்தனர். அவர்களின் மார்பகங்கள் திறந்தே இருந்தன. ஆனால் அந்நாட்டு ஆண்களுக்கு, பெண்ணின் மார்பகங்களை விட கழுத்துப்பகுதியே காம இச்சையை தூண்டியிருக்கிறது. ஆக இது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டே இருப்பது. ஆக இந்த உடல் ரீதியான ஈர்ப்புகளை கடுமையான சட்டம் கொண்டொ அல்லது சமுதாயக் கோட்பாடுகளாலோ எள்ளளவும் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.
பெண்கள் அவர்களின் உடைகளை தீர்மானிப்பது அவர்களின் சுதந்திரம். அதே சமயம், அதற்கான நேர் விளைவுகளையும், எதிர் விளைவுகளையும் சந்திப்பதும் அவர்கள் பொறுப்பு. அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் விரயமும் அவர்களையே சேரும்; அவர்களையே சாரும். ஆடைகளில் இருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டு கற்பழிப்பு வழக்குகளில் ஆண் சமுதாயத்தையே மொத்தமாக குற்றம் சொல்வதும் எற்றுக் கொள்ளத் தகாததாகிறது.
பெண்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடை அணிவதால் அவர்கள் சுதந்திரமடைகிறார்கள் என்பது உண்மையானால், அது வரவேற்கத்தக்கது. ஆனால் நம்முடைய hypocrite சமுதாயத்தில் "அரைகுறை ஆடையை ரசித்துவிட்டு கலாச்சார சீரழிவு பற்றி கவலைப்படுபவர்களும்", "அங்கம் தெரிய ஆடை அணிந்து விட்டு, அந்த இளைஞன் என்னை உற்றுப் பார்க்கிறான்" என்று சொல்லும் இருதரப்பினர் இருக்கும் வரை இது முடியப் போகும் பிரச்சினை அல்ல.
மீண்டும் சந்திப்போம்.
(தங்கள் பார்வையில் கொஞ்சம் பச்சையாகவும் கொச்சையாகவும் இருந்தால் மன்னிக்கவும். இந்த தலைப்பை அவ்வாறு அலசுவதே சரி என்று தோன்றியது.)
இந்தியர்கள் அமெரிக்காவில் இன்னொரு கூவம் ஏற்படுத்துகிறார்களா? - பாகம் 2
எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. என் அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன். இந்த விஷயத்தில் நான் நேரடியாக பாதிக்கப்பட்டதால்: YES, I AM BIASED.
முதல் பாகம் எழுதி மூன்று வாரங்கள் ஆயிற்று. இடையில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறிக்கொண்டே இருக்கு. எல்லாம் தலவலி. அப்புறம் இன்னிக்கு எழுதறத்துக்கு இன்னொரு முக்கியமான காரணம், ஆன்லைன் வீடியோஸ் எல்லாமே பாத்தாச்சு. இதுக்கு மேல பார்க்கறத்துக்கு ஒன்னுமே இல்லைன்னு ஆனத்துக்கு பிறகு எழுதலாமேன்னு தோனித்து.
கன்சல்டன்சி கொடுமை
இங்கு படித்து முடித்ததும் உடனே வேலை தேடியே ஆக வேண்டிய கட்டாயம். வீட்டுல உட்கார்ந்து வேர்கடலை சாப்பிட்ட படி வேலை தேட முடியாது. இங்க ஒரு மாசம் வேலை இல்லாம இருந்தா முடிஞ்சுது கதை (செல்போன் அது இதுன்னு கணக்கு போட்டா ஒரு 200 டாலர் இல்லாம கத ஓடாது). அதுனால என்னமோ நம்மள ஒருத்தன் கத்தியோட துரத்திகிட்டு வரும்போது எப்டி ஓடுவோமோ அப்டி ஒரு பதற்றம், வேகம் எல்லாம். யாராச்சும் சொந்தகாரங்க, நண்பர்கள் இருந்தா நல்லது; அவங்க வீட்ல போயி ஓசி சாப்பாடு சாப்பிட்டுகிட்டு வேலை தேடலாம். அது இல்லைன்னா ரொம்ப கஷ்டம்.
சரி, முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அமெரிக்கால வேலை செய்யறத்துக்கு அந்தந்த தகுதிகளுக்கு ஏற்றார்போல் விசா (visa-H1, L1, B1, J1...) இருக்கு. இதுல ரொம்ப பிரபலமானது H-1 விசா. நீங்க செய்தித்தாள் அங்க இங்க நிறையா படிச்சு இருப்பீங்க. இந்த H1 விசாவுக்கு அப்டி என்ன மவுசுன்னா... பின்னாடி இந்த ஊரோட 'பச்ச கார்டு' (Green Card), அமெரிக்க குடியுரிமைக்கு எல்லாம் அப்ளை பன்ன ரொம்ப வசதி. நம்மாளு ஊர்லேந்து வரும் போதே கணக்கு போட்டுட்டுதான்யா வர்றான். மொதல்ல ரெண்டு வருசம் படிப்பு, அப்புறம் H1, அப்புறம் கல்யாணம், பச்ச அட்டை, குடியுரிமை - இதுதான் டிபிகல் ப்ளான். ஊர்ல தானியம் கொட்டி வைப்பதற்கு இருக்கும் குதிர்ல நம்மாளு பணம் சேக்கனும்னு கணக்கு போடறான்.
விசா கதய விட்டுட்டு கன்சல்டன்சி பக்கம் கொஞ்சம் திரும்பி பார்ப்போம். இந்த 'கன்சல்டன்சி' என்னன்னு பச்சையா சொல்லனும்னா நம்ம குடிய கெடுக்க வந்தவனுங்க. நெசந்தான். ஏதோ ஒன்னு ரெண்டு பேர் நல்லவங்களா இருந்தா அவங்க எச்ஸப்ஷன்ஸ். Exception does not make rule. 90% கன்சல்டன்சி வெச்சிருக்கிறவன் ஏமாத்திதான் சார் பொழைக்கறான். எவனோ ஒருத்தன் சாப்பட்டுல மண் அள்ளி போட்டுட்டு தான் நம்மாளு டாலர ரூபாயா மாத்தறான். இல்லேன்னு சத்தியம் பண்ண சொல்லுங்க நான் நாளைக்கே ஊருக்கு மூட்டை கட்டிகிட்டு கெளம்பிடறேன் (பொய் சத்தியம் செல்லாது; என்ன மாதிரி ஆளுங்கள ஊர விட்டு கெளப்பினா போதும்னு பொய் சத்தியம் செய்வாங்க).
சுருக்கமா சொல்லனும்னா, தகுதி இல்லாத ஆட்களை போலியா அமெரிக்க கம்பெனிகள்ல வேலைக்கு அமர்த்தறது. இதுதான் இவங்க பண்றது. இது போலின்னு தெரிஞ்சும் தொடர்ந்து நடந்துகிட்டேதான் இருக்கு. ஏன்னுதான் புரியல. அது ஒரு கருப்பு உலகம். நம்முடைய கண்களை கட்டித்தான் அங்கே உள்ளே அனுமதிப்பார்கள். வாய்கள் உண்மை பேசக்கூடாது. அசிங்கப்பட்டாலும், அட! இது என்ன நம்ம ஊரா? அசிங்கப்பட்டாதான் என்ன? பரவாயில்ல என்று பழகிக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தத்தில் அங்கே நான் கெளரவமான திருடனாக்கப்படுகிறேன். காலையிலிருந்து பசியோடு வேலை செய்து கிடைத்த ஒரு ரூபாயில் மாலை நேரம் கால் வயிற்றிற்கு சாப்பிடும் சிறுவனிடமிருந்து திருடி உண்ணும் கீழ்த்தரமானவனாக்கப் படுகிறேன்.
இன்றைய தேதியில் ஆண்டொன்றுக்கு மொத்தம் 65,000 H1 விசா அனுமதிக்கப்படுகிறது. இதில் எழுபதிலிருந்து எண்பது சதவிகிதம் நம்ம ஆட்கள் தான். அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர்களுக்காக தனியாக 20,000 H1 விசா அனுமதி உண்டு. சென்ற ஆண்டு, முதல் நாளிலேயே இந்த அளவைத்தாண்டி எல்லோரையும் 'ஆ' காட்ட வெச்சுது. அதுக்கு லாட்டரி கொண்டு வந்தாங்க. அதாவது வந்த அப்ளிகேஷன்ல செலக்ட் பண்றதுக்காக. ஊர் பாஷைல சொல்லனும்னா குலுக்கி போட்டு எடுக்கறது. ஆக நமக்கு கெடைக்குமா கெடைக்காதோன்னு பயம். அதுக்கும் ஒரு வழி கண்டு புடிச்சோம். என்னன்னா, நம்மாளு ஒருத்தன் ஒரு விசாவுக்கு அப்ளை பண்றது இல்ல. மல்டிபுள் அப்ளிகேஷன்ஸ். கிடைக்கின்ற வாய்ப்பை பெருக்குவதற்கான முயற்சி. அதுக்காகவே இந்த தடவை வெச்சாங்கல்ல ஆப்பு. இந்த முறை ஒருவர் ஒரு அப்ளிகேஷன்தான் போடலாம். அவனும் என்னன்னமோ செஞ்சு பாக்கறான். நாங்க உடுவோமா என்ன?
இந்த கதயெல்லாம் உடு; இதுல உனக்கென்ன ப்ரச்சன? அப்டின்னு கேக்கறது காதுல உழுவுது. ஆம். பாதிக்கப்பட்டேன். நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.
என்னோட படிச்சவங்க எல்லாம் 'ஆறு' வருசம் அனுபவம் போட்டு வேல கேக்கறாங்க சார். நானும் அவங்களும் சேந்து ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ணினா யார எடுப்பான் சொல்லுங்க? இவங்க எல்லாரும் ஊர விட்டு வந்தே ரெண்டு வருஷந்தான் ஆவுது. அதுக்குள்ள ஆறு வருச அனுபவம். நேத்தி வரைக்கும் என்னோட மொக்க போட்டவன், அனுபவமுள்ள ஆபீசர் ஆயிடறான் சார்.
நானும் நெறைய கன்சல்டன்சிகிட்ட பேசி பாத்துட்டேன். ஒருத்தனுக்கும் நாம தப்பு பண்றோங்கற உணர்வே இல்லைங்க. அடங்கொக்கமக்கா! சரி, எனக்கு அஞ்சு வருசம் அனுபவம் போட்டா நான் எப்டிடா இன்டர்வ்யூல பாஸ் பண்ணுவேன்? அப்டின்னு கேட்டா... அதுக்குத்தான் ஒரு ஐடியா இருக்குல்ல அப்டிங்கறான்; சார்...நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. நம்ம கிட்ட அனுபவஸ்தர்கள் நிறையா இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர் நீங்கன்னு சொல்லி டெலிபோன்ல இன்டெர்வியூ முடிச்சுட்டா போவுது. அடங்கொன்னியா! இப்போ சரி, நான் வேலைக்கு போனதுக்கப்புறம் சொதப்பினா என்ன பண்றது? அதுக்கும் ரெடியா ஒரு பதில்: "உனக்கு மூளையே இல்ல சார். இவ்ளோ தூரம் யோசிக்கறவன் இத எப்டி விடுவேன்? அதுக்கும் கைவசம் ஒரு மொள்ளமாரித்தனம் இருக்கு. நீங்க அங்க போயி வேல தெரிலைன்னா எங்களுக்கு ஒரு ஈமெயில் பண்ணுங்க... அடுத்த நாள் அத நாங்க எப்டி பண்றதுன்னு சொல்லி ரிப்ளை பண்றோம்"
அட! தப்பு பண்றத விடுங்க. மாட்டிகிட்டு மானங்கெட்டு அசிங்கப்பட்டா என்ன பண்றதுன்னு கூட பயம் கெடயாது. எனக்கு தெரிஞ்ச ஒருத்தன ஒரு கம்பெனில உண்மை தெரிஞ்சு விரட்டி விட்டுட்டானுங்க. அவன் என்ன செஞ்சான்? செத்தா போயிட்டான்? அடுத்த கம்பெனில போயி வேலைக்கு சேந்தாச்சு. ஆக என் அருமை நண்பன் சுயமரியாதை இல்லாத ஜடமாகிறான்.
யப்பா....தல சுத்துதில்ல? இதுல இன்னும் நிறைய வயித்தெரிச்சல் இருக்கு. அதெல்லாம் எழுத ஆரம்பிச்சா நான் ரொம்ப கெட்டவனாயிடுவேன். அதுனால இதோட நிறுத்திக்கறேன்.
கடைசி: இவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் நம்முடய மானத்தை, மரியாதையை, மனசாட்சியை விற்றுக் கொண்டிருக்கிறோம்.
Context: My organization is against my H1 visa sponsorship. They were not able to find a person with qualifications but at the sametime they are not willing to sponsor a work visa for me. This is how it has spread a negative connotation about H1b visas. It is already on negative high and is not very far that whole consultancy idea getting abolished.
எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. என் அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன். இந்த விஷயத்தில் நான் நேரடியாக பாதிக்கப்பட்டதால்: YES, I AM BIASED.
முதல் பாகம் எழுதி மூன்று வாரங்கள் ஆயிற்று. இடையில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறிக்கொண்டே இருக்கு. எல்லாம் தலவலி. அப்புறம் இன்னிக்கு எழுதறத்துக்கு இன்னொரு முக்கியமான காரணம், ஆன்லைன் வீடியோஸ் எல்லாமே பாத்தாச்சு. இதுக்கு மேல பார்க்கறத்துக்கு ஒன்னுமே இல்லைன்னு ஆனத்துக்கு பிறகு எழுதலாமேன்னு தோனித்து.
கன்சல்டன்சி கொடுமை
இங்கு படித்து முடித்ததும் உடனே வேலை தேடியே ஆக வேண்டிய கட்டாயம். வீட்டுல உட்கார்ந்து வேர்கடலை சாப்பிட்ட படி வேலை தேட முடியாது. இங்க ஒரு மாசம் வேலை இல்லாம இருந்தா முடிஞ்சுது கதை (செல்போன் அது இதுன்னு கணக்கு போட்டா ஒரு 200 டாலர் இல்லாம கத ஓடாது). அதுனால என்னமோ நம்மள ஒருத்தன் கத்தியோட துரத்திகிட்டு வரும்போது எப்டி ஓடுவோமோ அப்டி ஒரு பதற்றம், வேகம் எல்லாம். யாராச்சும் சொந்தகாரங்க, நண்பர்கள் இருந்தா நல்லது; அவங்க வீட்ல போயி ஓசி சாப்பாடு சாப்பிட்டுகிட்டு வேலை தேடலாம். அது இல்லைன்னா ரொம்ப கஷ்டம்.
சரி, முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அமெரிக்கால வேலை செய்யறத்துக்கு அந்தந்த தகுதிகளுக்கு ஏற்றார்போல் விசா (visa-H1, L1, B1, J1...) இருக்கு. இதுல ரொம்ப பிரபலமானது H-1 விசா. நீங்க செய்தித்தாள் அங்க இங்க நிறையா படிச்சு இருப்பீங்க. இந்த H1 விசாவுக்கு அப்டி என்ன மவுசுன்னா... பின்னாடி இந்த ஊரோட 'பச்ச கார்டு' (Green Card), அமெரிக்க குடியுரிமைக்கு எல்லாம் அப்ளை பன்ன ரொம்ப வசதி. நம்மாளு ஊர்லேந்து வரும் போதே கணக்கு போட்டுட்டுதான்யா வர்றான். மொதல்ல ரெண்டு வருசம் படிப்பு, அப்புறம் H1, அப்புறம் கல்யாணம், பச்ச அட்டை, குடியுரிமை - இதுதான் டிபிகல் ப்ளான். ஊர்ல தானியம் கொட்டி வைப்பதற்கு இருக்கும் குதிர்ல நம்மாளு பணம் சேக்கனும்னு கணக்கு போடறான்.
விசா கதய விட்டுட்டு கன்சல்டன்சி பக்கம் கொஞ்சம் திரும்பி பார்ப்போம். இந்த 'கன்சல்டன்சி' என்னன்னு பச்சையா சொல்லனும்னா நம்ம குடிய கெடுக்க வந்தவனுங்க. நெசந்தான். ஏதோ ஒன்னு ரெண்டு பேர் நல்லவங்களா இருந்தா அவங்க எச்ஸப்ஷன்ஸ். Exception does not make rule. 90% கன்சல்டன்சி வெச்சிருக்கிறவன் ஏமாத்திதான் சார் பொழைக்கறான். எவனோ ஒருத்தன் சாப்பட்டுல மண் அள்ளி போட்டுட்டு தான் நம்மாளு டாலர ரூபாயா மாத்தறான். இல்லேன்னு சத்தியம் பண்ண சொல்லுங்க நான் நாளைக்கே ஊருக்கு மூட்டை கட்டிகிட்டு கெளம்பிடறேன் (பொய் சத்தியம் செல்லாது; என்ன மாதிரி ஆளுங்கள ஊர விட்டு கெளப்பினா போதும்னு பொய் சத்தியம் செய்வாங்க).
சுருக்கமா சொல்லனும்னா, தகுதி இல்லாத ஆட்களை போலியா அமெரிக்க கம்பெனிகள்ல வேலைக்கு அமர்த்தறது. இதுதான் இவங்க பண்றது. இது போலின்னு தெரிஞ்சும் தொடர்ந்து நடந்துகிட்டேதான் இருக்கு. ஏன்னுதான் புரியல. அது ஒரு கருப்பு உலகம். நம்முடைய கண்களை கட்டித்தான் அங்கே உள்ளே அனுமதிப்பார்கள். வாய்கள் உண்மை பேசக்கூடாது. அசிங்கப்பட்டாலும், அட! இது என்ன நம்ம ஊரா? அசிங்கப்பட்டாதான் என்ன? பரவாயில்ல என்று பழகிக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தத்தில் அங்கே நான் கெளரவமான திருடனாக்கப்படுகிறேன். காலையிலிருந்து பசியோடு வேலை செய்து கிடைத்த ஒரு ரூபாயில் மாலை நேரம் கால் வயிற்றிற்கு சாப்பிடும் சிறுவனிடமிருந்து திருடி உண்ணும் கீழ்த்தரமானவனாக்கப் படுகிறேன்.
இன்றைய தேதியில் ஆண்டொன்றுக்கு மொத்தம் 65,000 H1 விசா அனுமதிக்கப்படுகிறது. இதில் எழுபதிலிருந்து எண்பது சதவிகிதம் நம்ம ஆட்கள் தான். அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர்களுக்காக தனியாக 20,000 H1 விசா அனுமதி உண்டு. சென்ற ஆண்டு, முதல் நாளிலேயே இந்த அளவைத்தாண்டி எல்லோரையும் 'ஆ' காட்ட வெச்சுது. அதுக்கு லாட்டரி கொண்டு வந்தாங்க. அதாவது வந்த அப்ளிகேஷன்ல செலக்ட் பண்றதுக்காக. ஊர் பாஷைல சொல்லனும்னா குலுக்கி போட்டு எடுக்கறது. ஆக நமக்கு கெடைக்குமா கெடைக்காதோன்னு பயம். அதுக்கும் ஒரு வழி கண்டு புடிச்சோம். என்னன்னா, நம்மாளு ஒருத்தன் ஒரு விசாவுக்கு அப்ளை பண்றது இல்ல. மல்டிபுள் அப்ளிகேஷன்ஸ். கிடைக்கின்ற வாய்ப்பை பெருக்குவதற்கான முயற்சி. அதுக்காகவே இந்த தடவை வெச்சாங்கல்ல ஆப்பு. இந்த முறை ஒருவர் ஒரு அப்ளிகேஷன்தான் போடலாம். அவனும் என்னன்னமோ செஞ்சு பாக்கறான். நாங்க உடுவோமா என்ன?
இந்த கதயெல்லாம் உடு; இதுல உனக்கென்ன ப்ரச்சன? அப்டின்னு கேக்கறது காதுல உழுவுது. ஆம். பாதிக்கப்பட்டேன். நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.
என்னோட படிச்சவங்க எல்லாம் 'ஆறு' வருசம் அனுபவம் போட்டு வேல கேக்கறாங்க சார். நானும் அவங்களும் சேந்து ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ணினா யார எடுப்பான் சொல்லுங்க? இவங்க எல்லாரும் ஊர விட்டு வந்தே ரெண்டு வருஷந்தான் ஆவுது. அதுக்குள்ள ஆறு வருச அனுபவம். நேத்தி வரைக்கும் என்னோட மொக்க போட்டவன், அனுபவமுள்ள ஆபீசர் ஆயிடறான் சார்.
நானும் நெறைய கன்சல்டன்சிகிட்ட பேசி பாத்துட்டேன். ஒருத்தனுக்கும் நாம தப்பு பண்றோங்கற உணர்வே இல்லைங்க. அடங்கொக்கமக்கா! சரி, எனக்கு அஞ்சு வருசம் அனுபவம் போட்டா நான் எப்டிடா இன்டர்வ்யூல பாஸ் பண்ணுவேன்? அப்டின்னு கேட்டா... அதுக்குத்தான் ஒரு ஐடியா இருக்குல்ல அப்டிங்கறான்; சார்...நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. நம்ம கிட்ட அனுபவஸ்தர்கள் நிறையா இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர் நீங்கன்னு சொல்லி டெலிபோன்ல இன்டெர்வியூ முடிச்சுட்டா போவுது. அடங்கொன்னியா! இப்போ சரி, நான் வேலைக்கு போனதுக்கப்புறம் சொதப்பினா என்ன பண்றது? அதுக்கும் ரெடியா ஒரு பதில்: "உனக்கு மூளையே இல்ல சார். இவ்ளோ தூரம் யோசிக்கறவன் இத எப்டி விடுவேன்? அதுக்கும் கைவசம் ஒரு மொள்ளமாரித்தனம் இருக்கு. நீங்க அங்க போயி வேல தெரிலைன்னா எங்களுக்கு ஒரு ஈமெயில் பண்ணுங்க... அடுத்த நாள் அத நாங்க எப்டி பண்றதுன்னு சொல்லி ரிப்ளை பண்றோம்"
அட! தப்பு பண்றத விடுங்க. மாட்டிகிட்டு மானங்கெட்டு அசிங்கப்பட்டா என்ன பண்றதுன்னு கூட பயம் கெடயாது. எனக்கு தெரிஞ்ச ஒருத்தன ஒரு கம்பெனில உண்மை தெரிஞ்சு விரட்டி விட்டுட்டானுங்க. அவன் என்ன செஞ்சான்? செத்தா போயிட்டான்? அடுத்த கம்பெனில போயி வேலைக்கு சேந்தாச்சு. ஆக என் அருமை நண்பன் சுயமரியாதை இல்லாத ஜடமாகிறான்.
யப்பா....தல சுத்துதில்ல? இதுல இன்னும் நிறைய வயித்தெரிச்சல் இருக்கு. அதெல்லாம் எழுத ஆரம்பிச்சா நான் ரொம்ப கெட்டவனாயிடுவேன். அதுனால இதோட நிறுத்திக்கறேன்.
கடைசி: இவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் நம்முடய மானத்தை, மரியாதையை, மனசாட்சியை விற்றுக் கொண்டிருக்கிறோம்.
Context: My organization is against my H1 visa sponsorship. They were not able to find a person with qualifications but at the sametime they are not willing to sponsor a work visa for me. This is how it has spread a negative connotation about H1b visas. It is already on negative high and is not very far that whole consultancy idea getting abolished.
இந்தியர்கள் அமெரிக்காவில் இன்னொரு கூவம் ஏற்படுத்துகிறார்களா?
எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. என் அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன்.
என் வலைப்பதிவு இத்தனை நாட்கள் அமைதியாகவே இருந்திருக்கிறது. அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து. எழுதுவதற்கு ஒன்றும் இல்லையா? அதெல்லாம் ஒன்னுமில்ல. சோம்பேறித்தனம். யார் யார் மேலயோ கோபம், வெறுப்பு, ஆத்திரம். எழுதல. வெறுப்புல நீ ஏன்டா எழுதலைன்னு கேக்கறீங்க. அட, நான் எதுவுமே உருப்டியா செய்யல. அதுல ஒன்னு எழுதல. சரி விடுங்க. அது நான் மேல்படிப்பு முடித்து வேலை தேடி அல்லாடிய காலம்.
நம்ம ஊர்ல ஒரு நெனப்பு. என்னமோ அமெரிக்கா வந்துட்டா எல்லாம் சுலபமா அமைஞ்சுடும் அப்டின்னு. என்னுடைய அனுபவத்துல இனிமே யாராச்சும் அமெரிக்கா வர்றதுக்கு வழி கேட்டா, தம்பி ஊர்லயே இருந்துடுங்க அப்டின்னு சொல்லிடுவேன். ஏன்னா இங்க வந்து படுற பாடு பட்டவனுக்குத்தான் தெரியும். இதுல கொடுமை என்னன்னா, நாம இத சொன்னா: தோ பார்றா அங்கபோயி நல்ல சம்பாதிச்சுட்டு பேசறான் பாரு அப்டின்னு சொல்றானுங்க.
சார் நெசமாத்தான் சார் சொல்றோம். இங்க படிக்க வர்றவனுங்க பாதி பேர் சுயமரியாதய தொலைச்சுட்டு, இந்த ஊர்க்காறன ஏமாத்திட்டுதான் வேல செய்ய வேண்டி இருக்கு. இது கிட்டத்தட்ட ஒரு சுத்தம் செய்ய முடியாத கூவம் போலத்தான் இருக்கு. உண்மைய சொல்லட்டுமா? நம்புவீங்களா?
முதல் கட்டம்: இந்தியாவிலிருந்து அமெரிக்கா படிக்க வருகிறான் ஒரு இளைஞன்.
இந்தியாவிலிருந்து ஒரு இளைஞன் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட கனவுகளொடும் கற்பனைகளொடும் வந்து சேர்கிறான். இங்க ஒரு நல்ல யுனிவர்சிடில படிச்சா ஓகே. லுச்சாவா இருந்தா அவ்ளோதான். இங்க வர்ற பசங்களுக்கு அவனவனுக்கு ஏத்தா மாதிரி ஒரொரு கனவு. சில பேர் நெசமாவே படிக்க வர்றான். சில பேர் காசு வேணும்னு வர்றான். அட இன்னும் சில பேர் நல்ல பொண்ணு கெடைக்கும்னு வர்றான். இங்க வர்ற பாதி பேருக்குத்தாங்க படிக்க அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்குது. நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா ஊக்கத்தொகை, ஸ்காலர்ஷிப், இல்ல என்னமோ ஒன்னு. அதாவது ஒரு பேராசிரியர் கிட்ட ஆராய்ச்சியோ, இல்ல உதவியாளரா இருந்து படிக்கறத்துக்கு பண உதவி கெடைக்கறது. அப்டி கெடைச்சுட்டா ஓகே. இல்லேன்னா ரொம்ப கஷ்டம். ஏன்னா இந்த ஊர்ல நம்மளால செலவு செஞ்சு படிக்க முடியாது (அட்லீஸ்ட் நடுத்தர வர்க்கத்துனால).
இந்த மாதிரி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்கலேன்னா என்ன செய்யறான் நம்ம ஆளுன்னுதான் கேள்வி? யாருக்காச்சும் தெரியுமா?
நம்ம ஊர்ல சொல்லும் போது பெருமையா நான் வெளில பார்ட் டைம் வொர்க் செஞ்சு படிக்கறேன்னு சொல்றது. அது அமெரிக்கால சட்ட விரோதம்னு யாருக்காச்சும் தெரியுமா?(யுனிவர்சிடில பார்ட் டைம் வேல செய்யறது ஓகே. வெளில வேல செஞ்சா அது தப்பு). ஏதோ ஒரு சதவிகிதம் பேருக்குத்தான் தெரியும்னு நெனைக்கறேன். ஏன்னா சமீபத்துல விஜய் டிவி "காபி வித் அனு" ப்ரோக்ராம் பாத்தேன். அதுல வந்த தன்வி (ஏ. ஆர். ஆஸ்தான பாடகி: முன்பேவா என் அன்பேவா...) சொல்றாங்க: "அமெரிக்கால நான் க்ரோஸரி ஷாப்ல வேல செஞ்சுகிட்டேதான் படிச்சேன்" அப்டின்னு. அது இங்க இருக்கறவங்ளுக்கு தெரியும் சட்ட விரோதம்னு.
இப்டி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்காதவன் என்ன செய்யறான்? மளிகை கடைலயோ, இல்ல பெட்ரோல் பங்க்லயோ இல்ல வேற எதாச்சும் கடைலயோ வேல செய்யறான். எப்டின்னு கேட்டீங்கன்னா ரொம்ப வருத்தப்படுவீங்க. 12 மணி நேரம் நிக்கறான் சார். ஒரே எடத்துல. இவனுக்கு சம்பளம் ஒரு மணி நேரத்துக்கு 6 டாலர் (எடத்துக்கு எடம் மாறுபடும்). வார நாட்கள்ல ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் நிக்கறான்னா... வார இறுதில 12 மணி நேரம். இதுல என்ன சார் பிரச்சன அப்டின்னு கேக்கறது காதுல விழுது. நம்மாளு ஆறு டாலருக்கு வேல செய்யறதால உள்ளூர்க்காரனோட வேல போயிடுது. இங்க எப்டின்னா... ஒரொரு மாநிலத்துலயும் குறைந்தபட்ச ஊதியம் அப்டின்னு வெச்சுருக்கானுங்க. ஆனா நம்மாளு 10 டாலர் வாங்கற எடத்துல 6 டாலருக்கு வேல செய்யறான். இவன் போனா போன செய்ய வேண்டிய வேலை மட்டும் செய்யறதில்ல. சுயமரியாதய தொலச்சுட்டு கக்கூஸ் கழுவற வேலை வரைக்கும் செய்யறான். மொதல்ல கொஞச நாளைக்கு அத்தியவசிய தேவைக்காக வேல செய்யறவன் பிறகு காசு மேல ஆச வந்து முழுக்க முழுக்க தொழிலாளி ஆயிடறான். கேட்டா வேற வழி இல்ல அப்டிங்கறான். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேல செஞ்சா இவன் எங்க படிக்கறது. அப்புறம் கொஞ்ச நாள்ல ஏதோ பாஸ் பன்னினா போதும் சாமின்னு வெளில வர்றான்.
இவனுங்கள்ல பல பேர் இந்த ஊர் போலிஸ்கிட்ட மாட்டிக்காம இருக்கறதும் இல்ல. அப்பப்ப எவனாச்சும் மாட்டிகிட்டேதான் இருக்கான். ஆனா சட்டவிரோதமா வேல செய்யறவன் எண்ணிக்கை மட்டும் கொறயல. இங்க வந்து ரெண்டு வருஷம் ஆன பசங்க அது என்னமோ தப்பே இல்லைங்கற மாதிரி ஒரு தப்பான தோற்றத்த ஏற்படுத்தி நம்மாளயும் இந்த மாதிரி ஆக்கிடறான். இதுல தப்பிச்சு வர்ற பசங்க கம்மிதான். நானும் ஒரு அஞ்சு நாள் வேலைக்கு போனேன். அப்றம் இந்த மனசாட்சி சும்மா இருக்காம திரும்பி வந்துட்டேன்.
இவ்ளோ கஸ்டபட்டு படிச்சு வெளில வந்து அவன் என்ன பண்றான்னு நீங்க கேக்கனும். நீங்க கேக்கலைன்னாலும் நான் சொல்லத்தான் போறேன். மீண்டும் சந்திப்போம்.
எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. என் அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன்.
என் வலைப்பதிவு இத்தனை நாட்கள் அமைதியாகவே இருந்திருக்கிறது. அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து. எழுதுவதற்கு ஒன்றும் இல்லையா? அதெல்லாம் ஒன்னுமில்ல. சோம்பேறித்தனம். யார் யார் மேலயோ கோபம், வெறுப்பு, ஆத்திரம். எழுதல. வெறுப்புல நீ ஏன்டா எழுதலைன்னு கேக்கறீங்க. அட, நான் எதுவுமே உருப்டியா செய்யல. அதுல ஒன்னு எழுதல. சரி விடுங்க. அது நான் மேல்படிப்பு முடித்து வேலை தேடி அல்லாடிய காலம்.
நம்ம ஊர்ல ஒரு நெனப்பு. என்னமோ அமெரிக்கா வந்துட்டா எல்லாம் சுலபமா அமைஞ்சுடும் அப்டின்னு. என்னுடைய அனுபவத்துல இனிமே யாராச்சும் அமெரிக்கா வர்றதுக்கு வழி கேட்டா, தம்பி ஊர்லயே இருந்துடுங்க அப்டின்னு சொல்லிடுவேன். ஏன்னா இங்க வந்து படுற பாடு பட்டவனுக்குத்தான் தெரியும். இதுல கொடுமை என்னன்னா, நாம இத சொன்னா: தோ பார்றா அங்கபோயி நல்ல சம்பாதிச்சுட்டு பேசறான் பாரு அப்டின்னு சொல்றானுங்க.
சார் நெசமாத்தான் சார் சொல்றோம். இங்க படிக்க வர்றவனுங்க பாதி பேர் சுயமரியாதய தொலைச்சுட்டு, இந்த ஊர்க்காறன ஏமாத்திட்டுதான் வேல செய்ய வேண்டி இருக்கு. இது கிட்டத்தட்ட ஒரு சுத்தம் செய்ய முடியாத கூவம் போலத்தான் இருக்கு. உண்மைய சொல்லட்டுமா? நம்புவீங்களா?
முதல் கட்டம்: இந்தியாவிலிருந்து அமெரிக்கா படிக்க வருகிறான் ஒரு இளைஞன்.
இந்தியாவிலிருந்து ஒரு இளைஞன் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட கனவுகளொடும் கற்பனைகளொடும் வந்து சேர்கிறான். இங்க ஒரு நல்ல யுனிவர்சிடில படிச்சா ஓகே. லுச்சாவா இருந்தா அவ்ளோதான். இங்க வர்ற பசங்களுக்கு அவனவனுக்கு ஏத்தா மாதிரி ஒரொரு கனவு. சில பேர் நெசமாவே படிக்க வர்றான். சில பேர் காசு வேணும்னு வர்றான். அட இன்னும் சில பேர் நல்ல பொண்ணு கெடைக்கும்னு வர்றான். இங்க வர்ற பாதி பேருக்குத்தாங்க படிக்க அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்குது. நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா ஊக்கத்தொகை, ஸ்காலர்ஷிப், இல்ல என்னமோ ஒன்னு. அதாவது ஒரு பேராசிரியர் கிட்ட ஆராய்ச்சியோ, இல்ல உதவியாளரா இருந்து படிக்கறத்துக்கு பண உதவி கெடைக்கறது. அப்டி கெடைச்சுட்டா ஓகே. இல்லேன்னா ரொம்ப கஷ்டம். ஏன்னா இந்த ஊர்ல நம்மளால செலவு செஞ்சு படிக்க முடியாது (அட்லீஸ்ட் நடுத்தர வர்க்கத்துனால).
இந்த மாதிரி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்கலேன்னா என்ன செய்யறான் நம்ம ஆளுன்னுதான் கேள்வி? யாருக்காச்சும் தெரியுமா?
நம்ம ஊர்ல சொல்லும் போது பெருமையா நான் வெளில பார்ட் டைம் வொர்க் செஞ்சு படிக்கறேன்னு சொல்றது. அது அமெரிக்கால சட்ட விரோதம்னு யாருக்காச்சும் தெரியுமா?(யுனிவர்சிடில பார்ட் டைம் வேல செய்யறது ஓகே. வெளில வேல செஞ்சா அது தப்பு). ஏதோ ஒரு சதவிகிதம் பேருக்குத்தான் தெரியும்னு நெனைக்கறேன். ஏன்னா சமீபத்துல விஜய் டிவி "காபி வித் அனு" ப்ரோக்ராம் பாத்தேன். அதுல வந்த தன்வி (ஏ. ஆர். ஆஸ்தான பாடகி: முன்பேவா என் அன்பேவா...) சொல்றாங்க: "அமெரிக்கால நான் க்ரோஸரி ஷாப்ல வேல செஞ்சுகிட்டேதான் படிச்சேன்" அப்டின்னு. அது இங்க இருக்கறவங்ளுக்கு தெரியும் சட்ட விரோதம்னு.
இப்டி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்காதவன் என்ன செய்யறான்? மளிகை கடைலயோ, இல்ல பெட்ரோல் பங்க்லயோ இல்ல வேற எதாச்சும் கடைலயோ வேல செய்யறான். எப்டின்னு கேட்டீங்கன்னா ரொம்ப வருத்தப்படுவீங்க. 12 மணி நேரம் நிக்கறான் சார். ஒரே எடத்துல. இவனுக்கு சம்பளம் ஒரு மணி நேரத்துக்கு 6 டாலர் (எடத்துக்கு எடம் மாறுபடும்). வார நாட்கள்ல ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் நிக்கறான்னா... வார இறுதில 12 மணி நேரம். இதுல என்ன சார் பிரச்சன அப்டின்னு கேக்கறது காதுல விழுது. நம்மாளு ஆறு டாலருக்கு வேல செய்யறதால உள்ளூர்க்காரனோட வேல போயிடுது. இங்க எப்டின்னா... ஒரொரு மாநிலத்துலயும் குறைந்தபட்ச ஊதியம் அப்டின்னு வெச்சுருக்கானுங்க. ஆனா நம்மாளு 10 டாலர் வாங்கற எடத்துல 6 டாலருக்கு வேல செய்யறான். இவன் போனா போன செய்ய வேண்டிய வேலை மட்டும் செய்யறதில்ல. சுயமரியாதய தொலச்சுட்டு கக்கூஸ் கழுவற வேலை வரைக்கும் செய்யறான். மொதல்ல கொஞச நாளைக்கு அத்தியவசிய தேவைக்காக வேல செய்யறவன் பிறகு காசு மேல ஆச வந்து முழுக்க முழுக்க தொழிலாளி ஆயிடறான். கேட்டா வேற வழி இல்ல அப்டிங்கறான். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேல செஞ்சா இவன் எங்க படிக்கறது. அப்புறம் கொஞ்ச நாள்ல ஏதோ பாஸ் பன்னினா போதும் சாமின்னு வெளில வர்றான்.
இவனுங்கள்ல பல பேர் இந்த ஊர் போலிஸ்கிட்ட மாட்டிக்காம இருக்கறதும் இல்ல. அப்பப்ப எவனாச்சும் மாட்டிகிட்டேதான் இருக்கான். ஆனா சட்டவிரோதமா வேல செய்யறவன் எண்ணிக்கை மட்டும் கொறயல. இங்க வந்து ரெண்டு வருஷம் ஆன பசங்க அது என்னமோ தப்பே இல்லைங்கற மாதிரி ஒரு தப்பான தோற்றத்த ஏற்படுத்தி நம்மாளயும் இந்த மாதிரி ஆக்கிடறான். இதுல தப்பிச்சு வர்ற பசங்க கம்மிதான். நானும் ஒரு அஞ்சு நாள் வேலைக்கு போனேன். அப்றம் இந்த மனசாட்சி சும்மா இருக்காம திரும்பி வந்துட்டேன்.
இவ்ளோ கஸ்டபட்டு படிச்சு வெளில வந்து அவன் என்ன பண்றான்னு நீங்க கேக்கனும். நீங்க கேக்கலைன்னாலும் நான் சொல்லத்தான் போறேன். மீண்டும் சந்திப்போம்.
நமக்கு என்னதான் தேவை?
இந்தியாவை விட்டு வெளியேறி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்றாலும், இங்கே நான் காணும் விஷயங்கள் நம் நாட்டில் என்ன குறைபாடு என்பதை தெளிவாக விளக்குகின்றன. இன்னிக்கு சாயங்காலம் என்னுடைய நண்பர்கள் இருவருடன் காபி குடிக்க வெளியே சென்று இருந்தேன்.
இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நானும் அந்த நண்பரும் எப்போது சந்தித்தாலும் எங்களுடைய பேச்சு ஓரிடத்தில் வந்து முடியும். அது என்னன்னா, இந்தியாவிற்கு என்ன தேவை? நம்மால் என்ன செய்ய இயலும்? என்னுடைய நண்பர் இதில் நிறைய ஆராய்ச்சி செய்பவர். அவர் சாப்பிடும், தூங்கும், சம்பாதிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவருக்கு இதுதான் வேலை. நாங்கள் இங்கே இருந்தாலும் இன்னும் சில வருடங்களில் நமது நாட்டிற்குத் திரும்பி ஏதாவது செய்து சமுதாய முன்னேற்றத்தில் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..
விஷயத்திற்கு வருகிறேன்....அப்படி இன்று காபி கடைக்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சும்மா இதே மொக்கை தான் (ஆனால் எனக்கு அந்த மொக்கையில் ஒரு நம்பிக்கை உண்டு). அப்போது எதிரில் ஒரு கார் இன்னொன்று மீது மோதியது. என்னுடைய நண்பர் உடன் சொன்னார்...ராம்கி...இப்போது மணி சரியாக 7.58. இன்னும் மூன்று நிமிடங்களில் இங்கே போலீஸ் கார் வரும் பார்...என்றார். அதே போன்று சரியாக இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டது. அந்த அளவிற்கு இங்கு இருக்கும் காவல் துறையை நம்பலாம். இதக்காட்டி என்னோட நண்பர் சொன்னார்...இந்த நம்ம ஊர்ல நடக்கவே நடக்காது ராம்கி அப்டின்னார். நம்ம ஊர்ல என்ன நடக்குதுன்னு பாத்தா....இன்னும் நம்ம போலீஸ்காரங்க காசு வாங்கிட்டு விட்டுடறாங்க....இதுக்கு என்ன பன்றதுன்னு யோசிச்சுட்டே வீட்டுக்கு திரும்பி வந்தோம்...
சமுதாய முன்னேற்றத்துக்கு என்ன தேவை அப்டிங்கறதுல...என்னோட அபிப்ராயம் என்னன்னா...நம்ம சொசைட்டில படிப்பு கொஞ்சம் அதிகமா சொல்லி குடுக்கனும்... எல்லா பசங்களையும் படிக்க வெக்கனும்... படிக்க வெச்சா போதும்... மத்தது எல்லாம் தானா நடக்கும்....அப்டிங்கறது. என்னோட நண்பர் சொல்லுவார்...இது மட்டும் போதாது ராம்கி..இன்னும் நிறைய ப்ரச்னை இருக்கு,.. நான் நிறைய யோசிச்சுட்டு விட்டுட்டேன் அப்டிங்கறார். ஆனா எனக்கு அதுல நம்பிக்கை இல்ல... என்ன பொறுத்த வரைக்கும்..ஏதாவது ஒரு முயற்சி பன்னிகிட்டே இருக்கனும். அப்புறம் சிந்திச்சுகிட்டே இருக்கனும்... ஏதாவது ஒருநாள் அது பலிக்கும் அப்டிங்கற நம்பிக்கை இருக்கு.
இப்போதைக்கு நான் என்ன நினைக்கறேன்னா, கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு அங்க போயி நான் நினைக்கறது எல்லாத்தயும் செய்யனும். பாக்கலாம்... காலம் கண்டிப்பா பதில் சொல்லும்.
உங்களுக்கு எதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க...இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கு தெரிய வந்தா...கண்டிப்பா முயற்சி செய்வாங்க. உங்க ஐடியாவ மத்தவங்களோட பகிர்ந்து கொண்டே இருங்க. கண்டிப்பா ஒருநாள் முயற்சி பலிக்கும்.
மீண்டும் சந்திப்போம்.
இந்தியாவை விட்டு வெளியேறி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்றாலும், இங்கே நான் காணும் விஷயங்கள் நம் நாட்டில் என்ன குறைபாடு என்பதை தெளிவாக விளக்குகின்றன. இன்னிக்கு சாயங்காலம் என்னுடைய நண்பர்கள் இருவருடன் காபி குடிக்க வெளியே சென்று இருந்தேன்.
இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நானும் அந்த நண்பரும் எப்போது சந்தித்தாலும் எங்களுடைய பேச்சு ஓரிடத்தில் வந்து முடியும். அது என்னன்னா, இந்தியாவிற்கு என்ன தேவை? நம்மால் என்ன செய்ய இயலும்? என்னுடைய நண்பர் இதில் நிறைய ஆராய்ச்சி செய்பவர். அவர் சாப்பிடும், தூங்கும், சம்பாதிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவருக்கு இதுதான் வேலை. நாங்கள் இங்கே இருந்தாலும் இன்னும் சில வருடங்களில் நமது நாட்டிற்குத் திரும்பி ஏதாவது செய்து சமுதாய முன்னேற்றத்தில் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..
விஷயத்திற்கு வருகிறேன்....அப்படி இன்று காபி கடைக்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சும்மா இதே மொக்கை தான் (ஆனால் எனக்கு அந்த மொக்கையில் ஒரு நம்பிக்கை உண்டு). அப்போது எதிரில் ஒரு கார் இன்னொன்று மீது மோதியது. என்னுடைய நண்பர் உடன் சொன்னார்...ராம்கி...இப்போது மணி சரியாக 7.58. இன்னும் மூன்று நிமிடங்களில் இங்கே போலீஸ் கார் வரும் பார்...என்றார். அதே போன்று சரியாக இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டது. அந்த அளவிற்கு இங்கு இருக்கும் காவல் துறையை நம்பலாம். இதக்காட்டி என்னோட நண்பர் சொன்னார்...இந்த நம்ம ஊர்ல நடக்கவே நடக்காது ராம்கி அப்டின்னார். நம்ம ஊர்ல என்ன நடக்குதுன்னு பாத்தா....இன்னும் நம்ம போலீஸ்காரங்க காசு வாங்கிட்டு விட்டுடறாங்க....இதுக்கு என்ன பன்றதுன்னு யோசிச்சுட்டே வீட்டுக்கு திரும்பி வந்தோம்...
சமுதாய முன்னேற்றத்துக்கு என்ன தேவை அப்டிங்கறதுல...என்னோட அபிப்ராயம் என்னன்னா...நம்ம சொசைட்டில படிப்பு கொஞ்சம் அதிகமா சொல்லி குடுக்கனும்... எல்லா பசங்களையும் படிக்க வெக்கனும்... படிக்க வெச்சா போதும்... மத்தது எல்லாம் தானா நடக்கும்....அப்டிங்கறது. என்னோட நண்பர் சொல்லுவார்...இது மட்டும் போதாது ராம்கி..இன்னும் நிறைய ப்ரச்னை இருக்கு,.. நான் நிறைய யோசிச்சுட்டு விட்டுட்டேன் அப்டிங்கறார். ஆனா எனக்கு அதுல நம்பிக்கை இல்ல... என்ன பொறுத்த வரைக்கும்..ஏதாவது ஒரு முயற்சி பன்னிகிட்டே இருக்கனும். அப்புறம் சிந்திச்சுகிட்டே இருக்கனும்... ஏதாவது ஒருநாள் அது பலிக்கும் அப்டிங்கற நம்பிக்கை இருக்கு.
இப்போதைக்கு நான் என்ன நினைக்கறேன்னா, கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு அங்க போயி நான் நினைக்கறது எல்லாத்தயும் செய்யனும். பாக்கலாம்... காலம் கண்டிப்பா பதில் சொல்லும்.
உங்களுக்கு எதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க...இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கு தெரிய வந்தா...கண்டிப்பா முயற்சி செய்வாங்க. உங்க ஐடியாவ மத்தவங்களோட பகிர்ந்து கொண்டே இருங்க. கண்டிப்பா ஒருநாள் முயற்சி பலிக்கும்.
மீண்டும் சந்திப்போம்.
லாலூ.... The MAN
லாலூ ப்ரசாத் யாதவ் பற்றி என்னை போன்றவர்களுக்கு நினைவில் இருப்பதெல்லாம் அவருடைய காமடி கலந்த கலக்கல் அறிக்கைகளும், தடியைக் காட்டி அடிப்பது போல் இருந்த தினமலர் புகைப்படம் மற்றும் உலகப் புகழ் பெற்ற மாட்டுத்தீவன ஊழல் வழக்கும்தான். ஆனால் இன்று அவர் ஒரு அசாதாரணமான சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இந்திய இரயில்வே மஞ்சள் கடுதாசி கொடுக்க வேண்டிய நிலையிலிருந்து ஒரு லாபகரமான இயக்கமாக மாறியிருக்கிறது. இதற்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்ல இயலாது; ஆனால் அவரும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. சரி விஷயத்துக்கு வர்றேன்...இன்று காலை ஒரு தளத்தில் இவரைப்பற்றி படிக்க நேர்ந்தது (சுவாரஸ்யமாக இருந்தது); அவை உங்களுக்காக....
http://en.wikipedia.org/wiki/Laloo_Prasad_Yadav
http://blogfanatic.wordpress.com/2006/09/18/lalu-at-iima/
http://specials.rediff.com/money/2006/sep/18sld1.htm?q=tp&file=.htm
http://exim.indiamart.com/budget-2005-06/rail-budget2005-06/rail-budget-05-06-highlights.html
லாலூ ப்ரசாத் யாதவ் பற்றி என்னை போன்றவர்களுக்கு நினைவில் இருப்பதெல்லாம் அவருடைய காமடி கலந்த கலக்கல் அறிக்கைகளும், தடியைக் காட்டி அடிப்பது போல் இருந்த தினமலர் புகைப்படம் மற்றும் உலகப் புகழ் பெற்ற மாட்டுத்தீவன ஊழல் வழக்கும்தான். ஆனால் இன்று அவர் ஒரு அசாதாரணமான சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இந்திய இரயில்வே மஞ்சள் கடுதாசி கொடுக்க வேண்டிய நிலையிலிருந்து ஒரு லாபகரமான இயக்கமாக மாறியிருக்கிறது. இதற்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்ல இயலாது; ஆனால் அவரும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. சரி விஷயத்துக்கு வர்றேன்...இன்று காலை ஒரு தளத்தில் இவரைப்பற்றி படிக்க நேர்ந்தது (சுவாரஸ்யமாக இருந்தது); அவை உங்களுக்காக....
http://en.wikipedia.org/wiki/Laloo_Prasad_Yadav
http://blogfanatic.wordpress.com/2006/09/18/lalu-at-iima/
http://specials.rediff.com/money/2006/sep/18sld1.htm?q=tp&file=.htm
http://exim.indiamart.com/budget-2005-06/rail-budget2005-06/rail-budget-05-06-highlights.html
Subscribe to:
Posts (Atom)