Pages

அறியாமை

அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை
தர்மம் நியாயம் எல்லாம் பொய்
கடவுள் மனிதனின் படைப்பு
காதல் என்பது காமத்தின் பகல் வேஷம்
என்னிரு காதுகளுக்கும் எட்டு திக்கிருந்தும்
ஏகப்பட்டவை கேட்கும்
ஒளியேற்ற சொல்லப்பட்ட வார்த்தைகளாம்
இருளில் தொலைந்தன ஏனோ
நானே கற்பனை செய்து கொண்டேன்
என் நெஞ்சின் ஈரப்பசையில்
ஒட்டிக்கொண்டுவிட்டடதாக.