Pages

GOOGLE - தவிர்க்க முடியாதது.

GOOGLE - இது தவிர்க்க முடியாத ஒரு வார்த்தை ஆகிவிட்டது. காலையில் எழுந்தவுடன் செய்திகள் படிக்க GOOGLE, பிறகு GOOGLE மெயில், காலேஜுக்கு சென்றால் GOOGLE ஸ்காலர், பொருட்கள் வாங்க GOOGLE செக்அவுட், இலவச புத்தகம் படிக்க GOOGLE புக்ஸ் - இது எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கெடுத்தாலும் GOOGLE SEARCH (சமையல் குறிப்பு உட்பட; இதவிட கொடும என்னன்னா...... என்னோட நண்பன் ஒருத்தன்....வேலை இல்லாம வெட்டியா இருக்கும் போது என்ன செய்யறது....வெட்டி பொழுது எப்டி கழிக்கறது...அப்டின்னு தேடுவான்). நான் சற்றே யோசித்து பார்க்கையில் GOOGLE நம் வாழ்க்கையை ஆக்கிரமித்து இருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த பதிவிற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சமீபத்தில் நான் சியாட்டில் (Seattle, WA) சென்றிருந்த போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அன்பர்களை சந்தித்தேன். என்னைப் பொறுத்த வரை கணினி மென்பொருள் என்றால் மைக்ரோசாஃப்ட் தான் தல மாதிரி....மத்தவங்க எல்லாம் அப்புறம் தான்...என்று ஒரு நினைப்பு. அந்த அன்பர்களிடம் பேசிய பிறகு ஒன்று மட்டும் புரிந்தது. கூகிள் என்னைப்போன்ற சாதாரண பயணாளரிடம் மட்டுமல்லாது, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனத்தில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த, மைக்ரோசாஃப்ட் விசுவாசிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது ஒன்றும் சாதாரணமான விஷயமில்லை.

ஒரு சீனியர் அதிகாரியிடம் பேசும் போது அவர் இப்படிச் சொன்னார்: "மைக்ரோசாஃப்ட் ஒரு காலத்துல நம்பர் ஒன் கம்பெனியா இருந்தது"--- இதைக்கேட்டவுடன் என் பார்வை மாற, புருவம் உயர, உடன் சுதாரித்துக் கொண்டு அவர் பேச்சை மாற்றினார் --- "அதுக்காக இன்னிக்கு நம்பர் ஒன் இல்லேன்னு சொல்ல முடியாது; இன்னும் சில விஷயங்கள்ல நாங்கதான் நம்பர் ஒன்" - அப்டின்னார்...

இவர் அப்டின்னா...இன்னொருத்தர் இப்டி --- எப்டின்னு கேட்டா, "தம்பி..வாங்க நம்ம GOOGLE SEARCH பன்னலாம்" --- அப்டின்னு சொன்னார். நான் உடனே...என்னங்க சார், மைக்ரோசாஃப்ட்ல இருக்கீங்க; GOOGLE SEARCH பன்னலாம்னு சொல்றீங்களே? LIVE SEARCH பன்ன மாட்டீங்களா? அப்டின்னு நான் கேட்க...உடனே அவர்: தாராளமா பன்னலாம்...அதுக்கென்ன...ஆனா உனக்கு வேண்டிய பக்கம் மட்டும் மொதல்ல கெடைக்காது....பரவால்லயா? அப்டின்னார்.....

இது நிஜமாவே பெரிய விஷயம். எங்க நண்பர்கள் மத்தியில் ஒரு ப்ரபலமான வாக்கியம் உண்டு; அத சொல்லி இந்த பதிவ இத்தோட முடிச்சுக்கறேன்.....

அது....GOOGLE தெய்வோ பவ...!

No comments: