Pages

பெருமை வர பொறுக்கலாம் - பழைய எழுத்து - கவிதை (17)

கனவு கண்டேனடி
உன் நினைவு கொண்டேனடி

இரவு நித்தம்
நிலவு முத்தம்
உனை வேவு பார்க்க வந்ததா?
ஏதும் தந்ததா?

கானம் பாடும் காற்றும்
காதில் சொல்லும் சேதி

சிந்திக்க மறந்த என்
சிதைபட்ட நெஞ்சைக் கேட்டேன்
பதைபதைப்போடு
பூவும் பூவிற்குச் சிறகு முளைத்துப் பயன் தான் என்ன?

வெறுமை நெஞ்சம்
எறும்பையும் திண்ணும்

சிறுமை தேடி சிறகொடிவதை விட
பெருமை வர பொறுக்கலாம்

பெறுகையில் திண்ணம் நீ இருப்பாய்
பருகுகையில் பகிரலாம்
பாசத்தோடு
நேசத்தோடு.

No comments: