Pages

காதல் ஸ்நேகிதத்திற்கு.. - பழைய எழுத்து - கவிதை (19)

காதல் ஸ்நேகிதத்திற்கு,
நிறங்கள் நிஜமானது என்றே நம்புகிறேன்
நிஜங்கள் நிறம் மாறாது எனவும் நம்புகிறேன்.

என் தடம் தேடும் கண்களுக்கு
என் மனதில் ஓர் இடம் உண்டு என்றும்.

நீ அருகில் இருந்தும்
நின் அருகாமை இல்லாதது கடினம் தான்.

நீ எனை நினைக்கையில்..
நினை உணர்கிறேன்.
கனமும், எனை நீயும் உணர்வாய் என
என் நினைவு சொல்லும்.

இந்த இன்பத் திளைப்பு என்றென்றும் வேண்டும் எனக்கு
பொழுது புலர்கையில்
தூங்கி விழித்ததும் துணை தேடுகிறேன்
துயில் பாடவும் உனையே தேடுகிறேன்

பொழுது போகாதிருக்கையில்
உன் பொய்க்கோபம் தேடுகிறேன்

பொழுது சாய்கையில்
என் தூக்கம் தொலைத்தாலும்
நின் புன்சிரிப்பையே தேடுகிறேன்

புருவம் உயர்த்திப் பார்த்தாலும்
புதிர் பதில் சொல்லாது
அது போலவே நீயும்.

No comments: