Pages

புதுச்சுவை - கவிதை (22)

சாமியாரின் மரச்செருப்பு பூசையில. வயசான
மாமியார் வீட்டு மூலையில.

*****************************

வெள்ளை நூல் அது புனிதம்
கொள்ளை போனது மனிதம்.

****************************

சாமிகளுக்கெல்லாம் பாலில் குளியல்
பூமியில் பட்டினிச் சாவுக் குவியல்.

****************************

கங்கை நதி தேசிய மயமாக்கம்
அரசியல் பாவங்கள் கரைக்கப்பட.

****************************

பாரதத்தில் ஏற்றமாம் பாஞ்சாலிக்கு.
பாரதத்தில் அது ஏனோ குற்றமாம்.

****************************

வெட்டியான வீட்டுக்குள்ள விடாதேன்னு சொன்னவரு
வெட்டியான் வீட்டுக்குள்ள வசமா மாட்டிகிட்டவரு.

****************************

No comments: