Pages

கனி தரும் காலம்.. - பழைய எழுத்து - கவிதை (21)

எத்திணையும் அறியா சிந்தனைகள் எத்துனை?
சிந்தனை என்ன என் இணையா?
இல்லை நான் என்ன சிந்தனையின் பிணையா?
இத்துனைக்கும் யார் யார் துணை?

சித்திரை வந்தாலும் குளிர்கிறது?
நினைவுகளுக்கு நித்திரை கிடையாதா?
இல்லை நித்திரைக்கு நினைவில்லியா?
எனக்கு வரவில்லை?

விழித்திரையில் விதித்த கட்டுப்படுகளுக்கெல்லாம்
விதிவிலக்களித்து உள்ளே நுழைந்தவள் நீதானே?
விளக்கம் அளிக்காமல்
விளக்கணைத்து விட்டாய்.. யாரென்றறிவேன்?

என் சிந்தனையை சிறை தள்ளி
என்ன சாதிக்கப் போகிறாய்?

இனி வரும் காலம் கனி தருமா? அல்ல..
கனி தரும் காலம் இனி வருமா?

காலம் தரும் என நம்புகிறேன்
என் சுய நினைவுகளை.. சிந்தனைகளை.

No comments: