Pages

காசுக்கு முன் கொள்கையாவது, வெங்காயமாவது!

ராஜா சர்.முத்தையா செட்டியார் தன் அறுபதாம் வயது நிறைவு விழாவை 1941ல் கொண்டாடினார். பிராமணர்கள் 60 பேருக்கு 60 மாடு, 60 வீடு, 60 வேட்டி, துண்டு தானம் கொடுத்தார். பிராமணர் அல்லாதாரின் நலம் காக்கும், "ஜஸ்டிஸ் கட்சி'யைச் சேர்ந்தவர் ராஜா முத்தையா செட்டியார். இவர் இப்படி பிராமணர்களுக்கு தானம் கொடுத்தது, மூட நம்பிக்கை என்றும், சமூக விடுதலைக்கு எதிரான செயல் என்றும் காரசாரமாக ஒரு தலையங்கம் எழுதினார் அண்ணாதுரை.

அதை ஈ.வெ.ரா.,வின், "விடுதலை' பத்திரிகையில் வெளியிட முனைந்தார். ஈ.வெ.ரா., வும், "கட்டாயம், எழுத வேண்டும்; விடாதே!' என்றார். காரணம், பிராமணர்களுக்கு தானம் கொடுத்த முத்தையா செட்டியார், தன், "விடுதலை' பத்திரிகை வளர்ச்சிக்கு பணம் தரவில்லையே என்ற கோபம். அண்ணாதுரை எழுதிய தலையங்கம் அச்சு கோர்க்கப்பட்டு, அச்சு எந்திரத்திலும் ஏறி விட்டது. அப்போது பார்த்து, முத்தையா செட்டியாரிடமிருந்து அறுபதாம் ஆண்டு நிறைவு விழா பரிசாக ஈ.வெ.ரா.,வுக்கு ஆயிரம் ரூபாய்க்கு, "செக்' வந்து விட்டது. உடனே அண்ணாதுரையை அழைத்து, "அந்த தலையங்கத்தை அச்சிடாதே!' என்றார் ஈ.வெ.ரா., அண்ணாதுரை சம்மதிக்கவில்லை; "எழுதியது எழுதியதுதான்!' என்றார்.

"சரி; சரி; அதே கருத்தை நானே தலையங்கமாக எழுதி விடுகிறேன்...' என்று கூறி, உப்புச்சப்பு இல்லாமல், வழ, வழ... கொழ, கொழ என்று ஒரு தலையங்கத்தை எழுதி வெளியிட்டார் ஈ.வெ.ரா., காசுக்கு முன் கொள்கையாவது, வெங்காயமாவது!


நன்றி: தினமலர்-வாரமலர்

No comments: