Pages

ரஜினிகாந்த்: இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

ஒரு முறை, இரு முறை அல்ல; மற்றுமொரு முறை என்று செல்கிறது ரஜினியின் அரசியல் ப்ரவேச அறிவிப்பு கணக்கு. மீண்டும் ஒரு முறை ரஜினியின் அரசியல் ப்ரவேசம் குறித்து செய்திகள் வெளியாகி, அதற்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து மறுப்பு வெளியிட்டு இருக்கிறார். இது அவரது சொந்த விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக இருந்தாலும், கொஞ்சமாவது தமிழக மக்களை மனதில் கொள்ள வேண்டாமா? என்ன கொடும சார் இது? நீங்கள் நீங்கள் மட்டுமாக இருக்கும் வரையில் தொந்தரவு இல்லை. தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள். சினிமாவில் உங்கள் முட்டாள்தனமான வசனங்களை ரசித்த குற்றத்திற்கான தண்டனையா இது? "நா ஒரு தடவா சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி". யோவ், ஒரு தடவ சொல்லும் போது ஒரு தடவதான் சொன்னா மாதிரிதான். தண்ணி அடிச்சு இருந்தீங்களா என்ன? எப்டி நூறு தடவ சொன்னா மாதிரி இருக்கும். உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? இல்ல சைடிஷ்ஷா? இந்த வடிகட்டின பைத்தியக்காரத்தனத்த சினிமாவோட நிறுத்திகிட்டா போதாதா? எதுக்கு பொதுவாழ்க்கையிலயும்? தமிழக மக்கள் ஏற்கனவே ரொம்ப நொந்து போயாச்சு. இதுல இவரோட அலம்பல் வேற.

இவர் ரசிகர்களை சந்திக்க போகிறார்; சந்தித்து அரசியல் ப்ரவேசம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் போகிறார் என்ற செய்தி மூன்று வாரங்களுக்கு முன்பே வட்டமடிக்கத் துவங்கியாயிற்று. மூன்று வாரங்கள் மெளனம் காத்துவிட்டு இப்போது அறிக்கை வெளியிட்டு இருப்பது ஒரு குழப்பவாதியின் தெளிந்த ஏமாற்று வேலை. இவருக்கு உண்மையாகவே அரசியல் ஆசை இல்லேன்னா இந்த செய்தி வந்த உடனேயே மறுப்பு வெளியிட்டு இருக்கனும். மூனு வாரமா என்ன சார் செய்துகிட்டு இருந்தீங்க? இமயமலை போயி கபிலமுனி கிட்ட ஆசிர்வாதம் கேட்டீங்களா? அவர் உங்ளுக்கே அல்வா குடுத்துட்டாரா? அது பரவாயில்ல. இப்போ வெளியிட்ட மறுப்பு செய்தியில் கூட தன்னுடைய சாமர்த்தியமான பைத்தியக்காரத்தனத்தோட சினிமாவையும் கலந்துதான வெளியிட்டு இருக்காரு. "இவரு வந்தா யாராலயும் தடுக்க முடியாதான்" எந்த நம்பிக்கையில இவரு இப்டி சொல்லலாம்? எல்லாம் நம்ம மக்க மேல இருக்கற அசட்டு நம்பிக்கதான். தமிழக மக்கள் இப்போவாவது முழிச்சுக்கனும். இனிமே ரஜினிகாந்த் பத்தி அரசியல் செய்தி வந்தா புறக்கணிக்கனும். அவர் அரசியலுக்கு நெசமாவே வந்தா அவரையே புறக்கணிக்கனும். இந்த சமயத்துல ஜெயகாந்தனுடைய "நடிகர்களின் சமுதாய பங்கு" பற்றிய கட்டுரைய பதிவு செய்தா ரொம்ப நல்லா இருக்கும். தேடிப் பார்க்கிறேன். இருந்தா பதிவு செய்யறேன்.

குசேலனில் இவர் உண்மையை சொல்லி இருக்கிறாராம். "இதற்கு முன் திரைப்படங்களில் பேசிய வசனமெல்லாம் ஒரு வசனகர்த்தாவோ இயக்குனரோ எழுதி கொடுத்து பேசினாராம்". ஏன் சார் அந்த மாதிரி வசனம் எழுதும் போது உங்க புத்தி எங்க போச்சு? உங்களுக்கு தமிழ் தெரியாதா? அப்போ தமிழ் மக்கள வெச்சு சம்பாதிக்கறத்துக்காக என்ன வேனா பேசுவீங்க. சுயபுத்தி இல்லாம காசு பாத்தா போதும் உங்களுக்கு. ஒரு பரபரப்ப உண்டாக்கனுன்னா பொது மேடையில "அவங்கள ஒதச்சா என்னன்னு" பேசுவீங்க. யாரு கண்டா? அது கூட யாராச்சும் எழுதி கொடுத்து பேசினேன்னு சொல்லி சுலபமா தப்பிக்கலாம். இந்த அறிக்கையும் ஒரு வேளை யாராச்சும் எழுதி கொடுத்துதான் வெளியிட்டு இருக்கிறாரோ என்னமோ? அடுத்த படம் "இயந்திரன்" வர்ற வரைக்கும் பொறுக்கனும். ஏன்னா இதுக்கான விளக்கம் அதுல தான் வரும். அப்புறம் அதுக்கு அடுத்த படத்துல "முன்னாடி படத்துல பேசினது ஒரு ரோபோ. அதுக்கு சொந்த புத்தி கிடையாது. அதுனால அத நம்பாதீங்க".. அப்டின்னு சொல்லுவார். என்ன ஒரே தில்லாலங்கடியா இருக்கு.

கடைசியா ஒரு வரி. ரஜினிகாந்த் பாணியில் சொல்ல வேண்டுமானால்:

இன்னும் தமிழ் மக்கள் இந்த நடிகரை நம்பினால், "தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது".

No comments: