Pages

உண்மை சொல்ல.. - பழைய எழுத்து - கவிதை (12)

நின் பாதம் நிழல்பட நான்
நித்தம் வேதம் போல் உன் பெயர்
நிலவு நிறம் காய
நிஜமாய் உன் பக்கத்தில் நான்.

உன் விரல் போடும் கோலம்
கலைய என் கனவு.

பூவாசம் என் சுவாசம் தொட
உன் சுவாசம் என் நெஞ்சைத்தொட
காதல் பூகம்பம்
அரங்கேற்றம்.

இரவு தொலைந்து இன்பராகம் பாட
இன்னமும் இன்னமும்... இன்னமும்
இரவு நாட

விட்டம் பார்த்து
விளங்காக் கதை பேசி
விடுகதையென்று கவிபாடி
பொய் பல புனைந்து
வராத வண்ணம் தீட்டி விளையாடி
என்ன இன்பம்! என்ன இன்பம்!

புரியாத புதிரொன்று
நகையாடி நிற்க
அதற்கு விடை சொல்ல விழைந்து

நின் கண் பார்த்து கண் பறித்து
கரம் பிடித்து நிழல் அணைத்து
உயிர் தேடி உள்ளம் வருடி

உண்மை சொல்ல உளம் உளறி
காதல் என்றேன்
அடியே...காதலென்றேன்

சுவை கொண்ட சுகம் சார்ந்து
அவை சேர்ந்ததேதும் இல்லையடி
இது அகம் வார்த்த அன்புக்காதலடி!

இது நான் எழுதி நான் ரசித்தவையில் ஒன்று. நான் இன்னும் கவிதை எழுதுவதற்கு காரணம் நானே என் ரசிகனாக இருப்பதால்தான்.

1 comment:

Gowri Shankar said...

மிகச்சரியாக சொன்னீர்கள். நானும் ஆங்கிலத்தில் கவிதை எழுத முயற்சித்தேன். மற்றவர்கள் நன்றாக இருக்கிறது என்று கூறினாலும், என்னுடைய படைப்புகளை என்னாலேயே ரசிக்க முடியவில்லை. அதனால் நிறுத்திவிட்டேன்.