Pages

வலம் இடம் மாறியதோ?

தனியே நடந்திருந்தேன்
தத்தளித்துத் தானிருந்தேன்
தனித்தடத்தில் நானாக
தங்கத்தடாகத்து மீனாக

கற்றை முடி ஒதுக்கும்
ஒற்றை விரல் அழகே
மொழி ஒன்று பேசடி
வழி என்ன கூறடி

என் அகவை எல்லாம்
உன் அகம் தேடினேன் போலும்
உன் வரவை அறிந்ததில்
என் அறிவை மறந்தேன் மேலும்

வலக்கை வேண்டும் இடக்கைக்கு
இடக்கை வேண்டும் வலக்கைக்கு
என் கைகள் என்னோடிருந்தது
இதுநாள் வரையிலும்

ஒருகை உன்னோடிருக்க
மறுகை தனிமையில்
வலம் இடம் மாறியதோ?
மனம் தடம் மாறியதோ?

1 comment:

Matangi Mawley said...

தனித்தடத்தில் நானாக
தங்கத்தடாகத்து மீனாக

very good lines...