Pages

எல்லாம் கோணல்

நான்மறை நல்கிய
நானுறை மனதில்
பேயுறைந்தது மேனோ?

ஆதியின் பாதி தின்று
மீதியின் மீதுறை
போதத்தின் பாதகம்
வேதத்தின் குற்றமோ?

ஓதுவான் ஒழுக்கம்
ஒழுகிலான் போது
ஓதியதும் எது?
ஒழுகியதும் எது?

மெய்யும் மெய்யில்
உய்யும் பொய்யில்
காணும் கானல்
எல்லாம் கோணல்

1 comment:

தேவன் said...

/// மெய்யும் மெய்யில்
உய்யும் பொய்யில்
காணும் கானல்
எல்லாம் கோணல் ///

எவ்வளவு அருமையான வரிகள் !
தங்களின் தனித்திறமை தெரிகிறது.