Pages

சிதறியவை...

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசேன்
உன்னை உள் வைத்து புறமெங்கு போவேன்?

மனமெங்கும் மழைக்காளான்
நிற்க. மழை நிற்க.

அகம்-புறம், அறிவு-மனம்,
மழையில் நனைந்த குளம் போல.

மழை வர பூமி, மதில் மேல் பூனை
மழை வரட்டும்.
மழை ஒரு வழியாக, மதிலிரு வழியாக.

ஒன்றோடொன்றொவ்வாது ஒருபொருட் பன்மொழி,
ஒவ்வும் பொருளிலா இரு மொழி இரட்டைக்கிளவி.
ஒவ்வும் பொருளிலா இரு மொழியும்,
ஒவ்வாதொருபொருட் பன்மொழியும்,
ஒரு மொழியே.

No comments: