Pages

பழைய எழுத்து

தனிமையில் இருக்கையில்
என் மயில் நினைவு
என் ஒருமையை ஒழிக்க
ஒரு மயில்

நித்தம் நீ இங்கு வரத்தேவையில்லை
என் நினைவுக்கு வந்தாலே போதுமடி

இடைவெளி விடாது இயங்கினாலும்
இடையிடையே உன் நினைவு வந்து
எனை இன்பப்படுத்தும்

நீ இல்லாத நேரங்கள்
ஒரு நொடி கழிக்க
ஒரு மணி யோசித்தேன்

எழுத்துக்கோர் அர்த்தம் கொண்டு பேசுவாய்
நீ மொழிகையில் என் மொழி ஊனமாகும்
தமிழில் இவ்வளவு தெரியாத அர்த்தங்களா?

காதல் அருவமாய் இருந்தாலும்
அதை வழிபடக் கற்றுக்கொண்டேன்

'காத்தல்'
எனக்கும் இறைவனுக்கும் பொதுவாகிப் போயிற்று

ஒவ்வொரு முறை உனைக் காணும் பொழுதும்
புதுமையாய்ப் புகழ் பாடக் கற்றுக் கொள்கிறேன்

No comments: