Pages

நெசமுன்னு நெனச்சிருந்தோமே... - கவிதை (2)



நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

நடந்து போன நாலு வீதி
நம்ம கத கூடி பேசும்
கடந்து போன காத்து கூட
நம்மோட வாசம் சொல்லும்

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

வாசமுள்ள பூவெல்லாம்
வசமாகும் நம்ம கிட்ட
வண்ணத்து பூச்சியெல்லாம்
வந்து நின்னு கடன் கேக்கும்

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

சேர்ந்து சமச்ச சோறும் குழம்பும்
அமிர்தமா மாறும்
உயிர்களெல்லாம் நம்ம கிட்ட
உயிர்வாழ வழி கேட்கும்

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

கூடி விளையாடி நம்ம
குழைந்ததை பார்த்தா
கொழந்த மனசு கேட்டு
கெழமெல்லாம் கேள்வி கேக்குமே

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

முத்தம் குடுக்க மூணு போட்டி போட்டு
முடிஞ்சதும் கொசுறு நான் கேட்க
அங்கமெல்லாம் தவிச்சு
அங்க இங்க எங்கயும் கேக்குமே

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

No comments: