தனிமையில் இருக்கையில்
என் மயில் நினைவு
என் ஒருமையை ஒழிக்க
ஒரு மயில்
நித்தம் நீ இங்கு வரத்தேவையில்லை
என் நினைவுக்கு வந்தாலே போதுமடி
இடைவெளி விடாது இயங்கினாலும்
இடையிடையே உன் நினைவு வந்து
எனை இன்பப்படுத்தும்
நீ இல்லாத நேரங்கள்
ஒரு நொடி கழிக்க
ஒரு மணி யோசித்தேன்
எழுத்துக்கோர் அர்த்தம் கொண்டு பேசுவாய்
நீ மொழிகையில் என் மொழி ஊனமாகும்
தமிழில் இவ்வளவு தெரியாத அர்த்தங்களா?
காதல் அருவமாய் இருந்தாலும்
அதை வழிபடக் கற்றுக்கொண்டேன்
'காத்தல்'
எனக்கும் இறைவனுக்கும் பொதுவாகிப் போயிற்று
ஒவ்வொரு முறை உனைக் காணும் பொழுதும்
புதுமையாய்ப் புகழ் பாடக் கற்றுக் கொள்கிறேன்
புதியது எதுவும்
நினைவென நகலென நிறைந்தது நகர்ந்தது
சரியென தவறென இருந்தது இறந்தது
உயிரென உடலென நினைந்தது மறந்தது
உறவென வரவென வருவது போவது
தருவன பெறுவன இருந்தது இருப்பது
செய்வன வருவன செய்தது வந்தது
புதிரென இருப்பதும் புதிரல்லவே
புதியது எதுவும் பழையதுவே
சரியென தவறென இருந்தது இறந்தது
உயிரென உடலென நினைந்தது மறந்தது
உறவென வரவென வருவது போவது
தருவன பெறுவன இருந்தது இருப்பது
செய்வன வருவன செய்தது வந்தது
புதிரென இருப்பதும் புதிரல்லவே
புதியது எதுவும் பழையதுவே
எல்லாம் கோணல்
நான்மறை நல்கிய
நானுறை மனதில்
பேயுறைந்தது மேனோ?
ஆதியின் பாதி தின்று
மீதியின் மீதுறை
போதத்தின் பாதகம்
வேதத்தின் குற்றமோ?
ஓதுவான் ஒழுக்கம்
ஒழுகிலான் போது
ஓதியதும் எது?
ஒழுகியதும் எது?
மெய்யும் மெய்யில்
உய்யும் பொய்யில்
காணும் கானல்
எல்லாம் கோணல்
நானுறை மனதில்
பேயுறைந்தது மேனோ?
ஆதியின் பாதி தின்று
மீதியின் மீதுறை
போதத்தின் பாதகம்
வேதத்தின் குற்றமோ?
ஓதுவான் ஒழுக்கம்
ஒழுகிலான் போது
ஓதியதும் எது?
ஒழுகியதும் எது?
மெய்யும் மெய்யில்
உய்யும் பொய்யில்
காணும் கானல்
எல்லாம் கோணல்
தண்ணீரில் எழுதியதோ?
மழையின் துளியின் இடையில்
வெளியின் துளையில்
வெயிலின் அலையில்
நுழைந்து கடக்க வேண்டுகையில்
இடையே இடையே
இடம் ஒன்று தேடி
தடையே இல்லா தடம் ஒன்று நாடி
விடையே இல்லா வினாக்களோடு
அலைந்து கொண்டிருக்கையில்
தனியே தனியே கூடிக் கூடி
தவித்து தவிர்த்து தகர்ந்து சேர்ந்து
தேடித் தேடித் தொலைந்து தவிக்கையில்
என்னில் உள்ளது காமம்
எண்ணம் கொண்டது பொருள்
உடலிருந்து சிந்தனை வரை
மனமிருந்து மானுடம் வரை
எத்தனையோ இருக்க
இவையில்லா நானும் நானல்ல
நானில்லா நானும் நானல்ல
தன்னில் உள்ளது
தண்ணீரில் எழுதியதோ?
வெளியின் துளையில்
வெயிலின் அலையில்
நுழைந்து கடக்க வேண்டுகையில்
இடையே இடையே
இடம் ஒன்று தேடி
தடையே இல்லா தடம் ஒன்று நாடி
விடையே இல்லா வினாக்களோடு
அலைந்து கொண்டிருக்கையில்
தனியே தனியே கூடிக் கூடி
தவித்து தவிர்த்து தகர்ந்து சேர்ந்து
தேடித் தேடித் தொலைந்து தவிக்கையில்
என்னில் உள்ளது காமம்
எண்ணம் கொண்டது பொருள்
உடலிருந்து சிந்தனை வரை
மனமிருந்து மானுடம் வரை
எத்தனையோ இருக்க
இவையில்லா நானும் நானல்ல
நானில்லா நானும் நானல்ல
தன்னில் உள்ளது
தண்ணீரில் எழுதியதோ?
அறியாமை
அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை
தர்மம் நியாயம் எல்லாம் பொய்
கடவுள் மனிதனின் படைப்பு
காதல் என்பது காமத்தின் பகல் வேஷம்
என்னிரு காதுகளுக்கும் எட்டு திக்கிருந்தும்
ஏகப்பட்டவை கேட்கும்
ஒளியேற்ற சொல்லப்பட்ட வார்த்தைகளாம்
இருளில் தொலைந்தன ஏனோ
நானே கற்பனை செய்து கொண்டேன்
என் நெஞ்சின் ஈரப்பசையில்
ஒட்டிக்கொண்டுவிட்டடதாக.
தர்மம் நியாயம் எல்லாம் பொய்
கடவுள் மனிதனின் படைப்பு
காதல் என்பது காமத்தின் பகல் வேஷம்
என்னிரு காதுகளுக்கும் எட்டு திக்கிருந்தும்
ஏகப்பட்டவை கேட்கும்
ஒளியேற்ற சொல்லப்பட்ட வார்த்தைகளாம்
இருளில் தொலைந்தன ஏனோ
நானே கற்பனை செய்து கொண்டேன்
என் நெஞ்சின் ஈரப்பசையில்
ஒட்டிக்கொண்டுவிட்டடதாக.
Subscribe to:
Posts (Atom)