Pages

நாங்க அப்டிதான்... - கவிதை (4)

தேர்தலுக்கு ஒரு தடவ உயிர்த்தெழுவோம்
சட்டசபையில ஏற்கனவே இருந்தவங்கள எடம் மாத்தி ஒக்காத்தி வெப்போம்
அவங்க திருந்தமாட்டாங்க....நாங்களுந்தான்...
நாங்க அப்டிதான்.

கஞ்சித் தொட்டி வெப்பாங்க
என்னமோ தங்கத் தொட்டி வெச்சா மாதிரி பேசுவாங்க...
ஆனா கொடி கட்டுவோம்...போஸ்டர் ஒட்டுவோம்
அந்த பசையில இருக்கற ஈரம் கூட எங்க வயித்துல இருக்காது
பரவாயில்ல நாங்க அப்டிதான்.

வெள்ளிய வெலக்கி விலைக்கு போட்டாச்சு
அங்கம் தங்கம் பாத்து தலமொற ஆச்சு
சோறு பொங்கி ஆறு மாசம் ஆக போவுது
ஆனா கரை வேட்டி கட்டுவோம்...கட்சி தலைவரு பொறந்தநாளக்கி முட்டாய் குடுப்போம்
நாங்க அப்டிதான்.

அண்டி படுக்க எடம் இருக்காது
ஆனா வண்டி கட்டி பிரச்சாரம் செய்வோம்
நாங்க அப்டிதான்.

கழக கண்மணிகளே...ரத்ததின் ரத்தங்களேன்னா போதும்
கரஞ்சு போயிடுவோம் நாங்க
ரத்த ஓட்டம் இருக்கான்னு தெரியாது
ஆனா கட்சி கூட்டம் விடமாட்டோம்
நாங்க அப்டிதான்.

ஒரு காலத்துல தாவரவாதி தான் நாங்களும்
கொஞ்ச கொஞ்சமா தீவிரவாதி ஆகறோம்
இதுக்கெல்லாம் யாரு காரணம்?
தெரியாதுங்க
நாங்க அப்டிதான்.

2 comments:

Barani said...

Romba Nalla irukku !! Kalakkiteenga..

Cheers,
Barani

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

@barani

thanks barani. you are welcome. I am trying very hard to write things that come up in mind...but hardly writing.

hope i will come back in sometime.
thanks again.